Wednesday, May 31, 2017

சுனாமி வீடியோ உரை-2



இந்த நிலையில், நில அதிர்ச்சிகளுக்கும் ,சுனாமிகளும்,புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,கண்டங்கள் எல்லாம் கண்டங்களை சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன்,தனித்த தனிப் பாறைத்த தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில்,பாறைத்த தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அதே போன்று,ஒரு பாறைத் தட்டுகளுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது ,சுனாமி உருவாகுவதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தை முதன் முதலில் முன் மொழிந்தவர ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.
ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.
அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
வேக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.
அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.
அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.
ஆனால் அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பப்னிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுயருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வாடா துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.
வேக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.
உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.
அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.
அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.
இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்ற ஒரு கருத்து ஆகும்.

குறிப்பாகக் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள்,நிகழ்ந்த இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்தனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கலானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அத்துடன் அண்டார்க்டிக் கண்டதுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,நம்பப் படுகிறது.
அதன் பிறகு,இந்த இரண்டு கண்டங்களும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வாடா கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது, இந்த இரண்டு கண்டங்களும்,ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ,அமைந்து இருக்கிறது.
எனவே ,இந்த இரண்டு கண்டங்களும் ,இரண்டு தனித் தனியான கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும்,இடையில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும்,அஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி,நாசாவைச் சேர்ந்த புவியியல் வலுனர்கள் ஒரு வரை பாதத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த வரை படத்திலும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில்,தெற்காசிய சுனாமி குறித்து, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வெளியிட்ட முதல் அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நாசா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாக,முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

No comments: