tag:blogger.com,1999:blog-58578942070777663862024-03-13T23:52:27.536-07:00continents are not drifting but risingScientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-73287630039824789812024-01-13T04:09:00.000-08:002024-01-13T04:09:28.221-08:00my research book-sct.G.Ponmudiவணக்கம்!
இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி குறித்து...
கழுகுப் பார்வையில் ஒரு முன்னோட்டம்.
கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகிறன்றன.
நிலத்தின் மேல் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான திருவப் பகுதிகளில் காணப் படுகிறது.
கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் காணப் படுகின்றன.
இந்தப் புதிர்களுக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக நான் மேற்கொண்ட ஆய்வில் புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன்.
புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல் தளங்களின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் பட்ட நிலையில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாத நிலையில்,இந்த கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியிலும் ஹைத்தி தீவிலும்,நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகள் ஏற்பட்டதற்கு நாசா போன்ற அமெரிக்காவின் முன்னணி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில்,இந்த இரண்டு இடங்களிலுமே உருவான நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும்,எரி மலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகக் கூடிய, சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளதால், நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்புக்கு, பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வ்வாறு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும் கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதும் ஆதாராப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் வட துருவப் பகுதியில் பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்களும், டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
இதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகளும் வெப்பமான மணற் பரப்பும் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருப்பதன் மூலம் பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிக மாக இருந்திருப்பதுடன், கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்து இருப்பதும், அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதுடன், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதும் அதனால்,துருவங்களில் பனிப்படலங்கள் உருவாகி, பசுமைக் காடுகள் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் ,பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரிய வகை நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த, கடல் பகுதியைக் கடக்க இயலாத குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களானது, மடகாஸ்கர் தீவிலும்,மத்திய தரைக் கடலிலில் உள்ள சிசிலி,சைப்ரஸ் ,கிரிட்டி,மால்டா ஆகிய தீவுகளில் காணப் படுவதன் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கும் நிலையில், இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால், சில லட்சம் ஆண்டுகளிலேயே கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் மூழ்கி விடும்.
எனவே பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
பகுதி ஒன்று
பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன?அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு காரணம் என்ன?
நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த, பனை மர உயரமுள்ள ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே , ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் டாக்டர் மைக்கேல் காபின் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன.
அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம், ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது சரியான விளக்கம் அல்ல.
பகுதி இரண்டு
கண்டங்கள் பற்றிய கருத்துக்கள் உருவான கதை.
பூமி பற்றிய மூன்றாவது முக்கிய கண்டு பிடிப்பு.
முதல் கண்டு பிடிப்பு. பூமி தாட்டையானது. இல்லை, பூமி ஒரு கோளம் - அரிஸ்டாட்டில்.
இரண்டாவது முக்கிய கண்டு பிடிப்பு.
சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்கள் எல்லாம் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
இல்லை,பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனையே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.- கோபர் நிக்கஸ் . பூமியின் மேற்பரப்பனாது பல சில்லுகளாக உடைந்து இருக்கிறது- புவியியல் வல்லுநர்கள்.
இல்லை, பூமியின் மேற்பரப்பானது ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கண்டு பிடிப்பு.
கண்டங்கள் பற்றிய கருத்துக்கள் உருவான கதை.
பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள்.
அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை.
ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல தனிமைத் தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு, குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார்.
அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை பல தீவுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விலங்கினங்களைக் கண்டு எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று வியப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டு...
குளோசெப் டெரிகிஸ் என்று அழைக்கப் படும் ஒரு தாவரத்தின் பாகங்கள் ஆப்பிரிக்க,தென் அமெரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார். பின்னர் அந்தக் கண்டத்தின் சில பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று நம்பினார்.
இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார்.
மாற்றாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித்த தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார்.
அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
அப்பொழுது கண்டங்களைச் சுற்றிலும், கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
000000000000000
ஒரே வரியில் உண்மையை வெளிப் படுத்தி இருக்கிறேன்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவு பகுதியிலும் அதே போன்று வட அமெரிக்க்கா மற்றும் தென் அமெரிக்க்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹய்த்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிக்கு அடிப்படை ஆதாரமில்லாத காரணத்தால் அமெரிக்காவின் முன்னணி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த பேரிடர்கள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
000000000000000
எரிமலை வெடிப்பே ...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் உண்மையான காரணம்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் ஏன் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை?
சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. அதே போன்று ஹைத்தி தீவானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை.
ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது.
அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது .
எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?
குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன.
அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதே போன்று தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை என்றும் அழைக்கப் படுகிறது.
இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை?
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது..
அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது.
எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கொட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது.
எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது.
அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது.
எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.
இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும்.
ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்து இருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரிபியன் தீவுக் கூட்டமானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது.
இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது .
எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும்.
அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும்.
ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும்.
அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது.
குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம்.
கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது.
இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது.
கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை
ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு,
உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம்.
பகுதி மூன்று
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம்.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.
ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும்.
அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஒரு தவளை கூட்டிய பஞ்சாயத்து
புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம். 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில் அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது. ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது. அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதி அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன் அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது.
அதன் அடிவயிற்றுப் பகுதியில் ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது.
மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர்.
தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது. தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு எப்படி சாத்தான் தவளைகள் வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது.
ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில் உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த பென்சில் வேனியாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் கரீபியன் தீவுக்கு தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது அந்த மிதவைத் தாவரங்களில் தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும் குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார்.
அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் டாக்டர் சூசம் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார்.
ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது கோண்டுவானாக் கண்டமானது லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது?
கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.
அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கசின் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.
பகுதி நான்கு
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்ததாகவும் பின்னர் கடல் தளங்களுடன் பிரிந்தது நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் பட்ட விளக்கமானது அடிப்படை ஆதாரம் இல்லாத கருத்து என்பது கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும், கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதன் அடிப்படையிலும், கண்டங்களும் கடல் தளமும் நிலையாக இருப்பது,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் டைனோசர்களின் புதை படிவங்களும் மரங்களின் புதை படிவங்களும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம் கடலானது பூமிக்குள் இருந்து வந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாக்க கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து, தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
பகுதி ஐந்து
பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசரின் புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று கரீபியன் தீவுக்கு கூட்டம் இருந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அத்துடன் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதும் தெளிவாகிறது.
அதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்து இருப்பதும் தெளிவாகிறது.அதே போன்று டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டம் தாழ்வாகவும் கடலின் பரப்பளவு குறைவாகவும் இருந்திருப்பதும் தெளிவாகிறது.பின்னர் கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறித்து இருப்பதும் அதனால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் கடல் மட்ட உயர்வால் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது
இந்த நிலையில் வட துருவப் பகுதியில் பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்களும், டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
இதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகளும் வெப்பமான மணற் பரப்பும் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் டைனோசர்களின் காலத்தில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருப்பதன் மூலம் பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிக மாக இருந்திருப்பதுடன், கடல் மட்டமும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்து இருப்பதும், அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதுடன், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதும் அதனால்,துருவங்களில் பனிப்படலங்கள் உருவாகி, பசுமைக் காடுகள் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம், தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதே போன்று, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள், இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதன் மூலம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது,நிதர்சனமான உண்மை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. ஆனாலும்,தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கமானது, தவறு என்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது, என்று தற்பொழுது, நம்பப் படுகிறது.
இந்த நிலையில், பனிப் பொழிவு ஏற்பட்ட கால கட்டத்திலேயே, கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது, புதைப் படிவ ஆதாரங்கள் மூலம், தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்ட உயர்வுக்குப் பனி உருகுவதே காரணம் என்ற விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது. குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளங்களானது, இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும். இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு உருவாகி வளரும்.
குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது, ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. இந்த நிலையில், கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால், அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.
இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டின் மேல் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.
இந்த நிலையில், கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிய டோகர் லேண்ட்.
இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் 400 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டோகர் லேண்ட் என்று அழைக்கப் படும் 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, நிலத்தின் பெரும்பகுதியானது, 18,000 ஆண்டுகளுக்கு மூழ்கத் தொடங்கியதாகவும், இறுதியாக 5500 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக மூழ்கி விட்டதாகவும், அந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தொல் பொருட்களின் தொண்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,வேல்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவித் தொல் பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய குகை.
ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்தியத் தரைக் கடலின், வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது. ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்திய படியே நுழைந்தார். ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்தக் குகைப் பாதையின் இறுதியில் வெளிச்சம் தெரிந்தது. நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில், ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் பதிக்கப் பட்டு இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குதிரை,மான்,காட்டெருமை, போன்ற விலங்கினங்களின் ஓவியங்கள் வரையப் பட்டு இருப்பதைக் கண்டார்.உடன் தொல் பொருள் துறை யினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பிறகு அந்தக் குகையைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ் தலைமயிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அந்தக் கடலடிக் குகையில் சில கற்கருவிகளும், கரித் துண்டுகளும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன் அந்தக் குகையின் சுவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மனிதக் கை அச்சுக்களும் பதிக்கப் பட்டு இருந்தது.
அந்தக் கை அச்சுக்கள், சுவற்றின் மேல் கையை வைத்த நிலையில், செஞ்சாந்து போன்ற களிமண் குழம்பை வாயிலிருந்து ஊதுவதால் உருவாக்கப் பட்டு இருந்தது. குகைச் சுவரில் இருந்த அந்த கை அச்சு வடிவங்கள், இருபத்தி ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, வேட்டைக் கலாச்சார மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது கார்பன் காலக் கணிப்பு ஆய்வில் தெரிய வந்தது.
ஆனால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த, குதிரை காட்டெருமை மான்களின் ஓவியங்கள், பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கற்கால மனிதர்களால் வரையப் பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அந்தக் குகையில், இரண்டு வெவ்வேறு கால கட்டத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது. அந்தக் குகையானது மிகவும் ஈரப் பதமாக இருந்தது.
அதனால் அந்தக் குகையில் இருந்த ஒரு கரித்துண்டு பஞ்சு போன்று மென்மையாகி இருந்தது. ஈரப் பதத்தால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த ஓவியங்களின் மேல் கையை வைத்தாலே அழிந்து விடும் நிலையில் இருந்தது.
எனவே தற்பொழுது அந்தக் குகைக்குள் பொது மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அத்துடன் குகையின் வாசல் கடற்படையினரால் பாதுக்காப்பாக மூடப் பட்டு பாதுக்காக்கப் படுகிறது.கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் குகை ஓவியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்தக் குகையானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பகுதியில் மேல் இருந்த குகையாக இருந்திருக்கிறது. பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நானூறு அடிவரை தாழ்வாக இருந்ததால், கடற்கரையானது அந்தக் குகையில் வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்திருக்கும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார்.
ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நிலம்.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடா மாகாணத்தின் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கும், பவள உயிரினங்களின் புதை படிவங்கள் மூலமாகவும், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும், ஒரே கால கட்டத்தில், நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால், சூரிய ஒளியின்றி இறந்து விடும்.
இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களைக் கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதை அறிய இயலும். அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும்.
இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில்,ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால் இறந்த, பவள உயிரிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில்,புளோரிடா பகுதியில் கடந்த ஐம்பதாயிரம் முதல் முன்பு தொடங்கி,பத்தாயிரம் ஆண்டு காலதுக்கு முன்பு வரையில், கடல் மட்டம் நூற்றி இருபது மீட்டர் வரை, தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையில் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்து கொண்டு இருக்கும் நீர், கடலில் கலந்ததாலேயே கடல் உருவாகி இருக்கின்றன. அத்துடன் சுடு நீர் ஊற்று நீர், இன்றும் கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருப்பதால், கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் பூமியின் வெப்ப நிலை குறைந்து துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அதன் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன. இதே போன்று பூமியின் உயிரின வரலாற்றில் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டு இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்தப் பேரழிவுகளுக்கும் கடல் மட்ட உயர்வும் கால நிலை மாற்றமுமே காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகிறது.
''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்''
வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது.
இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்' என்று அழைக்கப் படுகிறது. இந்த பெர்மா புரோஸ்ட் நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது.
குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை, விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாகக் கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர்.
அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது.
இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது.
அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது.
அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.
அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
மாறாக சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக ,பூமிக்குள் சுரக்கும் நீரானது ,புவியின் மேற் பரப்புக்கு தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைகிறது.அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன், அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஒரே காலத்தில் நடை பெற்று இருப்பதன் மூலம், பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு என்பது, ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார். இதே போன்று, கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.
எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.
கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் பாறையில் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு அடியில், நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும், தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது. எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின? சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.
அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது. இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது.
நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது. இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது.
இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,
கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது.
அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின. இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது.
இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும்.
எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.
உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும். அனால், உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம்,
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும். பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
தற்பொழுது, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அந்த அதிகப் படியான பனியானது கடலில் இருந்து வந்த நீரால் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு கடல் மட்டமானது, அதிக ஆழத்துடன் இருந்ததற்கு,அதிகப் படியான கடல் நீர் ஆவியானதே காரணம் என்றும், அதற்குப் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றமே காரணம், என்றும் டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,முன் ஒரு காலத்தில்,பூமியானது,சூரியனை சற்று நெருக்கமாக வலம் வந்ததாகவும்,அப்பொழுது பூமியின் வெப்ப நிலையானது அதிகரித்ததாகவும்,அதனால் கடல் நீரானது அதிக அளவில் ஆவியானதாகவும்,அதனால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வானதாகவும், டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு,பழைய படி,பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்ததாகவும்,அதனால் நிலத்தின் மேல் இருந்த பனியானது உருகி நீராகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை உயர்ந்ததாகவும்,ட்ராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆனால்,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.
ஏனென்றால்,பூமியானது,சூரியனை நெருங்கிச் சென்று சிறிய சுற்றுப் பாதையில் வலம் வந்தால்,கடலில் இருக்கும் நீரானது, ஆவியாகத் தொடங்கும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் பனியும், உருகி நீராகிக் கடலில் கலக்கும்.எனவே கடல் மட்டமானது அப்படியேதான் இருக்கும்.
அதே போன்று, பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் நீரானது பனியாகப் படியும் பொழுது,கடல் நீரும் ஆவியாகுவது நின்று விடும்.
எனவே, கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது. எனவே,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.
பனிப் பந்து பூமி.
கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.
அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பூமி முழுவதும் 1 முதல் 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு,பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர்.
அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பனிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும், அதனால் கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர். மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மில, வாயு கடலில் கலந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது, ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை.
ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளையும் முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .
பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை.
எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை.
வண்ணத்துப் பூச்சிகள் பறந்த கிரீன்லாந்து தீவு.
இதே போன்று கிரீன்லாந்து தீவிலும் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கிரீன்லாந்து தீவானது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு பனியால் மூடப் பட்டுள்ளது.இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்து தீவின் பனிப் படலத்தில் ஒரு கிலோ மீட்ட அளவுக்கு துளைத்து ஆய்வு செய்தது.அதாவது பனிப் படலங்களுக்கு அடியில் ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை புதைத்து வைக்க ஒரு திட்டத்தை தீட்டியது.
அப்பொழுது எடுக்கப் பட்டு ஆய்வகத்தில் வைக்கப் பட்டு இருந்த பனி குழாய்களை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் பதினைந்து அடி அளவுக்கு தாவரங்களின் இலைகள், கொடிகள் போன்ற பாகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனை ஆய்வு செய்த வெர்மாண்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரீவ் கிறிஸ்து கிரீன்லாந்து தீவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்காவின் கடலோர பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த நெதர் லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆப்பி செலூசிஸ் அதில் பல வகையான மரங்கள் தாவரங்கள் இருப்பதுடன் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதை கண்டு வியப்பு தெரிவித்து இருக்கிறார். பனி மிக விரைவில் பனை மரத்தை கருக்கி விடும் எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்டு கடல் தரைக்கு அடியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த பொழுதும் அதில் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்பொழுது பனியால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தின் கடலோர பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதில் பனைக் காடுகள் இருந்திருப்பதாகவும் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதை போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததாகவும் அதனை ஆய்வு செய்த கோதி பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்க் பெரோஸ் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளிலேயே அதிக அளவு வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரெகப் பகுதியில் இன்னும் அதிக அளவில் வெப்பம் நிலை இருக்க வேண்டுமே என்றும் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் யோசித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் சீனாவின் வுகாண் மற்றும் ஜெர்மனியின் நுர்ன்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை உயிரினஙகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைப் பகுதியில் வெப்ப நிலையானது மிகவும் கொடுமையாக இருந்ததாகவும் அதாவது ஐம்பது முதல் அறுபது டிகிரி வரை இருந்ததாகவும் அதேபோன்று கடல் பரப்பின் வெப்ப நிலையானது நாற்பது டிகிரி வரை றிந்ததாகவும் அதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் விலங்கினங்கள் வாழாத பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியை ''இறந்த பகுதி'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த பகுதியில் சிலவகை சிறிய வகி புள் பூண்டு புதர் செடிகளே வளர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துருவப் பகுதிகளானது தாவர மற்றும் விலங்கினங்களுக்கு தஞ்சமடையும் பகுதிகளாக இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வலீத் தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் இடப பெயர்ச்சி நடை பெற்று இருப்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது.
கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலையுடன் சதுப்பு நில காடுகளும் அதில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் உடல் வெப்பத்தை பாது காக்கக் கூடிய தகவமைப்பு இல்லாத தவளை மற்றும் முதலை பாம்பு போன்ற ஊர்வன வகை விலங்கினங்களும் டைனோசர் போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் பூமியெங்கும் சதுப்பு நில காடுகளே இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு சரியான விளக்கதைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கின்றனர்.
உதாரணமாக வட துருவப் பகுதியில் அமையானது இருக்கும் கிரீன்லாந்து தீவில் இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவானது அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் விளக்கம் கூறுகிறார்கள்.
இதே போன்று தற்பொழுது மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல் மரக் காடுகள் காணப் படுவதற்கும் அதில் சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்கும் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது தென் பகுதியில் இருந்த பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும் அதன் பிறகு வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது தற்பொழுது இருக்கும் மித வெப்ப மண்டலப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த விளக்கத்தின் படி ஆர்க்டிக் பகுதிக்குள் அமையானது இருக்கும் நிலப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது இருபது கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக ஆர்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
கிரீன்லாந்து தீவை ஒட்டி அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவில்,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவகே கூடிய அதி வெப்ப நிலையில் சூழலில் வாழக் கூடிய, சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய அலிகேட்டர் முதலை,கலாபாகஸ் தீவில் காணப் படுவதை போன்ற ராட்சத ஆமைகள் ,காண்டா மிருகம் போன்ற பிராண்டோ தீரி ,நீர் யானை போன்ற கோரி போடான்,பறக்கும் லீமர் வகை குரங்குகள்,மலைப் பாம்பு போன்ற பாம்புகள்,பன்றியின் இனவகையை சேர்ந்த டபீர் ஆகிய விலங்குகளின் புதை படிவங்களை கண்டு பிடிக்கப் பட்டது.
அத்துடன் இரண்டு இணவகை குரங்குகள் மற்றும் ஆறடி உயரமுள்ள தாவர உண்ணி ராட்சத பறவையின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் கொலராடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜேலின் எபர்லி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியானது சதுப்பு நிலக் காடாக இருந்ததாக விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ராட்சத ஆமைகள் போன்ற விலங்குகள் எப்படி இந்த பனித் தீவில் வாழ்ந்தது என்று தனது வியப்பையும் தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் கடந்த ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லிஸ்மெர் தீவானது கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,கடுங் குளிர் நிலவக் கூடிய ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு உள்ளேயே இருக்கிறது.
ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் அதே போன்று ஆண்டில் நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும் நீடிக்கிறது. தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து இருக்க இயலாது.
எனவே எல்லிஸ்மெர் தீவில் காடுகளோ அதில் விலக்கினங்களோ வாழ்ந்து இருக்க இயலாது.இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவில் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத ஒட்டகத்தின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.குறிப்பாக அந்த ஒட்டகமானது தற்பொழுது காணப் படும் ஒட்டகத்தை விட முப்பது சதவீதம் பெரிய அளவில் இருந்ததாக அதன் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் எல்லிஸ்மெர் தீவை ஒட்டி அமைந்து இருக்கக் கூடிய ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் பல மரங்களின் அடிப் பகுதிகள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில் அந்த இடமானது முன்பு ஒரு காடாக இருந்ததாக ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அந்த மரங்கள் நேற்றுதான் விழுந்தது போன்று புதிதாக இருப்பதாகவும் அதனை விறகு போல பிளக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் அந்த ஆராய்ச்சி குழுவினர் அந்த மரங்களை எரித்து தேநீரும் தயாரித்தனர். இதன் மூலம் பூமி குளிர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமும் உயர்ந்து நிலத்தை மூழ்கடித்து இருக்கிறது.இருக்கிறது. அதே போன்று, துருவப் பகுதிகளில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவும் ஏற்பட்டு பனி யானைகளை அழித்து இருக்கிறது.
எனவே, கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பதால், வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் உருவானதற்குக் கடல் மட்டம் உயர்ந்ததால், கடலின் பரப்பளவு அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து, குளிர்ச்சி ஏற்பட்டதே காரணம் என்பதும் நிரூபணமாகிறது. எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருகிக் கடலில் கலந்ததாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் தவறு.
பகுதி ஆறு
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
கண்டங்களின் மேல் பரவலக்காகி கடல் உயிரினங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து கொண்டு இருப்பன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.உயர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் கடல் மட்டமும் கண்டங்களும் எப்பொழுதும் இதே போன்று இருப்பதாக அறிவியல் உலகில் சில நிகழ்வுகளுக்கு சரியான விளக்கத்தை ஆராய்ச்சியாளர்களால் புரிந்து கொள்ள இயல வில்லை.
ராட்சத உப்புப் படிவப் புதிர்.
குறிப்பாக, மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதற்கான காரணத்தை அறிய, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம்.
இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள்.
அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள்.
இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன .
இது போன்று பல முறை கண்டங்களின் மேல் கடல் நீர் வந்து சென்றதால், நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
மத்திய தரைக்கு கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி
இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு ராச்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது.
சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும்.
ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர்.
பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.
ஆனாலும் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது.
அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும்
அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
பவளத் திட்டுகள்
பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன.
அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன.
அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன.
இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன.
இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன.
இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன.
பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள் .
ரிசல்யூசன் குயாட் பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.
இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது.
இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது.. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன.
கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள்.
வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது.
இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன.
அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. .
அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது.
ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள்
ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள்
இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி?
வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது.
குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது.
இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது.
ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.
அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.
370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின.
அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன.
பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது.
பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன.
பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக்காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக்காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. எடியாக்காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதன் அடிப்படையில் நான், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாகவும் விளக்கம் கூறினேன்.
ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களின் மேல் உருவான ,இரும்புப் படிவுகளுக்கு பனிப் பந்து பூமி விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதல் பனிப் பந்து பூமி முதலில் எடியாக்காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கடினமான ஓடுகளைச் சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.
ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எடியாக்காரா காலத்திற்கு முன்பு, அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு, பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.
இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது.
பனிப் பந்து பூமி பல முறை ஏற்பட்டு இருக்கிறது?! வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் படிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பனியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரென்று உயர்ந்து கண்டங்களின் மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் படியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது.
அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர். அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் படிவுகளுக்கு, கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு, பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர்.
உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது, கண்டங்களின் மேலே கடல் வருகிறது.
அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாகுகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது, படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.இவ்வாறு பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதால், பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது. அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.அதனால் கிராண்ட் கன்யன் போன்ற பிளவுப் பள்ளத் தாக்குகள் உருவாகுகின்றன.
சுண்ணாம்பு மலை உருவானது எப்படி
குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் ஒரு ''சுண்ணாம்பு மலை'' உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த நண்டு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு, அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள், கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ?
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்கவில்லை.
காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது. குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மாட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது. எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், கஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு.
அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.
எப்படி உருவானது கல் மரப் பூங்கா?
டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன.
இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது.
தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர்.
அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது.
இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது.
இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே போன்று,கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
பகுதி ஏழு
கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததற்கும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததற்கு ஆதாரங்கள்.
தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன?
ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ஆராய்ச்சி
ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக்;கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது.
அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின.அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார்.
அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார்.
குறிப்பாக, ஆசியக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் குரங்கு,புலி,காண்டா மிருகம் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,அவர் விலங்கினங்களானது, ஓரிடத்தில்தோன்றி மற்ற பகுதிகளுக்குப் பரவி இருப்பதைப் புரிந்து கொண்டார்.
அதன் அடிப்படையில் ,இந்தோனேசியாப் பகுதியில், முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் அந்தத் தீவுகளுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையும்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதையும், வாலஸ் யூகித்து அறிந்தார்.
ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,கோடிக் கணக்கான ஆண்டுகளாக,அந்தத் தீவுகள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதையும், வாலஸ் புரிந்து கொண்டார்.
வாலஸ் கவனித்த ,வெவ்வேறு வகை விலங்கினங்கள் காணப் படும் கடல் பகுதியானது ''வாலஸ் கோடு'' என்று அழைக்கப் படுகிறது.ஆனாலும்,இந்தத் தீவுகள் எல்லாம், அதிக பட்சம் நூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
வாலசைப் போன்றே ,சார்லஸ் டார்வினும், ஒரு பயணத்தை மேற்கொண்டார்.அப்பொழுது,கண்டங்களுக்கு அருகில் அமைந்து இருக்கும் தீவுகளில் காணப் பட்ட விலங்கினங்களானது, கண்டங்களில் காணப் பட்ட விலங்கினங்களில் இருந்து, சிறிது மாறுபட்டு இருப்பதைக் கவனித்தார்.
குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் கலாபாகஸ் தீவுகளில்,காணப் பட்ட ஆமைகளின் உடலமைப்பானது, தீவுக்குத் தீவு மாறுபட்டு இருப்பதைக் கவனித்தார்.அதே போன்று,அந்தத் தீவுகளில் காணப் பட்ட,சிட்டுகளின் அலகுகளும்,அவைகளின் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப மாறு பட்டு இருப்பதைக் கவனித்தார்.
அதன் அடிப்படையில்,விலங்கினங்கள்எல்லாம் ஒரு பொது மூதாதையில் இருந்து தோன்றி, காலப் போக்கில்,வெவ்வேறு வாழிடச் சூழலுக்கு ஏற்ப,மாறி இருக்கின்றன, என்பதைப் புரிந்து கொண்டார்.அதன் பிறகே, தீவுகளுக்கு விலங்கினங்கள் எவ்வாறு சென்றன என்ற கேள்வி,அதிக முக்கியத்துவம் பெற்றது.
உயிரினங்கள் எவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது, என்பது குறித்து ஆராயும் அறிவியல் பாடப் பிரிவுக்குப் பயோஜியோகிராபி என்று பெயர்.பத்தொன்பதாம் நூற்றாண்டில்,பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட இளம் ஆராய்ச்சியாளரான டார்வின்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்த பொழுது,அங்குள்ள ஆறுகளிலும் குட்டைகளிலும்,ஏற்கனவே அவர் ஐரோப்பாக் கண்டத்தில் பார்த்த நன்னீர் உயிரினங்கள் காணப் படுவதைக் கண்டு எப்படி இந்த உயிரினங்கள் பல்லாயிரம் மைல் கடல் பகுதியைக் கடந்து இந்தக் கண்டத்துக்கு வந்திருக்க முடியும் என்று வியப்படைந்தார்.
குறிப்பாக அவர் குளம் குட்டைகளில் இருக்கும் நத்தைகளானது, பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
இது போன்று, பெருங் கடல் பகுதியைத் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் தற்செயலாகக் கடந்தன என்று கூறப் படும் விளக்கமானது, 'பரவல் முறை' (dispersal) என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது.இது போன்ற விளக்கமானது 'நிலப் பிரிவு முறை' ( vicariance ) என்று அழைக்கப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியில் ஒரே ஒரு பெரிய கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது.அந்தப் பெருங் கண்டமானது பாஞ்சியா என்று அழைக்கப் படுகிறது.
அதன் பிறகு, பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்து,லாரேசியா மற்றும் கோண்டுவாணா என இரண்டு கண்டங்களாக உருவாகி,வடக்கு தெற்காக, நகர்ந்ததாக நம்பப் படுகிறது.அதே போன்று,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்து, கிழக்கு மேற்காக நகர்ந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் பகுதிக் கோண்டுவாணாவும்,பல பகுதிகளாகப் பிரிந்து, வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்தது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
அதன் பிறகு,மரபணு மற்றும் கார்பன் காலக் கணிப்பு பற்றிய, அறிவியல் பிரிவுகளின், வளர்ச்சிக்குப் பிறகு,மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும்,காணப் படும்,பல தாவர வகைகளும்,விலங்கினங்களும்,கண்டங்கள் பிரிந்ததாக நம்பப் படும் காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
டார்வின் ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது....
உதாரணமாகத் தென் பகுதிக் கண்டங்களில்,புரேட்டியேசியே;என்று அழைக்கப் படும், தாவர வகைகள் ,காணப் படுவதற்கு, முதலில்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில் ( vicariance ) விளக்கம் கூறப் பட்டது.
ஆனால், தற்பொழுது மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வில்,அந்தத் தாவர வகைகளானது,கண்டங்கள் மற்றும் தீவுகள் பிரிந்ததாக நம்பப் பட்ட காலத்துக்குப் பிறகு,பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே, தற்பொழுது,புரேட்டியேசியே வகைத் தாவரங்களானது, தென் அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீவில் காணப் படுவதற்கு,அந்தத் தாவரத்தின் விதைகளானது,காற்று மூலமாக,மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் (dispersal) என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால்,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படும்,மாக்டேமியா என்று அழைக்கப் படும், புரேட்டியேசியே வகைத் தாவர வகையானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது,அந்தக் கண்டங்கள் பிரிந்த ,ஐந்து கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பதைத் தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
ஆனால்,மாக்டேமியாவின் விதைகளானது,கல்லைப் போன்றுகனமாக இருப்பதால்,காற்றின் மூலமாகவும்,கடலின் வழியாகவும், ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்க முடியாது என்று,இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,ஆஸ்திரேலியாவின் தாவரவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ''இதனை விளக்குவதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது'' என்றும் டாக்டர் பீட்டர் வெஸ்டன் தெரிவித்து இருக்கிறார்.
எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன?
லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார்.
அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.
அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும்.
எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன. மழைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.
சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவதிற்கு ஓட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது.
பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது.அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது.
தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.
கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால் காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும்.
எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரெட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் தனி வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன.
உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது.இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் தரை வழித் தொடர்பு வழியாக மண் புழுக்கள் எரிமலைத் தீவுகளை அடைந்திருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் உள்ள கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் மண் புழுவினம் காணப் படுகிறது.கெர்கூலியன் தீவானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்து இருக்கும் எரிமலையின் உச்சிப் பகுதி ஆகும்.
இந்த நிலையில் கெர்கூலியன் தீவு எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர்,கெர்கூலியன் தீவு அமைந்து இருக்கும் கடலடிப் பீடபூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளைச் சேகரித்து அதன் தொன்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகள் ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.
அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அந்தக் குழுவினர் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் டாக்டர் மைக்கேல் காபின், தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்ததாகத் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் அந்தக் கடலடிப் பீட பூமியானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியிலும் கூட கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடித் தரையில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளிலும் கூட இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.
இந்தக் கண்டு பிடிப்பனது , ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதும், அதன் காரணமாகக் கெர்கூலியன் கடலடிப் பீட பூமிக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே அந்தத் தரை வழித் தொடர்பு வழியாகவே மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெர்கூலியன் பீட பூமிப் பகுதிக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.
அதன் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் அந்தப் பீட பூமியானது கடலுக்குள் மூழ்கிய பொழுது, மண் புழுக்கள் தற்பொழுது கடல் மட்டத்துக்கு மேலாக தீவாக இருக்கும் எரிமலையின் மேற்பகுதிக்கு வந்து இருக்கின்றன. இடைப் பட்ட காலத்தில் மைக்ரோஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் பரிணாம மாற்றத்தால் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம் என்று அழைக்கப் படும் புதிய இன வகையாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கிறது. இதே போன்று ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது இருந்த தரைவழித் தொடர்பு வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற எரிமலைத் தீவுகளுக்கும் வந்த மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் காலப் போக்கில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருக்கின்றன.
தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி?
ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.
அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.
எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது
. கடற்பசு
கடற்பசு,கடல் மட்டம்,மற்றும் கால நிலை மாற்றம். கடல் பசு என்று அழைக்கப் படும் பாலூட்டி விலங்கினம்,கடற் கரையோரத்தில் ஏழு அடி ஆழத்தில் உள்ள கடல் தரையில் வளர்ந்து இருக்கும் புற்களை உண்டு வாழும் ஒரு சாதுவான விலங்கு. குறிப்பாகக் கடற்பசுக்கள் , வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதிக் கடல் பகுதியில் வாழ்கின்றன.கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் கடற் பசுக்கள் கடல் நீரைக் குடிப்பதில்லை,ஆறு மற்றும் குளத்தில் உள்ள நல்ல நீரையே குடிக்கின்றன.
அதே போன்று கடற் பசுக்கள் காற்றை சுவாசிக்கவும் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நீர்பரப்புக்கு மேல் மூக்கைத் திறந்து காற்றை சுவாகிக்கும்.நீருக்கு அடியில் சென்றதும் மூடி போன்ற தசையினால் மூக்கை மூடிக் கொள்ளும். அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் கடற் பசுவால் நீருக்குள் சுவாசிக்காமல் தாக்குப் பிடிக்க வல்லது.
கடற் பசுக்களின் உடற் செயலியல் மந்தமானது என்பதால் கடற் பசுக்கள் மெதுவாகவே இயங்கக் கூடியது.ஒரு நாளைக்க எட்டு மணி நேரம் புற்களை மேயும்.ஒரு நாளைக்கு நாற்பது கிலோ எடையுள்ள புற்களை உண்கின்றன.
கடற் பசுவில் இரண்டு இனங்கள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டோகோங் என்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானாட்டி என்றும் அழைக்கப் படுகிறது.
டோகோங் இனத்தில் ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் திமிங்கிலம் அளவுள்ள கடற் பசுக்கள் ,பசிபிக் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன,தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது. டோகோங் இனத்தில் ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் கடற் பசுக்களின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் ஸ்விட்சர் லாந்து பகுதிகளில் டோகாங் வகை கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய கடற் பசுக்களின் புதை படிவங்கள் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம்,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டம் அமைந்து இருக்கும் அட்ச ரேகைப் பகுதியில் கூட, பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது புலனாகிறது.
அதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டதுக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது. அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையானது என்பதுடன், அந்தக் கடற் பசுக்கள் சிறிய அளவிலான தொடை எலும்புடன் வாழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது.அதனால் புல் தரைகள் காலியாக இருந்தது.அந்தக் காலத்தில் மரங்களில் பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த, ஒரு மூஞ்சூறு வகை விலங்கினமானது,தரையில் இறங்கி தாவரங்களை உண்டு வாழ ஆரம்பித்ததுடன்,பல வகையான வாழிடங்களிலும் வாழ ஆரம்பித்ததால் பல தகவமைப்புகளுடன் பல வகை பாலூட்டி விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றின.
அப்பொழுது தரைப் பகுதியில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஒரு விலங்கினம் ,ஆறு குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அடியில் இருந்த தாவரங்களை உண்டு வாழும் வாழ்க்கை வாழ்ந்ததில், கால்களை நடக்கப் பயன் படுத்துவதற்குப் பதிலாக உந்தி உந்தி நீந்தவும் நீர்ப் பரப்புக்கு மேலே எம்பவும் பயன் படுத்தியத்தில், காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகள் வளர்ந்து கடற் பசுவினம் தோன்றியது.
கடற்பசுவின் மூததையானது யானை,திமிங்கிலம்,மற்றும் ஹை ராக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு கொறித்துண்ணி விலங்கினத்தின் நெருங்கிய சொந்தம். எனவே கடற் பசுவின் தொன்மையான புதை படிவங்கள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது.
அத்துடன் மானாட்டி வகைக் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவில் குறிப்பாக புளோரிடா பகுதியிலும் கரீபியன் தீவுகளிலும் காணப் படுவதால்,மானாட்டி வகைக் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அட்லாண்டிக் கடலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, அமெரிக்கக் கண்டங்களை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில்,ஒரு கடற் பசுவின் தலைப் பகுதியின் புதை படிவங்களை ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார்.
தொல் விலங்கியல் வல்லுனர்கள் தொன்மையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்ற எதிர் பார்ப்புக்கு மாறாக இந்தக் கண்டு பிடிப்பு இருந்தது.
அப்படியென்றால் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அதாவது புதிய உலகம் என்று அழைக்கப் படும்,அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், அட்லாண்டிக் கடலில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி பயணம் செய்து.ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங்கின் எலும்பு போன்ற புதை படிவங்களுடன்,காண்டா மிருகத்தின் புதை படிவத்தையும்,டாக்டர்,டாரில் டொமினிக் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் முக்கியமாக காண்டா மிருகமானது நீரில் நீந்த இயலாத விலங்கு. எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே ஜமைக்கா தீவில் டாக்டர் டாரில் டொமினிக், நாலு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, கடற் பசுவின் எலும்புப் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார். பிசோசைரன் என்று பெயரிடப் பட்ட அந்த விலங்கானது, நன்கு வளர்ந்த கால்களுடன் இருந்தது.
அத்துடன் அந்த விலங்கானது நீர் வாழ் கடற் பசுவுக்கும் நிலத்தில் வாழ்ந்த நடக்கும் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்றும் தெரிவித்து உள்ளார். குறிப்பாக நீர் யானையானது பகலில் நீர் நிலைகளில் நீருக்கு அடியில் தாவரங்களை உண்டும், இரவில் தரைக்கு வந்து தாவரங்களை உண்டும் வாழ்கிறது.அதே போன்று ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட பிசோசைரன் விலங்கும் நீர் யானையைப் போலவே, நீரிலும் நிலத்திலும் வாழ்ந்தது என்று டாக்டர் டாரில் டொமினிக் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள டுனீசியாவில்,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் உட் செவிப் பகுதியில் காணப் படும் எலும்பின் புதை படிவங்களை,டாக்டர் ஜூலியட் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார். குறிப்பாகக் கடற் பசுவின் உட்செவிப் பகுதி எலும்பானது தனித் தன்மையுடன் இருக்கும் என்பதால்,அதனை ஆய்வு செய்த டாக்டர் ஜூலியட் பினாய்ட்,அந்த விலங்கு ஒரு கடற் பசுவின் எலும்பு என்றும்,அந்த விலங்குக்கு,சாம்பி கடல் பசு என்று பெயர் சூட்டினார்.
அத்துடன் அந்த காதுப் பகுதி எலும்பமைப்பின் படி, அந்த விலங்கானது நீரடி வாழ்க்கைக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று இருந்தது என்றும் டாக்டர் ஜூலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார். முக்கியமாக டுனீசியாவில் வாழ்ந்த விலங்கின் எலும்பு அமைப்பானது மிகவும் தொன்மையானது என்றும்,அந்த விலங்கின் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடற் பசுவானது, ஆப்பிரிக்கப் பகுதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவுக்கு நடக்கும் கடற் பசுக்களே சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு ஒரே காலத்தில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு பக்கமும் நடக்கும் கடற் பசுக்கள் இருந்திருப்பது புதிராக இருக்கிறது. இதன் மூலம் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களுக்கு நடக்கும் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் மாநாட்டி வகைக் கடற் பசுக்கள் காணப் படுவதன் மூலமும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
இகுவானா உடும்புகள் எப்படி தீவுகளுக்குச் சென்றன?
தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், இகுவானா என்று அழைக்கப் படும் பச்சை நிற உடும்புகளின் வம்சாவளிகளானது,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், ஒன்றுக் கொன்று தொடர்பே இல்லாத வகையில், அமைந்து இருக்கும்,தீவுகளில் காணப் படுவது, உயிரியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், கலாபகாஸ் தீவில் வந்திறங்கிய டார்வின்,அந்தத் தீவுகளில், இருந்த ஆமைகள்,தீவுக்குத் தீவு வேறுபட்டு இருப்பதைக் கண்டார்.
டார்வினை வரவேற்ற கலாபாகஸ் தீவின் கவர்னர், 'ஒரு ஆமையின் ஓட்டின் வடிவத்தைக் கொண்டே அந்த ஆமையானது இந்தத் தீவை சேர்ந்தது' என்று கண்டு பிடித்து விடுவோம் என்று கூறினார்.
குறிப்பாக, அதிக செழிப்புடன் ,குறைந்த உயரத்திலேயே தாவர வகைகள் இருந்த தீவில், இருந்த ஆமைகளின் கால்களும் கழுத்தும் குட்டையாக இருந்தன,ஆனால்,வறண்ட சூழலுடன்,அதிக உயரத்தில் தாவர வகைகள் இருந்த தீவில் இருந்த ஆமைகளின் கால்களும்,கழுத்தும் நீண்டு இருந்தன.
அந்த ஆமைகள் எல்லாம் ஒரே பொது மூதாதையின் வழித் தோன்றல்கள் என்றும், தீவுகளின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு பெற்றவைகள் என்பதைப் புரிந்து கொண்ட பொழுதுதான், அவருக்கு விலங்கினங்கள் எல்லாம், ஒரு பொது மூதாதையில் இருந்து,காலப் போக்கில், சூழ் நிலைக்கு ஏற்ப, பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனாலும், அந்த கலாபகாஸ் தீவில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கலாபகாஸ் தீவில்,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளும் காணப் படுகின்றன. ராட்சத ஆமை மற்றும் இகுவானாக்கள் எல்லாம் தரையில் வாழக் கூடிய விலங்கினங்கள். எனவே, எப்படி இந்த விலங்கினங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று டார்வின் வியந்தார்.
கலாபகாஸ் தீவு ஆமையின் மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற, சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர். கலாபகாஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி, தற்செயலாகக் கலாபகாஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம், என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில், இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, காலாபகாஸ் தீவை அடைந்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. குறிப்பாக, ராட்சத ஆமைகளின் உடலில் அதிக அளவில் கொழுப்பும்,நீரும் இருப்பதால்,அந்த ஆமைகளானது,பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது. இதே போன்று, கலாபகாஸ் தீவில் 'நேசோரைசோமிஸ் டார்வினி' என்று பெயர் சூட்டப் பட்ட, எலியினம் வாழ்ந்திருப்பது, புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது, அந்த எலி இனம் அழிந்து விட்டாலும், நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன.
ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது, சிறிய அளவுள்ள எலியின் உடலில், கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால், எலிகளால் பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க இயலாது.
இந்த நிலையில் , தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கலாபகாஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கலாபகாஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்ற கேள்வி எழுந்தது.
தற்பொழுது கலாபகாஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மரபணு ஆய்வில், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள், முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும், செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும், குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆமைகளின் கடல் பயணத்துக்குக் கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் 'ஹிங்கிபேக்' ஆமையின் வம்சாவளி, என்பது தெரிய வந்துள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில், பல மாதங்கள் தத்தளித்த படி, மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இதே போன்று, கலாபகாஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது. கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும்.
குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும்.
இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது.ஏனென்றால் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கும், மயிர்த் தோல், ஊர்வன வகை விலங்கினங்களுக்கு இல்லை. தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவைப்படுகிறது. கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.
ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது. மற்றொன்று, கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது. கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு, மூக்குக்கு அருகில்,விசேஷச் சுரப்பிகள் இருக்கின்றன. கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும்.
கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன. அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து, உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன. சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து, உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன.
அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும், இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும். குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாகச் செயல் பட இயலாது.
இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. இகுவானா மழை- கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன.
அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின. அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின.இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது.
இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்?
இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை, ஆராய்ச்சியாளர்கள், மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.
ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது, அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவிள் வாழும், தரை வாழ் இகுவனாக்களில் இருந்து, பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர்.
அத்துடன், அந்த சமதளப் பரப்பின் மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர்.
அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் பாலம் போன்று இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல், விலங்குகள் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது. முக்கியமாகப் ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது. இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும், கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும் பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது.
பகுதி எட்டு
கண்டங்களுக்கு இடையில் காடுகாலுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள்.
மூதாதை பாலூட்டி ''புரோட்டோ அங்குலேட்டம் டோனா''
தென் பகுதிக் கண்டங்களில் காணப் படும் மூதாதை பாலூட்டி ''புரோட்டோ அங்குலேட்டம் டோனா'' டைனோசர்கள் காலத்தில் கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருக்கின்றன. தமிழகத்தில் ஆசிய வகை டைனோசர் ட்ரூடோண்ட் லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில் இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே லேட் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதன் அடிப்படையிலும் கூட டைனோசர்கள் காலத்தில் இருந்தே கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே நிலையாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
பிளேட் டெக்டானிக் தியரியின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா, இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்களானது ,வட பகுதிக் கண்டங்களுடன், நிலத் தொடர்பு இன்றி இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக் காலத்தில் வட அமெரிக்காவில் பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அப்குதிக் கண்டங்களான தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களி காணப் படுவதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில், கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி ''பாந்த லாசா'' என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும்,இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே, ஆப்பிரிக்கக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று, இந்தியக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது,டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில்,தென் அமெரிக்கா,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய நிலப் பகுதிகளானது, வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஸ்டோனி புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுனரான டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒப்பாய்வில்,வட அமெரிக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்ற விலங்கே தற்போதுள்ள எல்லா பாலூட்டி வகை விலங்கினங்களின் பொது மூதாதை என்று தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் அந்த விலங்கானது நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும் டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது, வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு ,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி அவார்கள்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர் பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த, பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் பகுதிக் கண்டங்களான, தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.
ரிப்சாலிஸ் புதிர்,
ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் கள்ளித் தாவரமானது எப்படி அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு பரவியது என்பது, அறிவியல் உலகில் இன்று வரை விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது.
கள்ளித் தாவரத்தின் தாயகம் அமெரிக்கா. கள்ளித் தாவரக் குடும்பத்தின் இன வகைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப் படுகிறது அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் வட பகுதியில் இருக்கும் கனடாவின் தென் பகுதி வரை பரவி இருக்கிறது.
கள்ளித் தாவரமானது, பூக்களின் மகரந்தங்கள் மூலம், காற்றின் மூலமாகப் பரவினாலும்கூட, பெரும் பாலும் பூச்சிகள்,விலங்குகள் மற்றும் பறவைகள் மூலமாகவே பரவுகிறது. அதன் காரணமாகவே கள்ளியின் இனவகைகளானது, அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே பரவி இருக்கிறது.
ஆனால் கள்ளிக் குடும்பத்தில், மரங்களின் மேல் படர்ந்து வாழும், ரிப்சாலிஸ் என்று அழைக்கப் படும் ,ஒரு இனம் மட்டும், விநோதமாக,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும், இலங்கைத் தீவிலும் காணப் படுகிறது. எப்படி இந்தக் கள்ளித் தாவரமானது,அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும், மடகாஸ்கர் தீவுக்கும், இலங்கைத் தீவுக்கும், பரவியது? என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
பொருந்தாமல் போன கோண்டுவாணா விளக்கம். இது போன்று ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் பகுதிக் கண்டங்களில் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்கள்,எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும்,அதன் பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில், மரபணு வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில்,கள்ளிக் குடும்பமானது,மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் கள்ளிக் குடும்பத் தாவரங்கள் காணப் படுவதற்கு கோண்டுவானா விளக்கம் பொருந்தாது. முக்கியமாக கள்ளித் தாவரத்தின் புதை படிவங்களும் ஐந்து கோடி ஆண்டுகளக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,காணப் படவில்லை,ஏனென்றால் கள்ளிக் குடும்பமானது புவியியல் காலகட்டத்தில்,மிகவும் சமீபத்தில் தோன்றிய தாவரமாகும்.
இந்த நிலையில்,நீண்ட தொலைவு பறந்து செல்லும்,பறவைகள் மூலம், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ரிப்சாலிஸ் கள்ளியானது,ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப பரவிய பிறகு,மற்ற பறவைகள் மூலம்,மடகாஸ்கர் மற்றும் இலங்கைத் தீவுகளுக்குப் பரவி இருக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,அந்தக் கண்டத்தில் எச்சமிட்டதால், ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படுகிறது.
ஆனால் அமெரிக்கக் கண்டத்தில், அந்தக் கள்ளிகளின் பழங்களை உண்ட பறவைகளானது,மூவாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்கும் வரை எச்சமிடாமல்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வந்து எச்சமிட்டது என்று கூறப் படும் விளக்கமானது இயற்கைக்கு முரணான விளக்கம்.
இதே போன்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால்,கப்பல்களின் சரக்குகள் மூலம் , ரிப்சாலிஸ் கள்ளியானது, அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படும் ரிப்சாலிஸ் கள்ளிகளானது வெவ்வேறு இனவகைகளைச் சேர்ந்தது.
இது போன்று ஒரு இனத்தில் இருந்து புதிய இனவகைகள் தோன்ற லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே ஐரோப்பியர்களின் கடல் பயணங்கள் மூலமாக, ரிப்சாலிஸ் கள்ளிகள், அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பரவி இருக்கலாம் என்று கூறப் படும் விளக்கமும் இயற்கைக்கு முரணான விளக்கம்.
பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன?
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது.
'ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது.
அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்து உண்கிறது.
பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும்.
குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேயே, புதிதாக ஒரு குழியைப் பொறி கதவுடன் உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் அந்தக் குழியின் சுவரைப் பட்டிழை மூலம் பின்னி சொகுசு பண்ணிக் கொண்டு ,தனது பூச்சி பிடிக்கும் வாழ்க்கையைத் தொடங்குகிறது.
அதாவது,இந்தப் பூச்சியின் வாழ்க்கை முழுவதும், ஒரு சில அடி தூர எல்லைக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது.
இந்த நிலையில்,கங்காரு தீவில் பொறி கதவு சிலந்தியின்,இன வகைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுகிறது. குறிப்பாக,பொறி கதவு சிலந்திகளின் முப்பத்தி இரண்டு வகைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது. எனவே,பொறி கதவு சிலந்திகள் பூச்சிகளானது,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முதலில் கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
அதாவது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் துருவப் பகுதியில்,கோண்டுவாணா என்ற கண்டம் இருந்ததாகவும்,அப்பொழுது அந்தக் கோண்டுவாணாக் கண்டத்தில்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளானது, பரவி வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தக் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது, பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்ததால்,பிரிந்து நகர்ந்த கண்டங்களுடன்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளும்,பயணம் செய்து இருக்கிறது, என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஆஸ்டின் மற்றும் டாக்டரேட் மாணவியான,சோபி ஹாரிசன் ஆகியோர், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியி இனத்தில் இருந்து, எப்பொழுது பிரிந்தது, என்று அறிவதற்காக அந்த சிலந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியின் இன வகையில் இருந்து,ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளில், பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகள் காணப் படுவதற்கு,கோண்டுவாணா பிரிவு காரணம் அல்ல என்ற முடிவுக்கு , ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.
மாறாக, ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்குத் தற்செயலாக மிதந்து வந்த,நிலப் பகுதியுடன் வந்த மிதக்கும் தாவரங்கள் மூலம், கங்காரு தீவின் பொறி கதவுச் சிலந்திகளின் முன்னோர்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் இருந்து, பத்தாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து,கங்காரு தீவில் கரையொதுங்கி இருக்கின்றன, என்று சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இது வினோதமாக இருந்தாலும்,இவ்வாறு சிலந்திகள் கடல் பகுதியைக் கடப்பது முதல் முறை அல்ல என்றும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கொமரோஸ் தீவில் காணப் படுவதற்கும்,சிலந்திகளின் கடல் பயணமே காரணம் என்று, சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார்.
இது போன்ற சிலந்திகளின் கடல் பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றும், அமரோபயாய்டெஸ் என்று அழைக்கப் படும் சிலந்தியின் இனவகைகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பின்னர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும், தாவரங்கள் மற்றும் மரங்கள் மூலம் கடல் பயணங்கள் மூலம்,இடம் பெயர்ந்து இருப்பதற்கு,ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர், என்றும் சோபி ஹாரிசன் மேற்கோள் காட்டுகிறார். இந்த நிலையில்,
நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்தததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில்,இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,விலங்கினங்கள்,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும், இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்றுஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.
பறக்க இயலாத பறவைகள் நியூசிலாந்து பறக்க இயலாத பறவைகள் கடலைக் கடந்தது எப்படி ?
தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் ஈமுக் கோழிகளால் பறக்க இயலாது. அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிவி பறவையாலும் பறக்க இயலாது.
இந்த நிலையில் எப்படி அந்தத் தீவுகளுக்கு இந்தப் பறவைகள் சென்றன? என்பது இன்று வரை விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.
பூமியின் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் டினாமஸ் என்று அழைக்கப் படும் ஓரளவு பறக்கக் கூடிய குயில் போன்ற பறவையும் மற்றும் ,ரியா என்று அழைக்கப் படும் நெருப்புக் கோழி போன்ற பறக்க இயலாத பறவை,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி என்று அழைக்கப் படும் ஆஸ்ட்ரிச் பறவைகளும்,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் ஈமு கோழிகளும்,பாப்புவா நியூ கினியா தீவிலும், ஆஸ்திரேலியாவின் வட பகுதியிலும் காணப் படும் காசோவரி என்று அழைக்கப் படும் வான் கோழி போன்ற பறவைகளும்,நியூசிலாந்து தீவில் காணப் படும் கிவி என்று அழைக்கப் படும் பறவைகளும் பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படுகின்றன.
இந்தப் பறவைகளின் தாடையானது மற்ற பரக்கக் கூடிய பறவைகளைப் போல் அல்லாது டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கினத்தின் தாடையைப் போன்று தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப் படுகின்றன. பழந்தாடைப் பறவைகளில் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிவி பறவையின் மார்பு எலும்பு மட்டும் மற்ற பறக்கும் பறவைகளைப் போன்று கப்பலின் அடிபகுதி போன்று குவிந்து இருப்பதால் அதில் இறக்கைகளை இயக்கம் தசைகள் வலுவாகப் பொருத்தப் பட்டு பறப்பதற்கு எதுவாக இருக்கிறது.
ஆனால் மற்ற பழந்தாடைப் பறவைகளின் மார்பு எலும்பானது தட்டையாக இருப்பதால் அதில் இறக்கித் தசைகள் வலுவின்றி பொருத்தப் பட்டு பறப்பதற்கு பயன் படாமல் இருக்கிறது.
எனவே இந்தப் பறவைகள் ராட்டைட் என்றும் அழைக்கப் படுகிறது.ராப்ட் என்ற லத்தீன் மொழிச் சொல்லிக்கு தட்டை என்று பொருள்.அதன் அடிப்படையில் இந்தப் பறவைகள் தட்டை நெஞ்சுப் பறவைகள் என்று அழைக்கப் படுகிறது.
இதன் அடிப்படையில் பறக்க இயலாத பறவைகள் ஒரு தொகுப்பிலும்,ஒரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது ராட்டைட் பரவி இனத்திற்கு நெருங்கிய சொந்தம் என்றும் வகைப் படுத்தப் பட்டது. தற்பொழுது ராட்டைட் பறவைகள் தென் கோளப் பகுதியில் மட்டும் காணப் பட்டாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களிலும் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேலியோட்டிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. பறக்கக் கூடிய தன்மையுடன் இருந்த அந்தப் பறவையானது தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் பறவையின் மூதாதை என்று வகை படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்ட்ரிச் பறவைகள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்தே வந்திருப்பது புலனாகிறது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லித்தோர்னிட்ஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பறவையானது தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவை இனத்தைச் சேர்ந்தது என்று வகை படுத்தப் பட்டுள்ளது.
எனவே டினாமஸ் பறவையும் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதும் புலனாகிறது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து போன்ற தீவுகளுக்கும் ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களில் இருந்தே தரை வழித் தொடர்பு வழியாகவே சென்று இருக்கின்றன.
உதாரணமாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் கஸ்கஸ் என்று அழைக்கப் படும் கங்காரு இனத்தைச் சேர்ந்த வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கினம்,இந்தோனேசியத் தேவுக் கூட்டத்தில் உள்ள சுலாவெசித் தீவிலும் காணப் படுகிறது.
அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட பகுதியில் காணப் படும் காசோவரிப் பறவைகள்,ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு அருகில் உள்ள பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படுகிறது. எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே விலங்கினங்களும் பறக்க இயலாத பரவிகளும் இடம் பெயர்ந்து இருகின்றன.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,மடகாஸ்கர் தீவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த , பத்து அடி உயரத்துடனும்,இருநூற்றி எழுபத்தி ஐந்து கிலோ எடையுடனும் வாழ்ந்த யானைப் பறவை என்று அழைக்கப் படும் ராட்டைட் பறவையின் புதை படிவங்களும் முட்டைகளும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
யானைப் பறவையின் முட்டையானது கோழி முட்டையைப் போன்று நூறு மடங்கு பெரியது.அதில் நூறு ஆம்லேட்டுகள் தயாரிக்க இயலும்.அதன் கொள்ளளவு ஏழு லிட்டர்ருக்கும் அதிகம். இதே போன்று நியூ சிலாந்து தீவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த ஆறு அடி உயரமும் முப்பது கிலோ எடையும் உள்ள மோவா என்ற பறவையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பறவைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின், இந்தப் பறவைகள் இறக்கைகளைப் பயன் படுத்தாமல் விட்டதால், காலப் போக்கில் பறக்கும் தன்மையை இழந்திருக்கின்றன, என்று கருதினார்.
அத்துடன் இந்தப் பறவைகள் ஒன்றுடன் ஒன்று இனத் தொடர்பு உடையது என்றும் கருதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்தப் பறவைகள் தனித் தனிப் பறவை குடும்பங்களைச் சேர்ந்தது என்றே நம்பப் பட்டது. 1960 ஆம் ஆண்டு ஒரே வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இருந்த பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் பட்ட விளக்கம் அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
அதன் அடிப்படையில் ராட்டைட் பறவைகள் தென் கோளப் பகுதிக் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்களும் தீவுகளும் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற கண்டமாக இருந்த பொழுது ,அந்தக் கண்டத்தில் பறக்க இயலாத ராட்டைட் பறவைகளின் மூதாதைகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்த பொழுது ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவைகள் காலப் போக்கில் ரியா பறவையாக பரிணாம மாற்றம் அடைந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்த பொழுது,அந்தக் கண்டத்துடன் நகர்ந்து சென்ற பறவைகள் ஆஸ்ட்ரிச் பறவைகளாகவும்,அதே போன்று மடகாஸ்கர் தீவு பிரிந்து சென்ற பொழுது அந்தத் தீவுடன் சென்ற பறவைகள் யானைப்பறவைகளாகவும்,ஆஸ்திரேலியாக் கண்டம் பிரிந்து சென்ற பொழுது ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற பறவைகள் ஈமுக் கோழி களாகவும்,காசோவரிகளாகவும்,அதே போன்று நியூசிலாந்து தீவு பிரிந்து சென்ற பொழுது அந்தத் தீவுடன் சென்ற பறவைகள் மோவா பறவைகளாகவும் ,கிவி பறவை களாகவும் பரிணாம மாற்றம் அடைந்ததாக,அமெரிக்க நாட்டின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,ஜோயல் கிராகிராப்ட் 1974 ஆம் ஆண்டு ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அவரின் விளக்கம் சரியா என்று அறிவதற்காக ராட்டைட் பறவைகளின் மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு ஒப்பாய்வு செய்யப் பட்டது.
1990 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் மேற்கொண்ட ஆய்வில் ராட்டைட் பறவைகள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பாக டைனோசர்கள் அழிந்த பிறகே பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதாக அறிவித்தார்.
ஆனால் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கா,மடகாஸ்கர்,நியூசிலாந்து போன்ற நிலப் பகுதிகள் பிரிந்து விட்டதாக நம்பப் படுகிறது.
அந்தக் காலத்தில் ஆப்பிரிக்காவிலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே அந்தக் காலத்தில் ராட்டைட் பறவைகள் தோன்றி இருக்க சாத்தியம் இல்லை. டைனோசர்கள் பூமியில் இருந்த வரை மற்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் மரங்களிலும் மண்ணுக்கு அடியில் வளைகளிம் வாழ்ந்தன.
அதே போன்று பறவைகளும் மரங்களிலும் நீர் நிலைகளிலும் வாழ்ந்தன. டைனோசர்கள் அழிந்த பிறகு காலியாக விடப் பட்ட புல் வெளியை பாலூட்டிகள் ஆக்கிரமித்தான.அதன் விளைவாக டைனோசர்கள் அழிந்த ஒரு கோடி ஆண்டுகளில் அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி விலங்கினத்தில் பல இனவகைகள் உருவாகிப் பல்கிப் பெருகின.
அதற்கும் முன்பு பறவைகளும் சமவெளி வாழ்க்கையை மேற்கொண்டதில் கண்டதையும் பொறுக்கித் தின்னதில்,ராட்டைட் பறவைகள் பருத்து பறக்க இயலாத பறவைகளாகி விட்டதாக டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் தெரிவிக்கிறார்.
இது வரை கண்டு பிடிக்கப் பட்ட தொன்மையான ராட்டைட் பறவையின் புதை படிவம், வட பகுதிக் கண்டமான, ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான பறக்கக் கூடிய பேலியோடிட்ஸ் புதை படிவம் அதே போன்று மரபணு சோதனையில் ஓரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது ,ஆஸ்ட்ரிச் பறவையைக் காட்டிலும் மற்ற ராட்டைட் பறவைகளுடன் நெருங்கிய சொந்தமாக இருப்பதும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் டினாமஸ் பறவையானது தற்பொழுது ராட்டைட் பறவை இனமாகவும் ஆஸ்ட்ரிச் பறவையானது ராட்டைட் பறவையின் நெருங்கிய சொந்தமாகவும் வகை படுத்தப் பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே பறக்கும் தன்மையை இழந்த ஒரு பறவை இனத்தில் இருந்து மறுபடியும் ஒரு பறக்கக் கூடிய பறவை தோன்றி இருக்க இயலாது. எனவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பறக்கக் கூடிய மூதாதை ராட்டைட் பறவைகள் வெவ்வேறு கண்டங்களுக்குப் பரந்து சென்ற பிறகு அந்த அந்தக் கண்டங்களிலும் தீவுகளிலும் இறங்கி,வெவ்வேறு இனவகைகளாக உருவாகி விட்டதாக நம்பப் படுகிறது.
அதில் தென் அமெரிக்கக் கண்டத்துக்கு பரந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவை இனத்தில் ஒரு பிரிவு பறக்கும் தன்மையை இழந்து ரியா பறவையாக உருவாகி விட்டதாகவும் இன்னொரு பிரிவு பறக்கும் தன்மையை இழக்காமல் டினாமஸ் பறவையாக உருவாகி விட்டதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தின் படி ராட்டைட் பறவை இனத்தில் பல முறை பறக்க இயலாத தன்மை பரிணாமத்தில் தோன்றி இருப்பதாகவும் அதனால் ரியா,ஆஸ்ட்ரிச்,யானைப் பறவை,ஈமு,கிவி,பறவைகள் தோன்றி யதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு அருங் காட்சியகத்தில் யானைப் பறவையின் எலும்புகள் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் தற்பொழுது மரபணு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக அதில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு மற்ற ராட்டைட் பறவைகளின் மரபணுவுடன் ஒப்பாய்வு செய்தில்,யானைப் பறவையானது கிவி பறவைக்கு நெருங்கிய சொந்தமாக இருகிறது என்று,ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தொல் மரபணு ஆய்வகத்தைச் சேர்ந்த,டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் கிரண் மிட்செல் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் இந்த இரண்டு பறவைகளும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மூததையில் இருந்து பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவும் நியூ சிலாந்து தீவும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதால் ,கிவி பறவையின் மூதாதை மடகாஸ்கர் தீவில் இருந்து பதினோராயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நியூ சிலாந்து தீவுக்குப் பரந்து வந்திருக்க வேண்டும்,
அல்லது யானைப் பறவையின் மூதாதையானது நியூ சிலாந்து தீவில் இருந்து மடகாஸ்கர் தீவுக்குப் பறந்து வந்திருக்க வேண்டும் என்றும் கிறேன் மிட்செல் தெரிவித்து இருக்கிறார். கிரெனின் ஆய்வு முடிவு பற்றி டாக்டர் கிராகிராப்ட்டிடம் கருத்து கேட்கப் பட்டதற்கு அவர்,போதுமான அளவுக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த முடிவுடன் உடன் படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று ராட்டைட் பறவைகளின் மரபணு ஆய்வில் ஈடு பட்ட டாக்டர்.ஹேடார்ட் அவர்களும்’’இது ஒரு நல்ல கருத்து ஆனால் பெருமளவு யூகம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இவர்கள் இருவருமே இன்னும் ஆதாரங்கள் திரட்டாப் பட வேண்டும் என்றும் ஆனால் ராட்டைட் பறவைகள் பற்றிய மர்மம நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆர்க்டிக் முதலைகள்.
இதே போன்று கிரீன்லாந்து தீவை ஒட்டி அமையானது இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் காலத்தில் 'சாம்சோ சாரஸ்' என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதே போன்று டைனோசர்கள் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த பிலிசியோசாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புத் புதை படிவங்களும் ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் வாழ் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எப்படி இந்த ஆசிய வகை நன்னீர் ஆமை ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து ஆக்சல் ஹைபெர்க் தீவை வந்தடைந்து இருக்கும் என்று டாக்டர் ஜான் டார்டுனோ வியப்பு தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக அந்த புதை படிவமானது பஸால்ட் என்று அழைக்கப் படும் கடல் தள பாறை இருக்கும் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது அதன் அடிப்படையில் அவர் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றங்கள் அதிகமாக இருந்து இருக்கும் அப்பொழுது அதிக வெப்பத்தில் பனிப் படலங்கள் உருகி ஆர்க்டிக் கடலின் கலந்து இருக்கும்.
ஆனால் அந்த நன்னீரானது உப்பு நீரில் கலக்காமல் மேல் பகுதியில் இருந்து இருக்கும் அதன் வழியாக ஆசிய வகை நன்னீர் ஆமையானது ஒரு தீவில் இருந்து அடுத்த தீவை அடைந்து இருக்கும் இவ்வாறு பல தீவுகளை கடந்து கடைசியாக ஆக்சல் ஹைபெர்க் தீவை அடைந்து இருக்கும் என்று கொஞ்சம் அசாதாரணமான விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருக்கிறார்.
அனால் டைனோசர்கள் காலத்தில் அக்கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்தபொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்த காலத்தில் விலங்கினங்களு ஆர்க்டிக் பகுதியில் இருந்து அதிக வெப்ப நிலையில் சதுப்பு நில காட்டில் வசித்து இருப்பதுடன் அதன் வழியாக இடப் பெயர்ச்சியும் செய்து இருக்கின்றன.
இந்த நிலையில் ஹைபெர்க் தீவில் டஜன் கணக்கில் மரங்களின் அடித்த தண்டுகள் மண்ணில் பாதி அளவு புதைந்தடிக நிலையில் இருப்பதை டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அந்த மரங்களானது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட நிலையில் இருந்தது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்கள் என்றாலும் சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மை போன்று புதிதாக இருந்தது.அந்த மறக்க கிளைகளை சிலவற்றை எரித்து தேநீர் தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் அருந்தினர்.
அவ்வாறு எரிக்கக் கூடிய நிலையிலேயே அந்த மரங்கள் இருந்தன. ஆக ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதலை மற்றும் ஆமைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலமாகவும் அந்த தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நிலா காடுகள் இருந்து இருப்பது தெளிவாகிறது.
நன்னீர் நண்டுகள் நண்டுகள்
நன்னீர் நண்டுகள் நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன. நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.
அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது. நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன. கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.
இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும்,
கடலில் மிதவை உயிரியாக வாழும் பொழுது கடல் நீரோட்டத்தால் மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் அடித்துச் செல்வதால் கடல் நண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்கின்றன. ஆனால் நன்னீர் நண்டுகளின் வாழ்க்கை முழுவதும் நன்னீர் நிலைகளிலேயே கழிவதால், நன்னீர் நண்டுகளின் பரவல் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே வரையறைப் படுத்தப் படுகிறது.
இருந்தாலும் நன்னீர் நண்டினங்களும் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அத்துடன் நன்னீரில் வாழும் நண்டு தவளை போன்ற பிராணிகள் அதிக உப்புள்ள கடல் நீரில் இருந்தால் நண்டு மற்றும் தவளையின் உடலில் இருந்து நீர் வெளியேறி நண்டும் தவளையும் இறந்து விடும்.
எனவே நன்னீர் நண்டு மற்றும் தவளைகளால் அதிக உப்புள்ள கடல் நீரில் வாழ இயலாது. இந்த நிலையில் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர்,செஷல்ஸ் போன்ற தீவுகளில் நன்னீர் நண்டுகள் மற்றும் தவளைகள் காணப் படுகின்றன.
எப்படி இந்த நன்னீர் நண்டுகள் கடல் நடுவே இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகிறது.
கோண்டுவானா நண்டு பொட்டாமானாட்டிடே என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகிறது. நன்னீர் நண்டுகளால் கடல் பகுதியைக் கடக்க இயலாது என்பதால் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதிகள் ஒன்றாக இணைந்து கோண்டுவானா என்ற பெருங் கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நீல் கும்பர்லிட்ஜ், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளிலும் காணப் படும் நன்னீர் நண்டுகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டார்.
அந்த மரபணு ஒப்பாய்வில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே என்ற நன்னீர் நண்டினத்தில் இருந்து ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவில் காணப் படும் செஷல்ஸ் அல்லுராடி என்ற நன்னீர் நண்டினம் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நன்னீர் நண்டுகள் எப்படி கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்குச் சென்றன? என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது. நன்னீர் நண்டுகள் கடல் நீரில் வைத்து சோதனை செய்யப் பட்டது.
அப்பொழுது நன்னீர் நண்டுகள் இரண்டு வார காலம் கடல் நீரில் தாக்குப் பிடிப்பது தெரிய வந்தது. எனவே நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரத் தண்டில் உள்ள பொந்துகளில் இருந்த படி இரண்டு வார காலம் மிதந்த படி ஐநூறு கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன் சூறாவளி மற்றும் புயல் மழையால் காற்றில் ஈரப் பதமான சூழலில் உடலின் ஈரம் காயாமல், காற்றையும் சுவாசித்த படி தீவுகளை அடைந்து பிறகு நன்னீர் நண்டுகள் குளம் குட்டை போன்ற நன்னெற நிலைகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவு நன்னீர் நன்னீர் நண்டினமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே நண்டினத்தில் இருந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டாதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். எனவே செஷல்ஸ் தீவுக்கு நன்னீர் நண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.
ஆனால் செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது. அதே போன்று செஷல்ஸ் தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்தும் வட மேற்கு திசையில் ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
ஆனால் அதிக பட்சம் நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே செஷல்ஸ் தீவில் காணப் படும் நன்னீர் நண்டினம் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து செஷல்ஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்து தற்பொழுது உறுதியான விளக்கங்கள் இல்லை.
குருட்டுப் பாம்புகள்.
குருட்டுப் பாம்புகள் பல தீவுகளுக்குப் பாம்பினங்கள் எப்படிச் சென்றன என்பதும் இன்று வரை புரியாத புதிராக இருக்கின்றன.
மிகவும் தொன்மையான பாம்பின் புதை படிவம் மத்தியக் கிழக்கு நாடான ஜெருசலேம் நாட்டில் யூதேயா மலைப் பகுதியில், பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையான சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. பாகிராகிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்பிற்கு சிறிய அளவிலான இரண்டு பின்னங் கால்களும் இடுப்பு மற்றும் கணுக் கால் எலும்புகளும் இருந்தன.
அந்தப் புதை படிவம் பல்லி போலவும் பாம்பு போலவும் இருந்தது. ஆனால் அந்தப் புதை படிவமானது சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் இருந்ததால், பாம்பினங்கள் மொசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப் பட்டது.
அதன் பிறகு அதே மலைப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாம்பின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டது.ஹாசி ஒப்பிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்புக்கும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்தன.
பின்னர் மத்தியக் கிழக்கு நாடான லெபனான் தேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான யூபோடாபிஸ் என்ற பாம்பின் புதை படிவத்திலும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்ததால் பாம்புகள் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் படகோனியா நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான நாஜெஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பாம்பின் புதை படிவத்தில் சிறிய கால்கள் இருந்ததுடன் அந்தப் பாம்பானது தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற எலும்பு அமைப்புடன் இருந்தது. இதன் அடிப்படையில் பாம்பினங்கள் தரை வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து இருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்றுள்ளது.
பாம்பினங்களில் மூவாயிரத்தி நானூறுக்கும் அதிக இனவகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மானையே விழுங்கக் கூடிய மலைப் பாம்புகளுக்கும், மண் புழு போன்று பூந்தொட்டிகளில் காணப் படும் குருட்டுப் பாம்புகளுக்கும், சிறிய அளவிலான பின்னங்கால் எலும்புகள் இருப்பதன் அடிப்படையில், இந்தப் பாம்பினங்கள் மிகவும் தொன்மையான பாம்பினம் என்பது தெரிய வந்துள்ளது. மலைப் பாம்புகளில் பைத்தானிடே என்று அழைக்கப் படும் முட்டையிடும் மலைப் பாம்புகள் தொன்மையன இனமாகக் கருதப் படுகிறது. இதில் இருபத்தி ஆறு இனங்கள் உள்ளன.
இவ்வகைப் பாம்புகள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும்,இந்தோனேசியா ,பிலிப் பைன்ஸ் மற்றும் பாப்புவா நியூ கினியா தீவுகலிலும் காணப் படுகின்றன.
இதே போன்று போய்டே என்று அழைக்கப் படும் குட்டிகளை ஈனும் மலைப் பாம்புகள் சற்று பரிணாமத்தில் மேம்பட்ட இனமாகக் கருதப் படுகிறது. இவ்வாகைப் பாம்புகள் புதிய உலகம் என்று அழைக்கப் படும் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஆப்பிரிக்கா,இந்தியா, ஆகிய கண்டங்களிலும் மடகாஸ்கர் தீவு,சலமன் தீவு, பிஜி போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.
இதே போன்று ஸ்கோலிக்கோ பிடியா என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்புகளும் சிறிய அளவிலான கால் எலும்புகளைக் கொண்டிருக்கும் தொன்மையான பாம்பினம் ஆகும். இந்தப் பாம்புகள் மண் புழுக்களைப் போன்று தோற்றமளிப்பதால் புழுப் பாம்புகள் என்றும் பூந்தொட்டிகளில் காணப் படுவதால் பூந்தொட்டிப் பாம்புகள் என்றும் அழைக்கப் படுகின்றன. குருட்டுப் பாம்புகள் ஸ்கோலெக்கோ பிடியன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.இதில் மூன்று இனவகைகள் இருக்கின்றன.
டைப்லோபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன.
இதில் இருநூற்றி ஐம்பது இன வகைகள் உள்ளன. லெப்ட்டோடைப்லோப்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் காணப் படுகின்றன.
அனாமாலெபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்காவில் மட்டும் காணப் படுகின்றன. இந்தப் பாம்புகள் வாழ்வின் பெரும் பகுதியை தரைக்கு அடியிலேயே கழிப்பதால் காலப் போக்கில் பார்வைத் திறனை இழந்து விட்டது. ஆனாலும் ஒளியை உணரக் கூடிய அளவுக்கு பார்வைத் திறன் உண்டு,
எனவே இந்தப் பாம்புகள் குருட்டுப் பாம்புகள் என்று அழைக்கப் படுகின்றன.இதன் பிராதான உணவு எறும்பும் கறையானும் அதன் முட்டைகளுமே. குருட்டுப் பாம்புகளில் அறுநூற்றி நாற்பது இன வகைகள் கண்டறியப் பட்டுள்ளது.இந்தப் பாம்புகள் மண் புழுவைப் போன்று இருந்தாலும் இதற்கு முதுகெலும்பும், கபாலமும், தாடையும் அதில் கூரிய பற்களும் உண்டு குருட்டுப் பாம்புகள் மெலிதான எலும்புகளைக் கொண்டு இருப்பதால் இதன் புதை படிவங்கள் இல்லையென்றே கூறலாம்.
எனவே இந்தப் பாம்புகள் எப்பொழுது தோன்றியது என்று அறிவதற்காக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் மற்றும் நிகோல் விடல் ஆகியோர் ,உலகெங்கும் உள்ள தொண்ணூற்றி ஆறு இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், குருட்டுப் பாம்புகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் ஒரே நிலப் பகுதியாக இணைந்து இண்டிகாஸ்கர் என்ற நிலப் பகுதியாக இருந்ததாகவும், அப்பொழுது அதில் குருட்டுப் பாம்புகள் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
பின்னர் மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதிய பொழுது, இந்தியாவில் இருந்த குருட்டுப் பாம்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவியதாகவும் நம்பப் படுகிறது.
அல்லது, குருட்டுப் பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு பரவி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குருட்டுப் பாம்புகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
முக்கியமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் குருட்டுப் பாம்புகள், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து இருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது இந்த இரண்டு கண்டங்களும் பிரிந்த பிறகு நான்கு கோடி ஆண்டுகள் கழித்தே இந்த இரண்டு கண்டங்களில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் தோன்றி இருப்பதாகவும், எனவே தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் பெருங் கடலில் ஆறு மாத காலம் கடலில் மிதந்த படி தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தரைக்கு அடியில் வாழும் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடல் வழியாக பரவ இயலாது என்று மற்ற அறிவியலாளர்கள் கூறினாலும் கூட மரபணு ஆய்வு முடிவுகள் கடல் வெளிப பயணம் நடை பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் ஆறு மாத காலம் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் இருந்த பொழுது, அவைகள் உண்பதற்கு அந்த மிதவைத் தாவரங்களில் பூச்சிகளும் இருந்திருக்கும், என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் குருட்டுப் பாம்பினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக அந்தத் தீவுகளை அடைந்து இருக்கும் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் எதிர் பாராத வண்ணம் பல தொலை தூரத் தனிமைத் தீவுகளுக்கும் குருட்டுப் பாம்புகள் சென்று புதிய இனவகைகளாகப் பரிணாம மாற்றம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக டைப்ளோலெபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா,ஆகிய கண்டங்களிலும் கரீபியன் ,பிலிப்பைன்ஸ் சாலமன் மற்றும் பிஜி குவாம்,மற்றும் பாலவ் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடிசன் வைன் என்ற உயிரியல் வல்லுநர் குவாம் மற்றும் பாலவ் தீவுக்கு கிழக்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாசா என்ற தீவிலும் ஏன்ட் தீவிலும் இரண்டு புதிய இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளைத் தற்செயலாகக் கண்டு பிடித்தனர்.
இவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு குருட்டுப் பாம்புகள் பரவி இருக்கும் என்பதை அவர்கள் முதலில் நம்பவே இல்லை.
ஒரு மரத்தின் உட்பகுதியில் இருந்த அந்தக் குருட்டுப் பாம்பு ,ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்பு இனமாக இருக்கும் என்றும் தற்செயலாக மனிதர்கள் மூலமாக அந்தத் தீவுகளுக்கு வந்திருகக் கூடும் என்றும் முதலில் நம்பினார்கள்.
அதன் பிறகு அந்தப் பாம்பின் செதில் அமைப்புகளை ஆய்வு செய்ததில் அந்தக் குருட்டுப் பாம்புகள் இது வரை கண்டு பிடிக்கப் படாத புதிய இன வகை என்பது தெரிய வந்தது.
தற்பொழுது கரோலின் தீவுக் கூட்டத்தில் உள்ள பாசா தீவிலும் ஏன்ட் தீவிலும் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் அடோ சீட்டஸ் என்றும், அதே போன்று ஜிலாப்,உழுதி ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் ஹாட்மாலியெப் என்றும் புதிதாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இதே தீவுகளில் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனத்தைச் சேர்ந்த ஜிக்கோ என்று அழைக்கப் படும் பல்லி இனங்களும் காணப் படுகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது. 2007 ஆம் ஆண்டு வரையில் குருட்டுப் பாம்பினத்தில் ஆக்டோ டைப்லோப்ஸ் என்ற குடும்பத்தில் நான்கு இனவகைகள் ,நியூ கினியாத் தீவு,பிஸ்மார்க் தீவுகள்,போகைன் வில்லா மற்றும் சாலமன் தீவுகளில் இருப்பது அறியப் பட்டது.
இந்த நிலையில் அதே ஆக்டோ டைப் லோப்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோ டைப் லோப்ஸ் பானோரம் என்ற ஐனதாவது இனம் எதிர்பாராத வண்ணம் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லுசான் தீவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே தீவுகளில் பிளாட்டி மாண்டிஸ் என்று அழைக்கப் படும் தவளைகளும் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது.
பேபாப் மரங்கள்.
பேபாப் மரங்கள் மடகாஸ்கர் தீவில் மழை நீரைச் சேகரிக்கும் பாட்டில் வடிவ மரங்கள் காணப் படுகின்றன.பேபாப் மரங்கள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் அடன்சோனியா இந்த மரத்தின் உயரத்தை விட மரத்தண்டின் சுற்றளவு அதிகமாக இருப்பததுடன் கிளைகள் மரத்தின் உச்சிப் பகுதியில் மட்டும் இருப்பதால்,
இந்த மரம் பார்ப்பதற்கு ஒரு பாட்டில் வடிவத்தில் இருக்கிறது. பெரும்பாலும் வறண்ட சூழ் நிலையில் வளரக் கூடிய இந்த மரத்தில் கிளைகளில் உள்ள பிளவுகள் மூலம் மழை நீர் சேகரிக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு போபாப் மரத்தில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைக்கப் படுகிறது.
வறண்ட காலத்தில் இந்த நீரை மனிதர்களும் விலங்கினங்களும் பயன் படுத்தி உயிர் வாழ பயன் படுவதால் இந்த மரம் உயிர் மரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த இனமரங்கள் விதை மூலம் பரவுகின்றன.
இந்த மரத்தின் விதைகள் தேங்காய் போன்ற நார்ப்போருளால் ஆன ஒரு பழத்திற்குள் இருக்கிறது.இந்தப் பழத்தைக் குரங்குகள் விரும்பி உண்பதால் இந்தப் பழம் குரங்குப் பழம் என்றும் அழைக்கப் படுகிறது.
இந்தப் பழத்தைத் தின்ற குரங்குகள் வவ்வால்கள் மற்றும் ஆமைகளின் கழிவுகளில் இருக்கும் விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் முளைக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மரத்தின் பரவலுக்கு விலங்கினங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.
பேபாப் என்று அழைக்கப் படும் அடன்சோனி மரத்தில் எட்டு இனவகைகள் உள்ளன.இதில் ஆறு இனவகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.அட்டன் சோனியா டிஜிடேட்டா என்று அழைக்கப் படும் இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அரேபியா பீட பூமிப் பகுதியிலும் காணப் படுகிறது.
இந்த நிலையில் அடன் சோனியா கிரிகரி என்று அழைக்கப் படும் எட்டாவது இனம் மடகாஸ்கர் தீவில் இருந்து எழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் காணப் படுகிறது. ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பேபாப் மரத்தின் பழத்தின் ஓடு மிகவும் மெலிதாக இருப்பதால் விரைவில் நீரில் ஊறி விடக் கூடியதாக இருப்பதால் மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்த படி ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு மரமாக முளைத்து இருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்களால் நிராகரித்து விட்டனர்.
மாறாக ஆஸ்திரேலியாக் கண்டத்த்தின் பூர்வீகப் பழங்குடிகளால் அடன் சோனியா கிரிகரி மரத்தின் விதைகள் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
ஆனால் அபோரிஜின்ஸ் என்று அழைக்கப் படும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் அந்தக் கண்டத்துக்கு எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சென்று இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் மரபணு ஆய்வில் ஆஸ்திரேலியாக் கண்டத்திள் காணப் படும் அடன் சோனியா கிரிகரி மரங்கள், மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பேபாப் இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பே பிரிந்திருப்பது தெரிய வந்தள்ளது. எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்கள் எப்படி ஏழாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்தது? என்ற கேள்வி விடை கூறப் படாத கேள்வியாகவே இருக்கிறது.
எழாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பறவைகளால் கழிவை வெளியேற்றாமல் கடக்கவும் இயலாது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பேபாப் மரங்களின் இடப் பெயர்ச்சி கடல் வழியாக சென்று இருந்தால் கூட ஆஸ்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலேயே பேபாப் மரங்கள் காணப் பட வேண்டும். ஆனால் விநோதமாக பேபாப் மரங்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வட மேற்குப் பகுதியில் அதாவது பசிபிக் கடல் பகுதியில் இருகிறது. எனவே போபாப் மரத்தின் பரவல் கடல் வழியாக நடை பெற்று இருக்க வில்லை என்பதும் உறுதியாகிறது.
அத்துடன் போபாப் மரத்தின் பரவல் ஆசியக் கண்டம் வழியாக நடை பெற்று இருப்பதையே புலப் படுத்துகிறது. ஆனால் ஆசியக் கண்டத்தில் போபாப் பரத்தின் இனவகைகளோ அல்லது புதை படிவங்களோ காணப் படவில்லை.
இவ்வாறு தொடர்ச்சியற்ற இனப் பரவல் மூலம் இடைப் பட்ட நிலப் பகுதிகள் கடல் மட்ட உயர்வையும் மூழ்கிய நிலத்தையும் புலப் படுத்துகிறது. உதாரணமாக இந்தோனேசியக் கடல் பகுதியில் சாகுல் என்று அழைக்கப் படும் கடலடி நிலம் காணப் படுகிறது.
இதே போன்று கற்கால மனிதர்களும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதன் மூலமாகவும் ஆசியக் கண்டதுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையே புலப் படுத்துகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வீகப் பழங்குடிகள் கடல் பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
குருட்டு மீன்கள்
இதே போன்று மடகாஸ்கர் தீவு மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உள்ள குகைகளில் காணப் படும் குருட்டு மீன்கள் ஒரே பொது மூததையில் இருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் லூசியான பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் பிரசன்னா சக்கரவர்த்தி குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப் படையில் அவர் எழாயிரம் கிலோ மீட்டர் அந்தக் குருட்டு மீன்கள் கடல் வழியாக இந்த இரண்டு நிலப் பகுதிகளுக்கும் பரவி இருக்க முடியாது என்றும் நிலத் தொடர்பு வழியாகவே குருட்டு மீன்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்று இருக்க வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மடகாஸ்கர் தீவுக் குகைகளிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குகைகளிலும் காணப் படும் குருட்டு மீன்கள் பன்னெடுங் காலமாக சூரிய ஒளி புகாத இருட்டான குகைச் சூழலில் வாழ்ந்ததால் காலப் போக்கில் பார்க்கும் தன்மையை இழந்து விட்டு இருக்கிறது.
இந்த இரண்டு பகுதிகளிலும் காணாப் பட்ட குருட்டு மீன்கள் கோபி மீனினத்தைச் சேர்ந்தது என்பதுடன் சீக்கோ கோபியஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பிலிப் பைன்ஸ் தீவுக் குகைகளிலும்,ஆக்சி லியோட்ரிஸ் என்று அழைக்கப் படும் குருட்டு கோபி மீனினம் பாப்புவா நியூ கினியா தீவுக் குகைகளிலும் காணப் படுகிறது.
எனவே முன்னொரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாஸ்கர் தீவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் இடையில் ஆசியக் கண்டத்தின் வழியாக நிலத் தொடர்பு இருந்திருப்பதற்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
கிரே பிஷ் மேலை நாடுகளில் கிரே பிஷ்கள் சுவையான உணவாக பரிமாறப் படுகிறது.பல மில்லியன் டாலர் வியாபாரம் கிரே பிஷ்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. கிரே பிஷ்கள் என்பது உண்மையில் கடலில் காணப் படும் லாப்ஸ்டர்களே. கடலில் வாழ்ந்த நண்டுகள் ஆறு குளம் ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வாழ்வதற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்று நன்னீர் உயிரினங்களாக மாறியது.
அதைப் போன்றே கடலில் வாழ்ந்த லாப்ஸ்டர்களும் நன்னீர் நிலைகளில் குடியேறி நன்னீர் உயிரினங்களாக மாறியது.நன்னீரில் வாழும் லாப்ஸ்டர்கள் கிரே பிஷ் என்று அழைக்கப் படுகின்றன.நன்னீர் நண்டுகளைப் போலவே கிரே பிஷ் களாலும் கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
கடல் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர்கள் கடலில் வசிப்பதால் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றன. ஆனால் கிரே பிஷ்கள் கண்டங்களிலும் கண்டங்களை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.
இதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கிரே பிஷ்கள் இடம் பெயர்ந்து இருப்பது புலனாகிறது. இன்று கிரே பிஷ்கள் ஆப்பிரிக்கா மற்றும் பனிக் கண்டமான அண்டார்க்டிக்கா தவிர மற்ற ஐந்து கண்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகளில் காணப் படுகின்றன.அத்துடன் ஆபிரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள மடகாஸ்கர் தீவு,ஆஸ்திரேலியா கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் டாஸ்மேனியா , நியூ கினியா, நியூ சிலாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.
கிரே பிஷ்களின் உறுப்புகளில் அமைப்புப் படி கிரே பிஷ்கள் அஷ்டாகாய்டியே மற்றும் பாரா அஷ்டாகாய்டியே இரண்டு பெரும் குடும்பங்களாகப் பிரிக்கப் படுகின்றன.அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் வட கோளப்பகுதியிலும், பாரா அஷ்டாகாய்டியே குடும்ப உறுப்பினர்கள் தென் கோளப்பகுதியிலும் காணப் படுகின்றன. கிரே பிஷ்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஐந்து ஜோடி நீந்தும் கால்கள் இருக்கும்.
ஆனால் தென் கோளப் பகுதிகளில் காணப் படும் பாரா அஷ்டாகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்களில் முன் இரண்டு நீந்தும் கால்கள் இருக்காது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பர் சர் தாமஸ் ஹக்ஸ்லி ,நன்னீரில் வாழக் கூடிய கிரே பிஷ்கள் எப்படி உலகம் முழுவதும் பரவியது? என்று வினா எழுப்பினார். அந்தக் கேள்விக்கு விடை காண இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் கைத் கிராண்டல் தலைமயிலான குழுவினர் மரபணு ஆய்வின் அடிப்படையில், எல்லா கிரே பிஷ்களும் ஒரே பொது மூதாதையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்று இருக்கின்றன என்று அறிவித்து உள்ளனர்.
அத்துடன் கிரே பிஷ்களும் லாப்ஸ்டர்களும் சகோதர இனங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர். பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதன் அடிப்படையில் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்காக் கண்டத்திலும், மடகாஸ்கர் தீவிலும்,ஆஸ் திரேலியாக் கண்டத்திலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் இருக்கும் நியூ சிலாந்து,நியூ கினியா போன்ற தீவுகளிலும், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டு வாணா என்ற கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்ததாக நம்பப் படுகிறது.எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் கிரே பிஷ்கள் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவானது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுவதால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ்களுக்கு, ஓரளவு தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து முதலில் ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் விநோதமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் கிரே பிஷ்கள் காணப் படவில்லை.
இறுதியாக தென் அமெரிக்காக் கண்டமும் ஆஸ்திரேலியாக் கண்டமும் மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டார்க்டிக் கண்டம் வழியாக நிலத் தொடர்பு கொண்டு இருந்ததாக நம்பப் படுவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் கிரே பிஷ்கள் நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் பிரிங்ஹாம் யங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் மைக்கேல் ஜோனதன் கார்ல்சன் மற்றும் டாக்டர்,கைத் கிராண்டல் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும் நெருங்கிய சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவானது கோண்டுவானாக் கண்டப் பிரிவுக் கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். உண்மையில் புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று தென்கோள நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்து பிரிந்து இருந்தால், நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிரே பிஷ்களும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிரே பிஷ்களும், தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும்.
இதற்கு முற்றிலும் மாறாக, இந்த இரண்டு நிலப் பகுதிகளிலும் காணப் படும் கிரே பிஷ்கள், மற்ற நிலப் பகுதிகளில் காணப் படும் கிரே பிஷ் களை விட, நெருங்கிய சொந்தமாக இருப்பதன் அடிப்படையில் ,தென் கோளத்தின் நிலப் பகுதிகளில், பாரா அஸ்டகாய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கிரே பிஷ்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்ததே காரணம் என்று கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
000000000Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-1773513090452729752023-09-11T03:12:00.002-07:002023-09-11T03:12:16.089-07:00பூமிப் பந்தின் புதிர்களுக்கு எனது விளக்கம். பூமிப் பந்தின் புதிர்களுக்கு எனது விளக்கம்.
டைனோசர்களின் புதை படிவப் புதிர்.
துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம்.
ஆர்க்டிக் பகுதியில் ''ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு'' வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால் ஆஸ்திரேலியா,அண்டார்க்டிகா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும் அதன் பிறகு அந்த ஒற்றைப் பெருங் கண்டமானது பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தின் படி, வட அமெரிக்காவின் வட பகுதியான ''அலாஸ்கா'' மற்றும் ஆசியாவின் வட பகுதியான ''சைபீரியா'' பகுதிகளானது கடந்த ''பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே'' கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது.
இந்த நிலையில் அலாஸ்கா மற்றும் சைபீரியா பகுதிகளில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டம் மற்றும் அந்த டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அதனை பாது காக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் கால் பந்தை விட பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை .
ரன்வே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி புரிந்தன என்ற கேள்வியும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் டைனோசர் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக்கு காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இணப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் என்பது டிகிரி வெப்ப நிலையில் நீர் கூட உறைந்து பணிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில் டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? நீருக்கு தாவரங்கள் என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு என்ன?அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு காரணம் என்ன?
நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த பனை மர உயரமுள்ள ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் டாக்டர் மைக்கேல் காபின் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன.
தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் பனிப் படலங்கள் உருவாகின.
இதன் மூலம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால் கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் ஆகும்.
சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கான காரணம்
கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.அதனால் அந்தக் கருத்தின் படி சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் ஏற்பட்ட சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கூற இயல வில்லை.
முதல் முதலில் இந்தக் கருத்தை வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாக வெக்னர் கூறினார்.
ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள் முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்கள் பிளவு பட்டு பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால் இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறிய படி கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.
எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று புவியியலாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
அப்பொழுது கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
ஆனால் அதன் அடிப்படையில் டாக்டர் ஹாரி ஹெஸ் என்பவர் வெக்னரின் விளக்கத்தை சிறிது மாற்றி அமைந்தார். அதாவது,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது.
டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் வெக்னரின் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்தின் படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அப்படி என்றால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இந்த நிலையில் அதே நாசா அமைப்பினர் கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை குறிப்பதாகக் கூறி ஒரு வரை படத்தையும் வெளியிட்டனர்.
அந்த வரை படத்திலும் கூட இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together)
ஆனால் ,அதே நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில் தெற்காசிய சுனாமியானது ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)என்று முன்னுக்குப் பின் முரணாக இரண்டு உறுதி படுத்தப் படாத விளக்கங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?
குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம் சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே தெற்காசிய சுனாமிக்கும் காரணம் என்பது உறுதியாகிறது.
இவ்வாறு நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை தற்செயலானது என்று கருத இயலாது.
ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை கூற இயல வில்லை.
இந்த நிலையில், அதே ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை கூறியது போன்றே, அமெரிக்க புவியியல் வல்லுநர்கள், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் முன்னுக்கு பின் முரணாக மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ஏன் புவியியல் வல்லுநர்களால் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயல வில்லை ?
குறிப்பாக ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், வட அமெரிக்கக் கண்டத் தட்டு மற்றும் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் பாறைத் தட்டும் நகர்ந்ததால் இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலே காரணம் என்று விளக்கம் கூறும் புவியியல் வல்லுநர்களுக்கு உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்ற முக்கியமான கேள்விக்கு விடை தெரியாத நிலையில் மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இதன் படி வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருத்து உண்மை வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உரசல் காரணமாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளும் பதிவாகி இருக்க வில்லை.
இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' என்றும் அழைக்கப் படுகிறது.
எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ஏன் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தள பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை ராண்டல் ரைட் என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில் பூமியானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
மேலும் இந்தக் கருத்தின் படி வட அமரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கும் புவியியல் வல்லுநர்களுக்கு பதில் தெரிய வில்லை.
குறிப்பாக கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் எரிமலை செயல் பாட்டால் கரீபியன் தீவுக் கூட்ட மானது உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது,
குறிப்பாக தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும் பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது.
எனவே இந்த நிலப் பகுதியைக் கடந்து கரீபியன் பாறைத் தட்டு எப்படி பசிபிக் கடல் பகுதியில் இருந்து தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உருவாகி இருக்க வில்லை என்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் யூகித்தனர்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும் கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன் அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்தானது நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது.மேலும் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் தெளிவாகிறது.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் எரிமலை செயல் பாட்டால் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அந்த புவியியல் வல்லுநர்கள் யூகித்தனர்.
ஆனால் கரீபியன் தீவுகளில் உள்ள எரிமலைகளில் இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.
இது போன்ற குழப்பங்களால் இன்னும் சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் மூன்றாவதாக ஒரு புதிய விளக்கத்தையும் முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான் அதாவது நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே கரிபியன் பாறைத் தட்டும் வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுநர்கள் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் உறுதி படுத்தப் படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது.
ரேடான் வாயு கசிவு - கூடுதல் ஆதாரம்
நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலை செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது
குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாற்றுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் லா அகுலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் இருந்து , ரேடான் என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு கசிந்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலை''களில் இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 08.03.2011 அன்று வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருந்தது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் தெரிவித்த நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும் ரேடான் வாயுவானது கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும் இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படங்கள் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
மேலும் கடந்த 06.02 2023 அன்று துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட துருக்கியில் உள்ள எரிமலை வரிசைக்கு இணையாகவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே
பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாடுகள் காரணமாகவே துருக்கி நில அதிர்ச்சிகள்
ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது .
குறிப்பாகக் கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதுடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதன் மூலம் நில அதிர்ச்சிகளுக்கு எரிமலை செயல்பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
அத்துடன் கண்டங்களின் மேல் பரவலகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
அது மட்டுமின்றி கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன் அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே போன்று கண்டங்களின் மேலும் கடல் தளத்தின் மேலும் ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது
குறிப்பாக கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக தற்பொழுது நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த கருது உண்மையென்றால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும் , ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி ,உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் இன வகைகளின் புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கான காரணம்.
கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருக்கிறது.
கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடல் தரையின் உருவாகக் கூடிய தலையனைப் பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதுடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது குளிர்ந்து இறுகுவதால், பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன.
அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன.
இதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருளை சுரந்து கவசம் போல் பயன்படுத்துகின்றன.அந்த உயிரினங்கள் இறந்த பிறகு அந்த சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் தொடர்ந்து படிவதால் சுண்ணாம்புப் படிவுகள் உருவாகுகின்றன.
இதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழும் பாசிகளும் சுண்ணாம்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.அந்த தாவரங்கள் இறக்கும் பொழுதும் அந்த சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் தொடர்ந்து படிவதால் சுண்ணாம்புப் படிவுகள் உருவாகுகின்றன.
இவ்வாறு ஆழமற்ற கடல் தரையில் படியும் சுண்ணாம்பு படுகைகள் இன்று கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகின்றன.இதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
சில சமயம் கடலுக்கு அடியில் உருவான சுண்ணாம்புப் படிவங்கள் மேல் மெக்னீசியம் அதிகம் உள்ள கடல் நீர் பாயும் பொழுது அந்த சுண்ணாம்புப் படுக்கையானது வேதி வினை மூலம் டோலமைட் என்று அழைக்கப் படும் ஒரு வகை சுண்ணாம்பாக மாறுகிறது.
இவ்வாறு உருவாகும் டோலமைட்டும் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகிறது.
இதே போன்று இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து வாழ்ந்த பாசிகள் உற்பத்தி செய்த ஆக்சிஜனானது கடல் நீரில் இருந்த இரும்புடன் வினை புரிந்து நீரில் கரையாத இரும்பு ஆக்சைடாக மாறி, கடல் தரையில் படிந்ததால் உருவான வரி அடுக்கு இரும்புப் படிவுகளும் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுகிறது.
மேற்கண்ட பல ஆதாரங்களின் மூலம் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கடல் மட்டம் உயந்து கொண்டு இருப்பதற்கு தவறான காரணம்.
கண்டங்கள் நகர வில்லை வளர்கின்றன.'' பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது ''
தற்பொழுது கடல் மட்டம் உயந்து கொண்டு இருப்பதற்கு தவறான காரணம் கூறப் படுகிறது.
எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.
ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர். அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.அத்துடன் வரலாற்றுக்கு காலத்திலேயே கடல் மட்டமானது இருப்பது அடி வரை உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால், தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான கருத்து நிலவுகிறது.
குறிப்பாக வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்'' என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன.
அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர்.
''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்''
சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது.
ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது.
சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர்.
அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்கு மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது.
இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது.
அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
மாறாக பூமிக்குள் சுரக்கும் நீரானது புவியப் பரப்புக்கு மேலே தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது.
இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது.
பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும் பவளம் என்று அழைக்கப் பாடும் குண்டூசி தலை அளவு உள்ள உயிரினமானது ஒரு பூவின் வடிவில் இருக்கும் அதன் இதழ்கள் அசையும் பொழுது அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு பவளங்கள் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளை உயிர்வாழ்கின்றன அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக்க கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது கடல் தரையில் படிகின்றன அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால் கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன.இதனால் கடல் மட்டம் உயர உயர பலவாத் திட்டுகளும் உயர்வதால் அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல் லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன.
பசிபிக் பாடலில் உள்ள பல எரிமலையை சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும் அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன.இதனால் பல பவளத் திட்டு தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன.
இது போன்று மூழ்கிய பவளத் திட்டுகள் குயாட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன.
பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள்
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே.தீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் மேல் உள்ள
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு.அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே. மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ் ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது.
லோ என் குயாட்.
உயரம் கடல் தரையில் இருந்து 14900 ஆதி.உட்சிப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி ஆழத்தில் உள்ளது.
துளையிட்டு ஆய்வு செய்த பொழுது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உருவாக்கப் பட்ட உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
எனிவீடாக் குயாட்.
வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது.இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேப் ஜான்சன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 ஆதி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஹாரிசன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்பு திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது..
அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன.
கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்பு திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சுண்ணாம்பு படி வுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது.
இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுகே கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் களளதை சேர்ந்த டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கு சுண்ணாம்பு பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள பஹாமா சுண்ணாம்பு திட்டானது கடல் தரையில் இருந்து எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறது இதன் மூலம் கடல் பட்டமானது எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள்
வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள கிரேட் ஏரியை சுற்றிலும் சில்லூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட உப்புப் பாறைகள் காணப் படுகின்றன .
அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு பாறைகளும் காணப் படுகின்றன.
அதே போன்று வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள குடாலூப் பாமாலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியிவாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டும் காணப் படுகிறது.
.அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது.
இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அத்துடன் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து கொண்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
தற்பொழுது கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுது இருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதனால் சில புவியியல் அமைப்புகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.
மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம்.
தற்பொழுது அறிவியல் உலகில் விடுவிக்கப் பபடாத நிலையில் இருக்கும் ''மத்திய தரைக் கடலடி ராட்சத உப்புப் படிவ பிரச்சினை'' மற்றும் '''பசிபிக் கடலடி ராச்சத சுண்ணாம்புத் திட்டுப் படிவப் புதிர்களுக்கு'' விளக்கம் கூறுகிறேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்து, அந்த உப்புப் படிவங்கள் எப்படி உருவாகி இருக்க முடியும் என்ற புதிரை விடுவிக்க, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம்.
இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும்.
ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள்.
அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைந்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள்.
இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன .
இது போன்று பல முறை நிகழ்ந்ததால் நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன.
அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராச்சத குழாய்களை செலுத்தி கடல் தரையை துளையிட்ட பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது.
சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.
கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும்.ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான்.
தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர்.
பெரிய ஆவியாதல் விளக்கம்
குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது.
மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது.
குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது.
அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கதைக் கூற இயல வில்லை.
முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும் பல முறை முழுவதும் ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையம் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மத்திய தரைக் கடல் மற்றும் காஸ்பியன் கடல் உருவானது எப்படி?
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது. அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் அதை சூழ்ந்து பாந்தலாசா என்ற ஆழமற்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்நம்பப் படுகிறது.இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், யுரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்ததாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாக நம்பப் படுகிறது. அதே போன்று கோண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையில் நகர்ந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் டெதிஸ் கடல் மூடப் பட்டதாவும் நம்பப் படுகிறது.இவ்வாறான கண்டங்களின் நகர்ச்சியால் ஐரோப்பா,ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கு இடையில் சிராய்ப்பு பட்ட டெதிஸ் கடலே மத்திய தரைக் கடலாக உருவானதாகவும் நம்பப் படுகிறது.இதே போன்றுதான் நிலப் பகுதியால் சூழப் பட்ட காஸ்ப்பியன் கடலும் உருவானதாகவும் நம்பப் படுகிறது.இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலில் இருக்கும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது மற்ற கடலில் காணப் படும் உப்பை விட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலில் காணப் படும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டமானது ஐரோப்பா கண்டத்த்தை நெருக்கியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக நம்பப் படுகிறது. அதனாலேயே ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாக விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்று புதை படிவ ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கூறி இருந்தேன்.
அதன் அடிப்படையில் கடலானது பூமிக்குள் இருந்து மேற்பரப்பிற்கு சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்த நீரால் உருவானது என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதையும் ஆதாரபூர்வமாக விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்து இருக்கிறது.அப்பொழுது அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.மறுபடியும் கடல் மட்டம் உயர்ந்ததால் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. மறுபடியும் கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.இது போன்று பல முறை கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்ததால் மத்திய தரைக் கடல் தரையின் மேல் ஒன்றரை அடி உயரத்திற்கும் மூன்று அடி உயரத்திற்கும் ராட்சத உப்புப் படிவங்கள் உருவானது.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்ததால் உப்பு படியும் வேகமும் குறைந்தது அதனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து ஏற்கனவே படிந்த உப்புப் படிவமானது கடலில் மூழ்கியது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பதை போலவே அட்லான்டிக் கடலுக்கு அடியிலும் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது மத்திய தரைக் கடலைப் போலவே அட்லான்டிக் கடலின் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.
குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் சுண்ணாம்பு மலை உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாந்தி நண்டு நத்தை சிப்பி கிளிஞ்சாப் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ?
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் கண்டது தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் 'டெதிஸ்' என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது மற்ற பெருங் கடலில் உள்ளதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை.
காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது.
குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.
எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், காஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம்.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.
ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும்.
அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்
பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
பனிப் பந்து பூமி.
கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.
அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர்.
அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பனிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும் அப்பொழுது கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர்.
மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மில, வாயு கடலில் கலந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது,
ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளையும் முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை.
எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை.
வரிப் பட்டை இரும்பு படிவுகள்
சுண்ணாம்பை போலவே நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு இன்று உலகில் பல பகுதிகளில் பல நூறு அடி உயரத்திற்கு படிவுகளாக காணப் படுகிறது.
குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது.இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது.
இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது.ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது மூவாயிரத்தி அடி உயரத்துடன் மலையை போன்று உருவாகி இருக்கிறது.
தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.
370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது.எனவே 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால் கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால் வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால் இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு பைடிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின.
அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது பெரும் அளவில் இருந்த கடலில் கலந்ததால் மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணையந்ததால் கடல் உருவானது அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில் பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறியதாக சம தளத்துடன் இருந்தது.
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக் காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக் காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.
எடியாக் காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
முதல் பனிப் பந்து பூமி
முதலில் எடியாக் காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கனினமான ஓடுகளை சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எடியாக் காரா காலத்திற்கு முன்பு அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது.
பல முறை ஏற்பட்ட பனிப் பந்து பூமி
வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் பதிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பணியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரெட்னரு உயர்ந்து கண்டங்களின்ப மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் பாடியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது.
அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர்.
அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் பதிவுகளுக்கு கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர்.
உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது கண்டங்களின் மேலே கடல் வருகிறது.அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாக்குகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மைய பகுதி பெருக்கமடைவதால் பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.
விஞ்ஞானி.க.பொன்முடி.
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-20407983472492034882023-09-06T03:21:00.005-07:002023-09-06T03:21:49.577-07:00எனது ஐந்து கண்டு பிடிப்புகள்.விஞ்ஞானி.க.பொன்முடி. ஐந்து முக்கிய புவியியல் நிகழ்வுகளுக்கு விடை கண்டு பிடித்து இருக்கிறேன்.
ஒன்று.
சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம்.
இரண்டு.
துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம்.
மூன்று.
மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம்.
நான்கு.
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு மற்றும் இரும்புப் படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் பாடுவதற்கான காரணம்.
ஐந்து
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதற்கான காரணம்.
00000000
ஒன்று.
சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம்.
0000000
தெற்காசிய சுனாமிக்கு காரணம் கண்டு பிடிப்பு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் ஏன் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த ஆய்வுக்கு கட்டுரையின் நோக்கம்.
கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together)
ஆனால் ,அதே நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில் தெற்காசிய சுனாமியானது ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)என்று முன்னுக்குப் பின் முரணாக இரண்டு உறுதி படுத்தப் படாத விளக்கங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு கொள்கையின் படி
கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பெரிய பாறைத் தட்டுகளாக ( டெக்டானிக் பிளேட்ஸ் ) நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் மற்றோரு கண்டத்தின் ஒரப் பகுதியானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்வதால் நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
மேலும் இந்தக் கருத்தின் படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
அப்படி என்றால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இந்த நிலையில் அதே நாசா அமைப்பினர் கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை குறிப்பதாகக் கூறி ஒரு வரை படத்தையும் வெளியிட்டனர்.
அந்த வரை படத்திலும் கூட இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெற்காசிய சுனாமிக்கு முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் உறுதி படுத்தப் படாத இரண்டு விளக்கங்களை தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே கண்டத் தட்டுகள் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கிறது என்று அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றார்கள்.
எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?
குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம் சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே தெற்காசிய சுனாமிக்கும் காரணம் என்பது உறுதியாகிறது.
இவ்வாறு நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை தற்செயலானது என்று கருத இயலாது.
ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை கூற இயல வில்லை.
இந்த நிலையில், அதே ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை கூறியது போன்றே, அமெரிக்க புவியியல் வல்லுநர்கள், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் முன்னுக்கு பின் முரணாக மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஹைத்தி தீவில் 12.1.2010 அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ஏன் புவியியல் வல்லுநர்களால் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தைக் கூற இயல வில்லை ?
குறிப்பாக ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், வட அமெரிக்கக் கண்டத் தட்டு மற்றும் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் பாறைத் தட்டும் நகர்ந்ததால் இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலே காரணம் என்று விளக்கம் கூறும் புவியியல் வல்லுநர்களுக்கு உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்ற முக்கியமான கேள்விக்கு விடை தெரியாத நிலையில் மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இதன் படி வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கருத்து உண்மை வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உரசல் காரணமாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளும் பதிவாகி இருக்க வில்லை.
இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' என்றும் அழைக்கப் படுகிறது.
எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ஏன் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தள பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை ராண்டல் ரைட் என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில் பூமியானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
மேலும் இந்தக் கருத்தின் படி வட அமரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கியும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கும் புவியியல் வல்லுநர்களுக்கு பதில் தெரிய வில்லை.
குறிப்பாக கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் எரிமலை செயல் பாட்டால் கரீபியன் தீவுக் கூட்ட மானது உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது,
குறிப்பாக தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும் பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது.
எனவே இந்த நிலப் பகுதியைக் கடந்து கரீபியன் பாறைத் தட்டு எப்படி பசிபிக் கடல் பகுதியில் இருந்து தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உருவாகி இருக்க வில்லை என்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகு மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் யூகித்தனர்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு புதை படிவங்களை தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும் கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன் அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்தானது நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.
முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது.மேலும் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் தெளிவாகிறது.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் எரிமலை செயல் பாட்டால் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்று அந்த புவியியல் வல்லுநர்கள் யூகித்தனர்.
ஆனால் கரீபியன் தீவுகளில் உள்ள எரிமலைகளில் இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது அட்லாண்டிக் கடல் மாதிரிக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.
இது போன்ற குழப்பங்களால் இன்னும் சில புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் மூன்றாவதாக ஒரு புதிய விளக்கத்தையும் முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான் அதாவது நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே கரிபியன் பாறைத் தட்டும் வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுநர்கள் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் உறுதி படுத்தப் படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது.
ரேடான் வாயு கசிவு - கூடுதல் ஆதாரம்
நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலை செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது
குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாற்றுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் லா அகுலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் இருந்து , ரேடான் என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு கசிந்து இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலை''களில் இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 08.03.2011 அன்று வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருந்தது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் தெரிவித்த நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும் ரேடான் வாயுவானது கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும் இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படங்கள் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது.
மேலும் கடந்த 06.02 2023 அன்று துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட துருக்கியில் உள்ள எரிமலை வரிசைக்கு இணையாகவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே
பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாடுகள் காரணமாகவே துருக்கி நில அதிர்ச்சிகள்
ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது .
முதலில் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்ற முடிவுக்கு புவியியல் வல்லுநர்கள் எப்படி வந்தனர் என்ற கேள்வி எழுகிறது.
முதல் முதலில் இந்தக் கருத்தை வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாக வெக்னர் கூறினார்.
ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள் முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்கள் பிளவு பட்டு பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால் இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் வெக்னர் கூறிய படி கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை.
எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று புவியியலாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது.
அப்பொழுது கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
ஆனால் அதன் அடிப்படையில் டாக்டர் ஹாரி ஹெஸ் என்பவர் வெக்னரின் விளக்கத்தை சிறிது மாற்றி அமைந்தார். அதாவது,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளிவந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது.
டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் வெக்னரின் நகரும் கண்டங்கள் கருத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லாததை போலவே டாக்டர் ஹாரி ஹெஸ்ஸின் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்பது ,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதன் அடிப்படையில், ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதுடன் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதன் மூலம் நில அதிர்ச்சிகளுக்கு எரிமலை செயல்பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.
அது மட்டுமின்றி கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன் அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே போன்று கண்டங்களின் மேலும் கடல் தளத்தின் மேலும் ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது
குறிப்பாக கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக தற்பொழுது நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த கருது உண்மையென்றால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் அருகருகே உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும் , ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி ,உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு, பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் இன வகைகளின் புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
00000
இரண்டு.
துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம்.
000000
கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,புவியியலாளர்களால் நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் ,ஆர்க்டிக் பகுதியில் ''ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு'' வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,தொல் விலங்கியல் வல்லுநர்களால் ,விளக்கம் கூற இயல வில்லை.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்காவின் வட பகுதியான ''அலாஸ்கா'' மற்றும் ஆசியாவின் வட பகுதியான ''சைபீரியா'' பகுதிகளானது கடந்த ''பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே'' கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்கு நகர்ந்து வந்து விட்டது.
இந்த நிலையில் அலாஸ்கா மற்றும் சைபீரியா பகுதிகளில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டம் மற்றும் அந்த டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அதனை பாது காக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.
சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் கால் பந்தை விட பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை .
ரன்வே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி புரிந்தன என்ற கேள்வியும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் டைனோசர் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.
எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக்கு காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இணப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் என்பது டிகிரி வெப்ப நிலையில் நீர் கூட உறைந்து பணிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில் டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? நீருக்கு தாவரங்கள் என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
தீவுகளிலும் தீவுக் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு என்ன?அதே போன்று ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில்,நார்வே நாட்டு கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையை துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்து மடிந்த பனை மர உயரமுள்ள ,''பிளேட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ''கெர்கூலியன்'' என்று அழைக்கப் படும் ஒரு கடலடி பீட பூமி எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, அந்த பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதன் தொன்மையானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பதை பிரிட்டிஷ் நாட்டு புவியியல் வல்லுனரான டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர்.
அத்துடன்,அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது என்றும் டாக்டர் மைக்கேல் காபின் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.
ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன.
தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் பனிப் படலங்கள் உருவாகின.
இதன் மூலம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால் கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுடன் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தின் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் ஆகும்.
'' பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.கண்டங்கள் நகர வில்லை வளர்கின்றன.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது ''
கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும் கடல் தரையின் உருவாகக் கூடிய தலையனைப் பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதுடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் டைனோசர் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியின் அளவானது அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மத்திய தரைக்கு கடலில் அமையானது இருக்கும் மால்டா தீவானது இறந்து போன கடல் உயிரினங்களின் உடலில் இருந்த சுண்ணாம்புப் பொருளானது கடல் தரையின் மேல் படிந்ததால் உருவான பாறை அடுக்குகளால் ஆனது.இதன் மூலம் கடல் தரையும் மேல் நோக்கி உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் கண்டங்களின் ஒர பகுதிகளானது ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பதன் மூலம் கண்டங்களுடன் கடல் தளமும் விரிவடைந்ததால் தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதிகள் பிளவு பட்டு பிரிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.ஆக மொத்தம் பூமியின் அளவானது அதிகரித்து இருப்பதும் நிரூபணமாகிறது.
ஆனால் தற்பொழுது புவியியல் வல்லுநர்கள் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாக நம்புகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் முடிவாக அந்தக் கடல் தளத்துக்கு என்ன நேர்கிறது என்ற கேள்வி எழுந்தது.
அதே போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தக் கேள்விக்கு புவியியல் வல்லுநர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர்.
அதாவது ஒரு இடத்தில் புதிய கடல் தளம் உருவாகுவதை போலவே இன்னொரு பகுதியில் அந்தக் கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது. அதனால் பூமியின் அளவானது அதிகரிக்காமல் இருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
அத்துடன் பூமிக்குள் செல்லும் கடல் தளமானது வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொன்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளாக உருவாகுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்கள் தென் துருவப் பகுதியில் இருந்து அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி தீவுக் கண்டங்களாக நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்புகின்றனர்.இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும் அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்ததற்கு அண்டார்க்டிக்காக் கண்டத்திற்கு அடியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததே காரணம் என்றும் நம்பப் படுகிறது.
இவ்வாறு இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து ஆசியாக் கண்டத்தின் தென் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதியதால் இமய மலை புடைத்துக் கொண்டு உயர்ந்தது என்று கூறப் படுகிறது.அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு வடக்கு பகுதியில் முன்பு இருந்த கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் சென்று அழிந்த பிறகு மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தை பொத்துக் கொண்டு எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்றும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர் .
இவ்வாறு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களுக்கு வடக்கில் இருந்த கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்திற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இருப்பினும் தற்பொழுது அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
அப்படி என்றல் அண்டார்க்டிக்காக் கண்டமானது எந்தத் திசையை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரையில் அகழிகளும் இல்லை.அதே போன்று அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகளும் இல்லை.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது. அப்படி என்றால் ஆப்பிரிக்கக் கண்டமும் எந்தத் திசையை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரையில் அகழிகளும் இல்லை.அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் எரிமலைகளும் இல்லை.
ஆனால் இந்த இரண்டு கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொன்மை குறைந்த பாறைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உலக அளவிலான வரை படத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.இதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாகிறது.
பசிபிக் நெருப்பு வளையம் -
குறிப்பாக பசிபிக் கடலை சுற்றிலும் கடல் தரையில் அகழிகள் என்று அழைக்கப் படும் பிளவுகள் இருக்கின்றன.அத்துடன் பசிபிக் கடலை சுற்றிலும் எரிமலைகளும் அதிக அளவில் இருப்பதுடன் அந்தப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன இந்த எரிமலை வளையப் பகுதியானது நெருப்பு வளையம் என்றும் அழைக்கப் படுகிறது.
இதன் அடிப்படையில் புவியியல் வல்லுநர்கள் ,அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி விலகி நகரும் அதே வேளையில் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் கடல் தளமானது பசிபிக் கடலை சுற்றிலும் அமைந்து இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகளுக்கு அருகில் மறுபடியும் பூமிக்குள் சென்று அழிகிறது.அவ்வாறு அழிந்த பிறகு பாறைக் குழம்பாக மாறி மேல் நோக்கி உயர்ந்து மறுபடியும் கடல் தளத்தை பொத்துக் கொண்டு கடல் தளத்துக்கு மேலாக எரிமலைகளாக உருவாகின்றன.
அதனால்தான் பூமியின் அளவானது அதிகரிக்காமல் இருக்கிறது என்று புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.அத்துடன் பசிபிக் கடலை சுற்றிலும் கடல் தளமானது பூமிக்குள் உரசியபடி செல்வதால்தான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்று புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை என்றால் பசிபிக் பெருங் கடலை சுற்றிலும் தொடர்ச்சியாக அகழிகள் மற்றும் எரிமலைகள் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் பசிபிக் பெருங் கடலை சுற்றிலும் அகழிகள் மற்றும் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருக்க வில்லை.இதன் மூலம் பசிபிக் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் அடியில் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அதன் பிறகு கடல் தரை அழிந்து பாறைக் குழம்பாக உருவாகி மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களை மேலும் எரிமலைகளாக உருவாகுவதாக கூறப் படும் விளக்கம் தவறு என்பதுடன், நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளும் கடல் தளமானது கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான் ஏற்படுகிறது என்ற விளக்கமும் தவறு என்பதும் தெளிவாகிறது.
கடல் தரையில் அகழிகள் எப்படி உருவாகுகின்றன?
உண்மையில் கண்டங்களும் தீவுகளும் கடல் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் கடல் தரையில் ஏற்பட்ட பள்ளங்களே அகழிகளாக உருவாகி இருக்கின்றன.
அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகுகிறதா? பூகோள ரீதியில் சாத்தியமற்ற விளக்கம்.
அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதைப் போலவே, அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றியும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம்,தென் துருவப் பகுதியில் இருந்து, வட பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அண்டார்க்டிக்காக் கண்டமானது தென் துருவப் பகுதியில் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கிறது.
எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால், எப்படி அதிக சுற்று வட்டப் பகுதியான , வட பகுதியை நோக்கி நகர்ந்து, அதிக சுற்று வட்டப் பகுதியை நிரப்ப இயலும்? என்ற கேள்வி எழுகிறது.
பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை என்பதே இந்தக் கேள்விக்கு பதில் ஆகும்.
அதே போன்று அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும், பெரிய சுற்று வட்டப் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகிக் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் அமைந்து இருக்கும், அண்டார்க்டிக்காக் கண்டத்தை நோக்கிக் கடல் தளம் நகர்ந்தால், பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி உடைந்து விடும்.
எனவே அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றிலும், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி, நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம், பூகோள ரீதியில் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும்.
குறிப்பாகப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும் பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து, கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்தது என்று நம்பப் படுகிறது.
அதன் பிறகு அண்டார்க்டிக்காக் கண்டத்தைச் சுற்றி பிளவுகள் உருவாகி,அந்தப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி வடமேற்கு திசையை நோக்கியும், வட கிழக்கு திசையை நோக்கியும் விலகி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் தென் அமெரிக்காகண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் யாவும், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அண்டார்க்டிகாக் கண்டத்தை சுற்றிலும் வட கிழக்கு மற்றும் வட கிழக்கு என இரு வேறு திசைகளை நோக்கி கடல் தளம் உருவாகி விலகி நகரவும் சாத்தியம் இல்லை.
ஆனால், தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் உள்ள பன்டா ஏரினா வுக்கும், ஆப்பிரிக்காவின் தென் முனைப் பகுதியான கேப் டவுனும், 7024 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று கேப் டவுனும், ஆஸ்திரேலியாவின் தென்பகுதித் தீவான டாஸ்மேனியாவும், 10,122 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
அதே போன்று டாஸ்மேனியாவும், தென் அமெரிக்காவின் பன்டா ஏரினாவும், 8916 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
இந்த மூன்று இடங்களுக்கு இடையேயான, தூரத்த்தின் கூட்டுத் தொகையானது, 20,066 கிலோமீட்டர்.
அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனைப் பகுதியில் இருந்து கிழக்கு திசையை நோக்கி புறப்பட்டு பூமியை வலம் வந்து மறுபடியும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனைப் பகுதியை அடைய வேண்டும் என்றால்,அதற்கு 20,066 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால்,அண்டார்க்டிக் கண்டமானது அறுபத்தி ஆறரை அட்ச ரேகைப் பகுதியில்,குறிப்பாக அண்டார்க்டிக் வளையத்திற்குள் அமைந்து இருக்கிறது.இந்த அட்ச ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவானது, 17,662 கிலோ மீட்டர்.
எனவே 17,662 கிலோ மீட்டர் சுற்றளவில் உருவான புதிய கடல் தளத்தால், எப்படி வடபகுதியை நோக்கி நகர்ந்து, 20,066 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை நிரப்பியது? என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவான கடல் தளத்தால், அதிக சுற்றுவட்டப் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியை நிரப்ப இயலாது.
எனவே பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்கள் யாவும், தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், அதன் பின்னர், தென் பகுதியில் உருவான கடல் தளத்தின் மேல் இருந்தபடி, வடபகுதியை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப் படும், விளக்கமானது பூகோள ரீதியில் முற்றிலும் தவறு என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் புதிய கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் பூகோள ரீதியில் சாத்தியமற்ற விளக்கம் ஆகும்.
முக்கியமாக பூமியின் தென் துருவப் பகுதியில் குறைந்த வட்டப் பகுதியில் அமையானது இருக்கும் அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகரும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும் அதே நேரத்தில், அண்டார்க்டிக்காக் கண்டத்தை சுற்றிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகரும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி என இரு வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
அதே போன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கூட இரு வேறு திசைகளை நோக்கி கடல் தளங்களுடன் தனித்த தனியாக விலகி நகர்ந்து கொண்டு இருக்கவும் பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.
குறிப்பாக பூமியானது நில நடுக் கோட்டுப் பகுதியில் சற்று புடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் அதன் தென் பகுதியானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் அந்த கண்டமானது ஒரு தனிப் பாறைத் தட்டாக உடைந்து சிதறாமல் நில நடுக்க கோட்டுப் பகுதியை கடந்து வர சாத்தியம் இல்லை என்பதை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் அரேபியப் பீட பூமிப் பகுதிக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.இந்த விளக்கம் முற்றிலும் முரணான விளக்கம் ஆகும்.குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஏற்கனவே கூறப் பட்ட விளக்கத்திற்கு முற்றிலும் முரணான விளக்கம் ஆகும்.
உண்மையில் அரேபிய பீட பூமியின் பகுதியின் ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒர பகுதிக்கும் ஆசியாவின் ஈரான் நிலப் பகுதியின் ஒர பகுதிக்கும் இணையாக இருப்பதன் மூலம் முன் ஒரு காலத்தில் அரேபிய நிலப் பகுதியானது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களின் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன் நிலப் பகுதியானது உயர்ந்ததால் இன்னும் சொல்லப் போனால் பூமியானது விரிவடைந்ததால் தனியாகப் பிரிந்து இருப்பதும் புலனாகிறது.
அதாவது கடல் தளத்துடன் உயர்ந்து இருப்பதும் பிளவு பட்டு பிரிந்து இருப்பதும் தெளிவாக வெளிப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கண்டங்களின் ஒர பகுதியானது ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதற்கு பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்று நிரூபணமாகிறது.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாலும் விரிவடைந்து கொண்டு இருப்பதாலும் வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டு அதனால் பாஜா கலிபோர்னியா தீப கர்ப்பம் உருவாகி இருக்கிறது.
அத்துடன் வட அமெரிக்கக் கண்டத்தின் உயர்வால் கலிபோர்னியா பகுதியில் சான் ஆண்டிரஸ் பகுதியில் நிலத்தில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டு இருக்கிறது.
இதே போன்று கலிபோர்னியா மாகாணத்திலும் பல இடங்களில் நில முறிவுகள் ஏற்பட்டு இருப்பதுடன் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது.குறிப்பாக கலிபோர்னியா மாகாணமானது ''உலகின் நில அதிர்ச்சி தலை நகரம்'' என்றும் அழைக்கப் படுவது குறிப்பித் தக்கது .
இதே போன்று வட அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கு,தென் இந்தியாவில் உள்ள டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படும் தக்காணப் பீட பூமி அடுக்குப் பாறைப் பள்ளத் தாக்கு உள்பட மற்ற கண்டங்களில் காணப் படும் பிளவுப் பள்ளத் தாக்குகள் எல்லாம் அந்தக் கண்டங்கள் உயர்ந்ததால் பிளவு பட்டு உருவானவைகள் ஆகும்.அதே போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப் படும் பிளவுப் பள்ளத் தாக்கும் அந்த கண்டம் உயர்ந்ததால் பிளவு பட்டு உருவானது.
இந்த நிலையில் கலிபோர்னியா பல்கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணரான டேனியல் புரோஸ்ட் பூமியின் மையக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு பூமியின் மையக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாலேயே கண்டங்கள் உயர்ந்து கொண்டு இருப்பதுடன் ஒன்றில் இருந்து ஒன்று பிளவு பட்டு விலகி நகர்ந்து இருப்பதும் தெளிவாகிறது.
இதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெளிவாகிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயந்து கொண்டு இருப்பதற்கு தவறான காரணம் கூறப் படுகிறது.
எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.
ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர். அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.அத்துடன் வரலாற்றுக்கு காலத்திலேயே கடல் மட்டமானது இருப்பது அடி வரை உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால், தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான கருத்து நிலவுகிறது.
குறிப்பாக வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது. இந்த நிலப் பகுதியானது ''பெர்மா புரோஸ்ட்'' என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு ''எகிப்து மம்மிகளைப் போன்று'' காணப் படுகின்றன.
அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது. குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர்.
''உறைபனி நிலத்தில் கண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள்''
சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது.
ரஸ்யாவின் ''உகுதியா'' பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் ''டி என் ஏ'' குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது.
சைபீரியாவில் 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக் குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி வயிற்றில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடா பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,மாமத் என்று அழைக்கப் படும் பனி யானை இனம் ஏன் அழிந்தது என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக, ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர்.
அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள ''பூக்கும் தாவரங்கள்'' இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் ''சத்து குறைந்த புற்கள்'' மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்களின் இருப்பிடத்தை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்கு மூழ்கிய மரங்கள் இருக்கும் கடலடிக் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
கார்பன் காலக் கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப் பட்டது.
இதே போன்று ஐரோப்பாவில் ''நார் போல்க்'' நகரத்தில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர்.
குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மற்றும் மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் ''டோகர் லேன்ட்'' என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது.
அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது ''பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு'' முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு அடி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ''ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது'' ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
மாறாக பூமிக்குள் சுரக்கும் நீரானது புவியப் பரப்புக்கு மேலே தொடர்ந்து வருவதால்,கடல் மட்டம் உயர்வதால் கடலின் பரப்பளவு அதிகரிப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து அதன் காரணமாக குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் இருந்த காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் தெளிவாகிறது.
காஸ்பியன் கடல் எப்படி உருவானது ?
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் கண்டது தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் 'டெதிஸ்' என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது மற்ற பெருங் கடலில் உள்ளதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை.
காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது.
குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.
எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், காஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது.அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு.
பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம்.
லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.
ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது.
இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது
இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும்.
அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்
பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கண்டங்கள் மற்றும் தீவுகளின் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் கடந்த காலத்தில் பூமியானது ஒரு நீர்க் கிரகமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது பூமியின் துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கடந்த காலத்தில் பூமியின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்து இருப்பதும் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் வாழ்ந்த தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
0000
மூன்று.
மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம்.
0000000
தற்பொழுது அறிவியல் உலகில் விடுவிக்கப் பபடாத நிலையில் இருக்கும் ''மத்திய தரைக் கடலடி ராட்சத உப்புப் படிவ பிரச்சினை'' மற்றும் '''பசிபிக் கடலடி ராச்சத சுண்ணாம்புத் திட்டுப் படிவப் புதிர்களுக்கு'' விளக்கம் கூறுகிறேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்து, அந்த உப்புப் படிவங்கள் எப்படி உருவாகி இருக்க முடியும் என்ற புதிரை விடுவிக்க, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம்.
இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும்.
ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள்.
அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைந்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள்.
இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன .
இது போன்று பல முறை நிகழ்ந்ததால் நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன.
அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும்.
இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராச்சத குழாய்களை செலுத்தி கடல் தரையை துளையிட்ட பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது.
சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.
கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும்.ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான்.
தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர்.
பெரிய ஆவியாதல் விளக்கம்
குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது.
மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது.
குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது.
இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது.
அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது.
ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு பல முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கதைக் கூற இயல வில்லை.
முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும் பல முறை முழுவதும் ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையம் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மத்திய தரைக் கடல் மற்றும் காஸ்பியன் கடல் உருவானது எப்படி?
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது. அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்கு பாஞ்சியா என்றும் அதை சூழ்ந்து பாந்தலாசா என்ற ஆழமற்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியா கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்நம்பப் படுகிறது.இதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் பூமத்திய ரேகைப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், யுரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்ததாகவும் அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையில் நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாக நம்பப் படுகிறது. அதே போன்று கோண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையில் நகர்ந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் டெதிஸ் கடல் மூடப் பட்டதாவும் நம்பப் படுகிறது.இவ்வாறான கண்டங்களின் நகர்ச்சியால் ஐரோப்பா,ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கு இடையில் சிராய்ப்பு பட்ட டெதிஸ் கடலே மத்திய தரைக் கடலாக உருவானதாகவும் நம்பப் படுகிறது.இதே போன்றுதான் நிலப் பகுதியால் சூழப் பட்ட காஸ்ப்பியன் கடலும் உருவானதாகவும் நம்பப் படுகிறது.இந்த விளக்கம் உண்மை என்றால் காஸ்பியன் கடலில் இருக்கும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும்.
ஆனால் காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது மற்ற கடலில் காணப் படும் உப்பை விட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலில் காணப் படும் உப்பின் அளவானது மற்ற கடலில் இருப்பதைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டமானது ஐரோப்பா கண்டத்த்தை நெருக்கியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக நம்பப் படுகிறது. அதனாலேயே ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதாக விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்று புதை படிவ ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கூறி இருந்தேன்.
அதன் அடிப்படையில் கடலானது பூமிக்குள் இருந்து மேற்பரப்பிற்கு சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்த நீரால் உருவானது என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அதே போன்று கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதையும் ஆதாரபூர்வமாக விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்து இருக்கிறது.அப்பொழுது அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.மறுபடியும் கடல் மட்டம் உயர்ந்ததால் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர் மத்திய தரைக் கடலுக்கு நீர் வந்தது. மறுபடியும் கண்டங்கள் உயர்ந்ததால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டது.அதே நேரத்தில் மத்திய தரைக் கடலுக்கு வந்த நீரானது ஆவியானதால் உப்புப் படிவங்கள் உருவானது.இது போன்று பல முறை கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்ததால் மத்திய தரைக் கடல் தரையின் மேல் ஒன்றரை அடி உயரத்திற்கும் மூன்று அடி உயரத்திற்கும் ராட்சத உப்புப் படிவங்கள் உருவானது.
இவ்வாறு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால் நீர் ஆவியாகும் வேகமும் குறைந்ததால் உப்பு படியும் வேகமும் குறைந்தது அதனால் கடல் மட்டம் மட்டும் உயர்ந்து ஏற்கனவே படிந்த உப்புப் படிவமானது கடலில் மூழ்கியது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பதை போலவே அட்லான்டிக் கடலுக்கு அடியிலும் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது மத்திய தரைக் கடலைப் போலவே அட்லான்டிக் கடலின் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.
குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் சுண்ணாம்பு மலை உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாந்தி நண்டு நத்தை சிப்பி கிளிஞ்சாப் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள் கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
நான்கு.
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு மற்றும் இரும்புப் படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் பாடுவதற்கான காரணம்.
00000
ஐந்து
ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதற்கான காரணம்.
000000
பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள்
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே.தீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் மேல் உள்ள
ரிசல்யூசன் குயாட்
பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு.அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டுஉள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின் குயாட்
டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் என்று அழைக்கப் படும் கடல் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது.
டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
ஆலிசன் குயாட்.
டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும் அமைந்து இருக்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலே. மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ் ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது.
லோ என் குயாட்.
உயரம் கடல் தரையில் இருந்து 14900 ஆதி.உட்சிப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி ஆழத்தில் உள்ளது.
துளையிட்டு ஆய்வு செய்த பொழுது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உருவாக்கப் பட்ட உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
எனிவீடாக் குயாட்.
வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது.இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேப் ஜான்சன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 ஆதி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது.
அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஹாரிசன் குயாட்..
கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்பு திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது..
அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன.
டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன.
கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்பு திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சுண்ணாம்பு படி வுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது.
இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுகே கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் களளதை சேர்ந்த டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கு சுண்ணாம்பு பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள பஹாமா சுண்ணாம்பு திட்டானது கடல் தரையில் இருந்து எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறது இதன் மூலம் கடல் பட்டமானது எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள்
வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள கிரேட் ஏரியை சுற்றிலும் சில்லூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட உப்புப் பாறைகள் காணப் படுகின்றன .
அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன் ஆழமற்ற கடல் பகுதியில் உருவான சுண்ணாம்பு பாறைகளும் காணப் படுகின்றன.
அதே போன்று வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள குடாலூப் பாமாலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியிவாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டும் காணப் படுகிறது.
.அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது.
இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஏனென்றால் நாம் பயன் படுத்தும் சுண்ணாம்பு பொருளானது தொண்ணூறு முதல் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்டது ஆகும்.இவ்வாறு உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவங்களானது உலகெங்கும் பல பகுதிகளில் காணப் படுகிறது.
எனவே ஆழமற்ற கடல் பகுதியில் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவங்கள் கண்டங்களின் மேல் பல இடங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
ஏற்கனவே நான் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து பின்னர் தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
அத்துடன் கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படும் ராட்சத உப்புப் படிவங்கள் அடிப்படையில் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான சுண்ணாம்புப் படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.
அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் அதே போன்று எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்புகின்றனர்.
அதன் பிறகு பல எரிமலைகளில் இருந்து வெளிவந்த கரிய மில வாயு வளி மண்டலத்தில் திரண்டதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகரித்ததாகவும் ஆதனால் பூமியின் மேல் இருந்த பணிப் படலங்களானது உருகி பனிப் பாறைகளாக நகர்ந்து சென்று கடலில் கலந்ததாகவும் அப்பொழுது கடல் நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததால் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்த பொழுது அதில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கண்டங்களின் மேல் படிந்ததாகவும் நம்புகின்றனர்.
மேலும் வளி மண்டலத்தில் இருந்த அதிகப் படியான கரிய மிலா, வாயு கடலில் கலந்து வந்ததும் காரணம் என்று நம்பப் படுகிறது,
ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பனிப் பந்து பூமி கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை ஏனென்றால் பூமி முழுவதும் பல நூறு அடி உயரத்திற்கு பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பனியால் மூடப் பட்டு இருந்தால் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே சூரிய ஒளி உதவியுடன் வாழ்ந்து வந்த பலவகை நுண்ணுயிரிகளும் பாசிகளை முற்றிலும் அழிந்திருக்கும்.ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .பல லட்சம் ஆண்டு காலமாக பூமியின் மேல் பனிப் படலங்கள் நகர்ந்து சென்று இருந்தால் , பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்ட படிவுகளும் அழிந்து இருக்கும். அதுவும் நடக்க வில்லை.
எனவே பனிப் பந்து பூமி கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை.
வரிப் பட்டை இரும்பு படிவுகள்
சுண்ணாம்பை போலவே நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு இன்று உலகில் பல பகுதிகளில் பல நூறு அடி உயரத்திற்கு படிவுகளாக காணப் படுகிறது.
குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீள பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது.இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது.
இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது.ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது மூவாயிரத்தி அடி உயரத்துடன் மலையை போன்று உருவாகி இருக்கிறது.
தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.
370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது.எனவே 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது.
அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால் கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால் வளி மண்டலத்தில் இஇஇருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால் இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
எனது விளக்கம்
கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிவந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு பைடிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின.
அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது பெரும் அளவில் இருந்த கடலில் கலந்ததால் மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணையந்ததால் கடல் உருவானது அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில் பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறியதாக சம தளத்துடன் இருந்தது.
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக் காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக் காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.
எடியாக் காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
முதல் பனிப் பந்து பூமி
முதலில் எடியாக் காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கனினமான ஓடுகளை சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது.ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எடியாக் காரா காலத்திற்கு முன்பு அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது.
பல முறை ஏற்பட்ட பனிப் பந்து பூமி
வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் பதிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பணியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரெட்னரு உயர்ந்து கண்டங்களின்ப மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் பாடியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது.
அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர்.
அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் பதிவுகளுக்கு கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர்.
உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது கண்டங்களின் மேலே கடல் வருகிறது.அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாக்குகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன.
இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மைய பகுதி பெருக்கமடைவதால் பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.
விஞ்ஞானி.க.பொன்முடி.
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-50315160558341236982017-05-31T12:09:00.002-07:002017-05-31T18:24:18.071-07:00சுனாமி வீடியோ உரை-5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s1600/vai4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="308" data-original-width="575" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s320/vai4.png" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ?</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து,உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ர</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.</span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">௦௦௦௦௦௦௦௦௦௦</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-48643142348005302402017-05-31T12:08:00.001-07:002017-05-31T18:23:59.362-07:00சுனாமி வீடியோ உரை-4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s1600/vai4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="308" data-original-width="575" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s320/vai4.png" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆர்க்டிக் டைனோசர்கள் ஒரு புதிர் </span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அறுபத்தி ஆறரை டிகிரி வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்குள் இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியிலும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில் இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியிலும்,பதின் மூன்று இன வகையைச் சேர்ந்த,தாவர மற்றும் ஊண் உண்ணி இனவகையைச் சேர்ந்த, டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள்,இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"> தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகலானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"> போன்ற ஊர்வன வகைப் பிராநிகலானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்க</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ளானது,இறந்த தாவரங்களின் பாகங்களை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால், ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்க</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ளானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.</span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து ஆரியப் படாமல் இருந்தது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,அமெரிக்காவின்,புள</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,டைனோசர்களானது</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,எரிக்சன், ,டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார். </span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,டைனோசர்களானது,தங்களின</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அது போன்ற டைனோசர்கள் முட்டைகளை ஆடை காக்கும் சாத்தியம் இல்லை.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அத</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-30893157038254815702017-05-31T12:07:00.000-07:002017-05-31T18:23:41.747-07:00சுனாமி வீடியோ உரை-3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s1600/vai4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="308" data-original-width="575" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s320/vai4.png" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஹைத்தி சுனாமிக்குப் புவியியல் வல்லுனர்கள் கூறிய தவறான விளக்கம்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று, கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிக</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">்கும் கூட,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது,வடஅட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல்தளமானது, தனித் தனியாகப் பிரிக்கப் படாமல், ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியை,’’வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்று,புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற குழப்பமும் புவியியல் வல்லுனர்களுக்கு வந்து விட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றன</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கருத்தானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு டையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் </span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.</span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால், பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே, குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும், ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாதாதால்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால்,உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது, என்பதே உண்மை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம், ஹைத்தி தீவில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உண்மையில், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது,. கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதன் மூலம்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">௦௦௦௦௦</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், கண்டங்களானது,கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமற்ற ஒரு கற்பனைக் கருத்தை நம்பிக் கொண்டு இருப்பதால்தான்,புவியியல் வல்லுனர்களால்,நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிக</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ளுக்கும்,சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று,கண்டத் தட்டு நகர்சிக் கருத்தை நம்பிக் கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்களால்,ஆர்க்ட</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ிக் பகுதியில்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-28307354494018058602017-05-31T12:04:00.002-07:002017-05-31T18:23:23.449-07:00சுனாமி வீடியோ உரை-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s1600/vai4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="308" data-original-width="575" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KW902bro4W5YCDcvw0xD938RYZVy6FImTjiMVGqTSYr_y7o9qPx5f99B-TBidMfyWF449iR-5gJLAkfbGXOD6nWrYmhUwYw4cWWaFrlXmmCobZDg8IxdV__r1hezMPYh01TfwjQ07Yw/s320/vai4.png" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில், நில அதிர்ச்சிகளுக்கும் ,சுனாமிகளும்,புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக,கண்டங்கள் எல்லாம் கண்டங்களை சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன்,தனித்த தனிப் பாறைத்த தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,பாறைத்த தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று,ஒரு பாறைத் தட்டுகளுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது ,சுனாமி உருவாகுவதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்தக் கருத்தை முதன் முதலில் முன் மொழிந்தவர ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">வேக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பப்னிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுயருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வாடா துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">வேக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.</span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் இந்தக் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்ற ஒரு கருத்து ஆகும்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாகக் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள்,நிகழ்ந்த இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்தனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கலானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அத்துடன் அண்டார்க்டிக் கண்டதுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,இந்த இரண்டு கண்டங்களும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வாடா கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">தற்பொழுது, இந்த இரண்டு கண்டங்களும்,ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ,அமைந்து இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே ,இந்த இரண்டு கண்டங்களும் ,இரண்டு தனித் தனியான கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அப்படி இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும்,இடையில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும்,அஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி,நாசாவைச் சேர்ந்த புவியியல் வலுனர்கள் ஒரு வரை பாதத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்த வரை படத்திலும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,தெற்காசிய சுனாமி குறித்து, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வெளியிட்</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ட முதல் அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால், அதே நாசா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாக,முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம் தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,அடிப்படை</span><wbr style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;"></wbr><span class="word_break" style="background-color: white; color: #1d2129; display: inline-block; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"></span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"> ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-62143206564602034692017-05-31T12:03:00.001-07:002017-05-31T18:23:04.014-07:00சுனாமி வீடியோ உரை-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiai2p0s1AgtcOgBuPtmGnGoHQskUNO0B3cPif9CAnJ-9n6aAKzVky9TVll96jBTmOSZ2V8gfeVYg_mRVt3ZbSdP1tewu8DzJh2tkQ1Rh5sUuVs4gnLgLrjZwWPez-QODaJsgbOcjOB18w/s1600/vai4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="308" data-original-width="575" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiai2p0s1AgtcOgBuPtmGnGoHQskUNO0B3cPif9CAnJ-9n6aAKzVky9TVll96jBTmOSZ2V8gfeVYg_mRVt3ZbSdP1tewu8DzJh2tkQ1Rh5sUuVs4gnLgLrjZwWPez-QODaJsgbOcjOB18w/s320/vai4.png" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அறிமுக உரை </span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">வணக்கம் நான் விஞ்ஞானி க.பொன்முடி,நான் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனது ஆராய்ச்சியில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஆனால் தற்பொழுது நில அதிர்சிகள் குறித்தும் சுனாமிகள் குறித்தும் தவறான கருத்து நிலவுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்,கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,அந்தப் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதே போன்று,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நழுவிச் செல்லும் பொழுது,சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது எப்படி தெரிய வந்தது என்பது குறித்து நான் சற்று விரிவாக விளக்குகிறேன்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகின என்பது எப்படி தெரிய வந்தது என்பதைப் பற்றி விளக்குகிறேன்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்தனர்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதனால் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன ,என்று எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்தனர்.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும்,குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூவாணி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.</span><span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,ஜியோவானி ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அவர் எச்சரித்ததைப் போன்றே ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால் லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்தது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சிகளும்,சுனாமியும் உருவாகி இருப்பது, ஆதரப் பூர்வமாக உறுதிப் படுத்தப் படுகிறது.</span><br />
<br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">முக்கியமாக,தெற்காசிய சுனாமியானது,இந்தியா இலங்கை போன்ற நாடுகளை தாக்கப் போவதை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிந்து இருக்க முடியும்,</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எப்படியென்றால்,சுமத்ரா தீவின் வட மேற்குப் பகுதியில் உருவான சுனாமியானது, இந்தோனேசியாவைப் பத்தே நிமிடங்களில் தாக்கியது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,அந்த சுனாமி அலைகளானது,சுமத்ரா தீவின் வட மேற்குப் பகுதியில்,இருந்து நூற்றி இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவை,அரை மணி நேரத்தில் தாக்கியது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் பிறகு,அந்த சுனாமி அலைகளானது இந்தியப் பெருங் கடலில் பயணம் செய்து,ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, ,இந்தியா,இலங்கை, மியன்மார்,பங்களா தேஷ்,தாய்லாந்து ,மலேசியா ஆகிய நாடுகளைத் தாக்கியது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இவ்வாறு சுமத்ரா தீவுப் பகுதியில் உருவான சுனாமியானது,அரை மணி நேரத்தில்,கிரேட் நிகோபார் தீவைத் தாக்கிய பிறகு,ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் மற்ற நாடுகளைத் தாக்குவது முதல் முறையல்ல,</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே போன்று,கடந்த,நூற்றி முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,குறிப்பாகக் கடந்த,1883 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம்,இருபத்தி ஏழாம் நாள்,சுமாத்ரா தீவின் தென் பகுதியில் உருவான சுனாமி அலைகளானது அரை மணி நேரத்தில்,கிரேட் நிகோபார் தீவைத் தாக்கிய பிறகு,ஒன்றரை மணி நேரத்தில் ,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் மற்ற நாடுகளைத் தாக்கியது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,இதே போன்ற நிகழ்வு எதிர்காலத்திலும் நடை பெறுவதற்கு சாத்தியம் இருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">எனவே,கிரேட் நிகோபார் தீவின் கடற் கரையில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்திக் கண்காணிப்பதன் மூலம்,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும்,நாடுகளைத் தாக்க வரும் சுனாமி அலைகளை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும்,</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">அதன் அடிப்படையில்,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் நாடுகளைத் தாக்க வரும் சுனாமி அலைகள் குறித்து, ஒரு மணி நேரம் முன்னதாகவே எச்சரிக்கை செய்து அந்த நாடுகளின் கடற்கரையோரம் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்து,அவர்களைச் சுனாமி ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.</span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 13px;">இதே முறையில்,பிலிபைன்ஸ் மற்றும் சாலமன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் தீவுகளில்,ஒரு தீவைச் சுனாமி தாக்குவதைக் கண்காணிப்புக் காமிராக்கள் மூலம் அறிந்து மற்ற தீவுகளுக்கு சுனாமி முன் அறிவிப்பை செய்து மக்களைக் காப்பாற்ற முடியும்.</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-69732283822443817922017-03-21T19:06:00.002-07:002017-03-21T19:06:40.191-07:00Einstein gravity explanation disproved.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">Einstein gravity explanation disproved.</span><br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">Einstein has said that the elliptical paths of the planets are caused by a curve near the sun which is caused by the mass of the sun in which the planets are moved.</span><br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">But this explanation is wrong.</span><br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">For example the moon also orbits the earth in an elliptical path.</span><br style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;" /><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">But there is no curve around the earth. For example we can operate satellite around the earth at any direction and at any height. This fact disproved Einstein explanation regardi</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">ng the elliptical path of the planets.<br />One more evidence against Einstein who said that the gravity is not a force.<br />an object called as 3753 Cruithne also called as second moon for Earth orbiting the earth in a horse shoe shape.<br />One more evidence against Einstein.<br />evidence-upsilon Andromeda planet system.<br />in this planet system,the orbit of the inner planet is circular,while the orbits of the outer planets are elliptical.<br />this disproved the Einstein explanation.which state that the elliptical orbit of the planets and the precession of the elliptical orbits of the planets are caused by the curved space, which is caused by the mass of the central star.</span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-26152589724262777242017-03-03T21:22:00.002-08:002017-03-03T21:22:45.147-08:00Both newton and Einstein were wrong.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
My explanation for the tilted orbit of the moon and the planets<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;">Dear sir/madam,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;">Greetings,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;">Sub: The inclinations of the orbit
of the planets are caused by the onward motion of the sun.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;">INTRO<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPus-LEYcSo0EjN4KPkij_pyKaaGn6yxaD5jm9BMlLuwMeslhrFgYu1HTZ-RhkxJpnXnANaLVdtEN9qys5OBxSj2l67dSsITVil9j_c7KjkyPUmZoEpT9fri3RPx1K_Irg-D_26UedhXs/s1600/inc17.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="331" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPus-LEYcSo0EjN4KPkij_pyKaaGn6yxaD5jm9BMlLuwMeslhrFgYu1HTZ-RhkxJpnXnANaLVdtEN9qys5OBxSj2l67dSsITVil9j_c7KjkyPUmZoEpT9fri3RPx1K_Irg-D_26UedhXs/s400/inc17.png" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: white; font-size: 13.5pt; line-height: 115%;">The Moon's orbit about the Earth lies in a plane which is
tilted by about 5.15° with respect to the plane of the<span class="apple-converted-space"> earth’s orbit </span>about the Sun. (If this
tilt was zero, we would have total solar and lunar eclipses every month!)</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><a href="https://www.ifa.hawaii.edu/~barnes/ASTR110L_S03/lunarorbit.html"><span style="text-decoration: none; text-underline: none;">https://www.ifa.hawaii.edu/~barnes/ASTR110L_S03/lunarorbit.html</span></a><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif";">There is no explanation till date why the moon is orbiting
the earth in such a five-degree inclined plane.<o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggDbNYzENhn23hMsAXUlwJJEYpBttBn19_Aa-rjz3ShhKToypG1BycVI2Kb1FXl9saZ3pE7TeK-UCg2Mi8nSsIE_t3wvbSiOzp5yq2SibEbfr8bEZCG4y7LDTgd4OnLxKToMjISdKF1fI/s1600/o19.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggDbNYzENhn23hMsAXUlwJJEYpBttBn19_Aa-rjz3ShhKToypG1BycVI2Kb1FXl9saZ3pE7TeK-UCg2Mi8nSsIE_t3wvbSiOzp5yq2SibEbfr8bEZCG4y7LDTgd4OnLxKToMjISdKF1fI/s400/o19.jpg" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">Why is the plane orbited by the planets around
the Sun inclined or tilted? </span></span><span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif"; font-size: 10.5pt; line-height: 115%;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">During the period of Aristotle, it was
believed that all celestial bodies moved in a circular orbit, having the earth
at the center which was called the Geocentric Model. </span><br />
<span style="background: #FEFEFE;">But, Nicolas Copernicus, a scientist, asserted
that the fixed stars and the Sun remain unmoved and all the planets, including
the earth, revolved around the Sun in a circular orbit. </span><br />
<span style="background: #FEFEFE;">During this period, a researcher called Tycho
Brahe of Denmark recorded the movement of planets every night on the basis of
the background stars. </span><br />
<span style="background: #FEFEFE;">Unfortunately he died before he could complete
his research.</span><br />
<span style="background: #FEFEFE;">Therefore the documents kept by the Tycho
Brahe, now came under the custody of the Johannes Kepler who was the assistant
of Tycho Brahe.</span><br />
<span style="background: #FEFEFE;">Based on the analysis of the documents, Kepler
discovered that all the planets moved around the Sun in an elliptical orbit.</span><br />
<span style="background: #FEFEFE;">Specifically, he discovered that the Sun was
located in a corner of this elliptical orbit. </span><br />
<span style="background: #FEFEFE;">Moreover, Kepler also found out that the
movement of the planets was slow when they were away from the Sun. </span><br />
<span style="background: #FEFEFE;">Similarly; Kepler also discovered that the
speed of the planets increased when they moved closer to the Sun. </span><br />
<span style="background: #FEFEFE;">But, Kepler was not aware why the planets were
orbiting the Sun in such a manner. </span><br />
<span style="background: #FEFEFE;">Particularly, Aristotle had stated that heavy
objects fall quickly and lighter objects fall slowly. </span><br />
<span style="background: #FEFEFE;">However, by rolling two balls made in light
and heavy wood in an inclined wooden plane, Galileo proved that all objects
fall at the same speed by pointing to both the balls reaching the ground at the
same time. </span><br />
<span style="background: #FEFEFE;">But he did not give any thought to why objects
fall. </span><br />
<span style="background: #FEFEFE;">At this point, Sir Isaac Newton was studying
the comets. He discovered a comet going behind the Sun. He also noticed the
same comet rising from behind the Sun. </span><br />
<span style="background: #FEFEFE;">On the basis of this fact, he found out that the
Sun had gravitational force. </span><br />
<span style="background: #FEFEFE;">He also discovered that the comets are moving
around the Sun because the gravitational pull of the Sun bends their path. </span><br />
<span style="background: #FEFEFE;">Now, a question arose as to why the planets
were moving around the Sun in an elliptical orbit. </span><br />
<span style="background: #FEFEFE;">Newton answered this question by explaining
that the affected gravitational force of other planets was the reason for this
movement. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;">My explanation. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">The positions of the planets change every day.
</span><br />
<span style="background: #FEFEFE;">Hence, given that the path of the planetary
orbit changes to an elliptical path due to the influence of the gravitational
force of other planets, this elliptical path of the planets should change
frequently. </span><br />
<span style="background: #FEFEFE;">But, all the planets are orbiting the Sun in a
similar elliptical path. </span><br />
<span style="background: #FEFEFE;">So, the explanation offered by Newton for the
elliptical path of the planets is wrong. <o:p></o:p></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2iOyjeE1iDDSkBLsnpjuIaq-DByfx9QN_85rq-dWxGR6IX9RkodE5CrsS2XfMudE4c7cv3jEqoJ4hAggwldfitlfSbSi71XJpElaCVKqrjtGlyljTGjjRTCuPpE5T3bLGccMJNCByxCc/s1600/ecc15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="312" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2iOyjeE1iDDSkBLsnpjuIaq-DByfx9QN_85rq-dWxGR6IX9RkodE5CrsS2XfMudE4c7cv3jEqoJ4hAggwldfitlfSbSi71XJpElaCVKqrjtGlyljTGjjRTCuPpE5T3bLGccMJNCByxCc/s320/ecc15.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif";">Particularly, Halley’s Comet, though stated to be revolving
around the Sun once in seventy-five years, revolves around the Sun once in
seventy-five to seventy-six years only. </span><span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">When Halley Comet is revolving around the Sun
in this way, it is believed that a minor change in the path of Halley Comet due
to the gravitational force of Jupiter and Saturn is the reason for this change.</span><br />
<span style="background: #FEFEFE;">But, unlike Halley Comet, all the planets of
the Solar System, including the earth, orbit the Sun in a fixed time span.</span><br />
<span style="background: #FEFEFE;">This proves with evidence that the explanation
offered by Sir Isaac Newton, who stated that the elliptical path of the planets
was caused by the disruption of the gravitational force of the other planets,
was wrong.</span></span><span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho0HCvch9bZeuPXi1pC8LbbdLIsI0B7AISwCHJ2mvZbibs2sC9vM-ACgF5tEM-XPRBhMO0CO0ihjwvO9_YklfRukiqhAj5K0oI_8N-e1XdtjoPU841ZzmCHUaHFtAd0tFfv35WFAneEHo/s1600/mob17.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho0HCvch9bZeuPXi1pC8LbbdLIsI0B7AISwCHJ2mvZbibs2sC9vM-ACgF5tEM-XPRBhMO0CO0ihjwvO9_YklfRukiqhAj5K0oI_8N-e1XdtjoPU841ZzmCHUaHFtAd0tFfv35WFAneEHo/s320/mob17.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">At this juncture, it was discovered that the
elliptical path of Mercury had extended beyond the expectation. </span><br />
<span style="background: #FEFEFE;">Hence, a question arose as to why the
elliptical orbit of Mercury was highly extended? </span><br />
<span style="background: #FEFEFE;">Newton could not answer this question. </span><br />
<span style="background: #FEFEFE;">Also, the point of Mercury’s proximity to the
Sun also shifted slightly with every rotation. </span><br />
<span style="background: #FEFEFE;">This means that the elliptical path of Mercury
itself revolves slowly around the Sun like the petals of a flower. </span><br />
<span style="background: #FEFEFE;">Newton could not offer an explanation for the
question, why the point of Mercury’s proximity to the Sun is shifting slightly
with every revolution? <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">The wrong explanation of Einstein. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">At this point, Albert Einstein had offered a
wrong explanation for this puzzle. </span><br />
<span style="background: #FEFEFE;">Importantly, contrary to Newton’s theory,
Einstein stated that gravitation was not a force at all. </span><br />
<span style="background: #FEFEFE;">Moreover, Einstein stated that the space near
the Sun is bent due to the gravity of the Sun and as a result, a large pit is
formed near the Sun. As all the planets travel inside that pit, the paths of
the planets are turned into a curved path. </span><br />
<span style="background: #FEFEFE;">But, presently the scientists have discovered
more than a thousand alien planets on the basis of measuring the movement
caused by the planets in their stars. </span><br />
<span style="background: #FEFEFE;">Hence, it has been proved with evidence that
gravitation is a force as stated by Sir Isaac Newton. </span><br />
<span style="background: #FEFEFE;">It has also been proved with evidence that the
explanation offered by Einstein for the movement of planets was totally wrong. <o:p></o:p></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_nb4_zEjbIo4dpJCbAHG0RIEaUgo1Ye1Nm2YQ6M_XmhnHTiGvFDEr4v-n8BoE4_wF5k4SlwCtxJeoGRWqHe0ltp_mwAZZdcu623rlid87l8P5PhtkVnxnv1sl5dG4HEspKT_cQB95Lq8/s1600/o1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_nb4_zEjbIo4dpJCbAHG0RIEaUgo1Ye1Nm2YQ6M_XmhnHTiGvFDEr4v-n8BoE4_wF5k4SlwCtxJeoGRWqHe0ltp_mwAZZdcu623rlid87l8P5PhtkVnxnv1sl5dG4HEspKT_cQB95Lq8/s320/o1.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjDr0dMhQT9O5q3Ed6dWe00VLfOt_aV0N7PgxQkagfbL0RmKLQXoFVVUHKHS0GmCzgmmGemj8ZfPUQLrof13FqV0f6-ectZebUhq7k_AhjJ427hlEgUpFJbBBHGwHS9Q2E9CQqPyj4Kzk/s1600/plo24.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjDr0dMhQT9O5q3Ed6dWe00VLfOt_aV0N7PgxQkagfbL0RmKLQXoFVVUHKHS0GmCzgmmGemj8ZfPUQLrof13FqV0f6-ectZebUhq7k_AhjJ427hlEgUpFJbBBHGwHS9Q2E9CQqPyj4Kzk/s400/plo24.gif" width="400" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;">Now, a question arises as to why the planets
are revolving around the Sun in an elliptical orbit? <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">To be specific, the Sun is travelling in space
at a speed of 230 kilometers per second (828,000 km/h). </span><br />
<span style="background: #FEFEFE;">The plane in which the Sun is travelling in
space in this manner is called “Galactic Plane”. </span><br />
<span style="background: #FEFEFE;">The planets orbit the Sun travelling at such a
speed in the galactic plane, at an angle of 62 degree. </span><br />
<span style="background: #FEFEFE;">The angle at which the planets orbit the Sun
in this way is called “Ecliptic plane”.</span><br />
<span style="background: #FEFEFE;">But, all the planets do not orbit the Sun in
the same angle. On the contrary, the planets orbit the Sun in different angles.
</span><br />
<span style="background: #FEFEFE;">For example, the orbital plane of Mercury,
which is closer to the Sun, is inclined at 7 degree angle from this common
plane. </span><br />
<span style="background: #FEFEFE;">Similarly, the dwarf planet Pluto, which
orbits the Sun at a long distance in a very large orbital path, is inclined at
17 degree angle from this common plane. </span><br />
<span style="background: #FEFEFE;">In a similar way, the orbital planes of all
other planets are also away from this common plane. </span><br />
<span style="background: #FEFEFE;">Similar to the minor deviation caused in the
point of approaching the Sun by Mercury, the point of approaching the Sun by
other planets also shifts a little with every revolution. </span><br />
<span style="background: #FEFEFE;">This means that the elliptical paths of all
the planets revolve slowly around the Sun like the petals of a flower. </span><br />
<span style="background: #FEFEFE;">A question arises as to why the orbital plane
of the planets is inclined in this way with respect to the plane travelled by
the Sun. </span><br />
<span style="background: #FEFEFE;">Similarly; it is also a matter of question as
to why the point of approaching the Sun by the planets shifts a little with
every revolution. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif";">My Explanation. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">Inclination or tilt is caused in the orbital
plane of the planets due to the Sun travelling in the Galactic Plane at a speed
of 230 kilometers per second. </span><br />
<span style="background: #FEFEFE;">This means that when a planet approaching the
Sun deviates from it, the Sun deviates from its original location and moves far
away. </span><br />
<span style="background: #FEFEFE;">As a result, the path of the planets tilts
when the planet which deviates from the Sun moves towards the Sun’s new
location. </span><br />
<span style="background: #FEFEFE;">Hence, the point of approaching the Sun by the
planets shifts a little when the planets move towards the Sun’s new location in
this way.</span></span><span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";">Similarly, the perihelion shift of the mercury and other planets are
caused by the curved path of the sun.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";">My explanation for the inclination</span><span style="background: #fefefe; font-family: "helvetica" , "sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">The moon is orbiting in a five-degree inclined
plane from the orbital plane of the earth around the Sun.</span><br />
<span style="background: #FEFEFE;">There is no explanation till date why the moon
is orbiting the earth in such a five-degree inclined plane. </span><br />
<span style="background: #FEFEFE;">The reason for the moon orbiting the earth in
a five-degree inclined plane is that, when the moon is orbiting the earth,
while the earth is revolving around the Sun, it is following the Sun which
travels in the space at a speed of 230 kilometers per second.</span><br />
<span style="background: #FEFEFE;">This means that when the Sun is moving forward
in the space, all the planets orbit around the Sun in an upward-downward
movement.</span><br />
<span style="background: #FEFEFE;">Even though the planets travelling in a
vertical path from the direction in which the Sun is travelling, they are not
orbiting the Sun in a ninety-degree angle. On the contrary, they are actually
orbiting the Sun in a sixty-two-degree angle.</span><br />
<span style="background: #FEFEFE;">The plane in which the planets orbit around
the sun in such a way is called ecliptic plane.</span><br />
<span style="background: #FEFEFE;">This is because, eclipses occur due to the
passing of certain planets of the inner circle between the Sun and the planets
of the outer circle.</span><br />
<span style="background: #FEFEFE;">However, all the planets do not orbit in this
common axis, but orbit with a deviation of one or two degrees. </span><br />
<span style="background: #FEFEFE;">For example, Mercury which is closer to the
Sun, orbits around the Sun in a seven-degree inclination from this common
plane.</span><br />
<span style="background: #FEFEFE;">Similarly, Pluto, the farthest planet from the
Sun, is orbiting around the Sun in a seventeen-degree inclination from this
common plane.</span><br />
<span style="background: #FEFEFE;">Eris, a dwarf planet which is even farther
away from Pluto, is orbiting around the Sun in a forty-four-degree inclination
from this common plane. </span><br />
<span style="background: #FEFEFE;">The Sun traveling in the space at a speed of
230 kilometers per second is the reason for the planets orbiting the Sun in an
inclined plane.</span><br />
<span style="background: #FEFEFE;">This means that the planets orbiting the Sun
in an upward to downward direction, at the same time the Sun is moving forward.
This in turn forces the planets to chase the Sun to revolve around it thereby
resulting in the inclination of the orbital plane of the planets. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">This can be effectively reiterated by an
imaginary illustration.<o:p></o:p></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh5fnvr-bFPMGHhC8jnhjiur8jn3qtvOo-JIzK9TSMP74HqF1mcAGv9M5zMK0TY7dHUyYD-S1600F1HTUAe1EAb1hrn5-4JJTLe_GikTrvkmh3TB6JwBK3pCaVCq3vF0rxh-yqC1CZuSc/s1600/inc18.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh5fnvr-bFPMGHhC8jnhjiur8jn3qtvOo-JIzK9TSMP74HqF1mcAGv9M5zMK0TY7dHUyYD-S1600F1HTUAe1EAb1hrn5-4JJTLe_GikTrvkmh3TB6JwBK3pCaVCq3vF0rxh-yqC1CZuSc/s320/inc18.png" width="252" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><span style="background: #FEFEFE;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "helvetica" , "sans-serif";"><br />
<span style="background: #FEFEFE;">Imagine a giant-sized yellow balloon in the
sky.</span><br />
<span style="background: #FEFEFE;">Visualize some crows circling around it in an
upward-downward motion.</span><br />
<span style="background: #FEFEFE;">In this situation, imagine that the giant yellow
balloon is beginning to drift forward.</span><br />
<span style="background: #FEFEFE;">At this point, the crows which were circling
the yellow giant balloon will be forced to follow the balloon to circle it.
This will result in a minor inclination and extension in the circular path of
the crows.</span><br />
<span style="background: #FEFEFE;">Likewise, the orbital path of the planets
revolving around the Sun, which is traveling forward, will also become inclined
and elliptical.</span><br />
<span style="background: #FEFEFE;">At this juncture, also think of a sparrow
circling one of those imaginary crows in an upward-downward direction. </span><br />
<span style="background: #FEFEFE;">You can very well say that the circular path
of the sparrow will also become elliptical and inclined.</span><br />
<span style="background: #FEFEFE;">In the same manner, when the circular path of
the earth which is orbiting the Sun in an upward-downward direction changes to
an inclined and elliptical path, the circular path of the moon which is
orbiting the earth in an upward-downward direction also becomes inclined and
elliptical.</span></span><span style="background: #fefefe; font-family: "tahoma" , "sans-serif";"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="background: white; color: #222222; font-family: "arial" , "sans-serif";">Similarly, the perihelion shifts of the planets are caused by
the curved path of the sun which circles the Milky Way.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #222222; font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">This
is for your kind information and feedback please.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #222222; font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">Thanks,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #222222; font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">scientist.g.ponmudi,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #222222; font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">Chennai,<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in;">
<span style="color: #222222; font-family: "arial" , "sans-serif"; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">India.<o:p></o:p></span></div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-27950515781290936052016-12-27T07:30:00.000-08:002016-12-27T09:18:42.773-08:00Facebook users can forecast tsunami for five countries.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="ii gt adP adO" id=":kj" style="background-color: white; color: #222222; direction: ltr; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin: 5px 15px 0px 0px; padding-bottom: 5px; position: relative;">
<div class="a3s aXjCH m1593d01550da2b28" id=":kk" style="overflow: hidden;">
<div dir="ltr">
<div class="gmail_default" style="font-size: small;">
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">dear sir/madam,</span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
greetings,</div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br /></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br /></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">sub :</span><span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"> Facebook users can forecast tsunami.</span></span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">By clicking the following links you can see the real time movement of the waves of the Rome beaches.</span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;" />
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">this links can also be posted on the Facebook,and can be viewed by every one.</span><span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br /></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">(please wait for few seconds after clicking this links)</span></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span><a data-saferedirecturl="https://www.google.com/url?hl=en&q=https://www.skylinewebcams.com/en/webcam/espana/canarias/las-palmas-gran-canaria/playa-las-canteras.html&source=gmail&ust=1482938782257000&usg=AFQjCNG9XJNAUX-nhRLiRCX7lFLmY77U7Q" href="https://www.skylinewebcams.com/en/webcam/espana/canarias/las-palmas-gran-canaria/playa-las-canteras.html" style="color: #1155cc; font-size: 12.8px;" target="_blank">https://www.skylinewebcams.com<wbr></wbr>/en/webcam/espana/canarias/las<wbr></wbr>-palmas-gran-canaria/playa-las<wbr></wbr>-canteras.html</a></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<a data-saferedirecturl="https://www.google.com/url?hl=en&q=https://www.skylinewebcams.com/en/webcam/espana/canarias/las-palmas-gran-canaria/playa-grande-las-canteras.html&source=gmail&ust=1482938782258000&usg=AFQjCNHVI8XmKShirzkNN3Y0qr56cU03pQ" href="https://www.skylinewebcams.com/en/webcam/espana/canarias/las-palmas-gran-canaria/playa-grande-las-canteras.html" style="color: #1155cc;" target="_blank">https://www.skylinewebcams.com<wbr></wbr>/en/webcam/espana/canarias/las<wbr></wbr>-palmas-gran-canaria/playa-gra<wbr></wbr>nde-las-canteras.html</a></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br /></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<a data-saferedirecturl="https://www.google.com/url?hl=en&q=https://www.skylinewebcams.com/en/webcam/dominican-republic/la-altagracia/higuey/punta-cana.html&source=gmail&ust=1482938782258000&usg=AFQjCNEE7gE0nkubHS-ZUWgQVmRwXYxOgw" href="https://www.skylinewebcams.com/en/webcam/dominican-republic/la-altagracia/higuey/punta-cana.html" style="color: #1155cc;" target="_blank">https://www.skylinewebcams.com<wbr></wbr>/en/webcam/dominican-republic/<wbr></wbr>la-altagracia/higuey/punta-can<wbr></wbr>a.html</a></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<br /></div>
<div class="gmail_default" style="font-size: 12.8px;">
<a data-saferedirecturl="https://www.google.com/url?hl=en&q=https://www.skylinewebcams.com/en/webcam/united-states/florida/islamorada/chesapeake-beach-resort.html&source=gmail&ust=1482938782258000&usg=AFQjCNEFl6fhfsx6ZIayZPcHa8Z5E66B0A" href="https://www.skylinewebcams.com/en/webcam/united-states/florida/islamorada/chesapeake-beach-resort.html" style="color: #1155cc;" target="_blank">https://www.skylinewebcams.com<wbr></wbr>/en/webcam/united-states/flori<wbr></wbr>da/islamorada/chesapeake-beach<wbr></wbr>-resort.html</a></div>
<div style="font-size: 12.8px;">
<br /></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">this facility, can be useful to issue tsunami forecast,especially for the Indian ocean rim countries, such as India,Sri Lanka,Thai Land and Bangladesh.</span></div>
<div style="font-size: 12.8px;">
<br style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;" />
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">because,in the past days,(27.8.1883 & 26.12.2004) tsunami has swept the Andaman islands.</span></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsRu1BxGg7pSBmOgfGDfD3chap96WlzsbcNY1cZEoM2J3zqFP3tlOMBalUe4ilCCRZNxhVdPEskeHb1CJtZkxr7pKdgbdp-8TjuHq15HrCaP4J4CKGDgswOMt8lO1sTDrbspivdg_1BYM/s1600/tlr1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="270" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsRu1BxGg7pSBmOgfGDfD3chap96WlzsbcNY1cZEoM2J3zqFP3tlOMBalUe4ilCCRZNxhVdPEskeHb1CJtZkxr7pKdgbdp-8TjuHq15HrCaP4J4CKGDgswOMt8lO1sTDrbspivdg_1BYM/s320/tlr1.png" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWb08AWutEHIY_lgcBn77BHOoX0RKK2gVoyQ1ivnP4DZJaAkzc4anJNn_YDGHvhwFN54-WSab1aJwtX96vylNBVe_ZvDFIX8Pu-kVRdsUESfAaGA_5gDzhm5Bj9xW7r3H3VpupRehyphenhyphenZ94/s1600/tlr2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWb08AWutEHIY_lgcBn77BHOoX0RKK2gVoyQ1ivnP4DZJaAkzc4anJNn_YDGHvhwFN54-WSab1aJwtX96vylNBVe_ZvDFIX8Pu-kVRdsUESfAaGA_5gDzhm5Bj9xW7r3H3VpupRehyphenhyphenZ94/s320/tlr2.png" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ6DcL71YiXByU4eq_MMrFkA0Coa8n3bNLqf48wBS8hb0YlTEZKs-Wmu64-Br40GoJ0vrrTA0wpk3aR2IpvTK8ZaMDNcuhCXeQ_rAGH50PdBXc_2HBL4m2UgIV4wxjh672Ro7FdumtQxg/s1600/tlr3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ6DcL71YiXByU4eq_MMrFkA0Coa8n3bNLqf48wBS8hb0YlTEZKs-Wmu64-Br40GoJ0vrrTA0wpk3aR2IpvTK8ZaMDNcuhCXeQ_rAGH50PdBXc_2HBL4m2UgIV4wxjh672Ro7FdumtQxg/s320/tlr3.jpg" width="320" /></a></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">after one hour,the wave have reached the </span><span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">Indian ocean rim countr</span><span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">ies, such as India,Sri Lanka,Thai Land and Bangladesh.</span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br />therefore by fixing the CCTV on the beaches of the Andaman islands,one can see the approaching tsunami waves directly.</span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br />on this basis,one can forecast tsunami, for the Indian ocean rim countries, such as India,Sri Lanka,Thai Land and Bangladesh.</span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"></span><br />
<div class="gmail_default" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_8684594477915453779gmail-m_-8530813038671827843gmail-m_1188324812174796018gmail-m_-3947490672742703300gmail-m_5849992908471969453gmail-m_5291867465693124227gmail-m_4280775652379062233gmail-m_967135307213461439gmail-m_-4401333096911800818gmail-m_-3756276531337599830gmail-m_-1632080392329051753gmail-m_6021411487073605545gmail-m_-8570283245278508273gmail-m_-7664727189856191124gmail-m_-1038268349677979995gmail-m_-9163649811610656449gmail-m_-7505286633597347259gmail-m_-3612510580085628238gmail-m_-4565553167145940041gmail-m_8191443349826134894gmail-m_-845066147296279122gmail-m_-2648461055478533548gmail-m_-637755727613868148gmail-m_-435410250313826304gmail-m_1801787508850570545gmail-m_-7170477798834715586gmail-m_6016198004811543678gmail-m_-508498651719752467gmail-m_4721572446705358863gmail-m_-2263840297125870242gmail-m_-5375507305186760577gmail-m_-9129937993407385919gmail-m_6802473327309324831gmail-m_-6623295075854044420gmail-m_-5764266546446043459gmail-m_8590378799609246448gmail-m_-7175680322822898858gmail-m_-9142097980283361490gmail-m_5517315051497898018gmail-m_-7106170297268285326gmail-m_-1490813854705598237gmail-m_8552883058689386735gmail-m_-1916169186127205740gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">but unfortunately i can not get the attention of the government concerned. </span></span></div>
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">
<div class="gmail_default" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_8684594477915453779gmail-m_-8530813038671827843gmail-m_1188324812174796018gmail-m_-3947490672742703300gmail-m_5849992908471969453gmail-m_5291867465693124227gmail-m_4280775652379062233gmail-m_967135307213461439gmail-m_-4401333096911800818gmail-m_-3756276531337599830gmail-m_-1632080392329051753gmail-m_6021411487073605545gmail-m_-8570283245278508273gmail-m_-7664727189856191124gmail-m_-1038268349677979995gmail-m_-9163649811610656449gmail-m_-7505286633597347259gmail-m_-3612510580085628238gmail-m_-4565553167145940041gmail-m_8191443349826134894gmail-m_-845066147296279122gmail-m_-2648461055478533548gmail-m_-637755727613868148gmail-m_-435410250313826304gmail-m_1801787508850570545gmail-m_-7170477798834715586gmail-m_6016198004811543678gmail-m_-508498651719752467gmail-m_4721572446705358863gmail-m_-2263840297125870242gmail-m_-5375507305186760577gmail-m_-9129937993407385919gmail-m_6802473327309324831gmail-m_-6623295075854044420gmail-m_-5764266546446043459gmail-m_8590378799609246448gmail-m_-7175680322822898858gmail-m_-9142097980283361490gmail-m_5517315051497898018gmail-m_-7106170297268285326gmail-m_-1490813854705598237gmail-m_8552883058689386735gmail-m_-1916169186127205740gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br />Hence I request you to kindly publish this report on your highly esteemed web page.</span></div>
<div class="gmail_default" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_8684594477915453779gmail-m_-8530813038671827843gmail-m_1188324812174796018gmail-m_-3947490672742703300gmail-m_5849992908471969453gmail-m_5291867465693124227gmail-m_4280775652379062233gmail-m_967135307213461439gmail-m_-4401333096911800818gmail-m_-3756276531337599830gmail-m_-1632080392329051753gmail-m_6021411487073605545gmail-m_-8570283245278508273gmail-m_-7664727189856191124gmail-m_-1038268349677979995gmail-m_-9163649811610656449gmail-m_-7505286633597347259gmail-m_-3612510580085628238gmail-m_-4565553167145940041gmail-m_8191443349826134894gmail-m_-845066147296279122gmail-m_-2648461055478533548gmail-m_-637755727613868148gmail-m_-435410250313826304gmail-m_1801787508850570545gmail-m_-7170477798834715586gmail-m_6016198004811543678gmail-m_-508498651719752467gmail-m_4721572446705358863gmail-m_-2263840297125870242gmail-m_-5375507305186760577gmail-m_-9129937993407385919gmail-m_6802473327309324831gmail-m_-6623295075854044420gmail-m_-5764266546446043459gmail-m_8590378799609246448gmail-m_-7175680322822898858gmail-m_-9142097980283361490gmail-m_5517315051497898018gmail-m_-7106170297268285326gmail-m_-1490813854705598237gmail-m_8552883058689386735gmail-m_-1916169186127205740gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
</span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;">regards,<br />scientist.g.ponmudi.<br />chennai</span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><br /></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><span style="color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">my previous research about polar vortex</span></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="color: #1d2129; display: inline; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px;"><span style="color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;"><br /></span></span></div>
<div style="font-size: 12.8px;">
<span class="m_3185240504410763001gmail-m_-6480156811139241925gmail-m_4495924073901266637gmail-m_1987641818391351036gmail-m_677148347718292809gmail-m_-3067777354110619379gmail-m_1182747850385227953gmail-m_-6199468146064127005gmail-m_8889964377753196518gmail-m_-5964823188169790842gmail-m_-6709535438837933771gmail-m_-5963212661126053099gmail-m_1699063732159742267gmail-text_exposed_show" style="display: inline;"><span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><a data-saferedirecturl="https://www.google.com/url?hl=en&q=http://www.globalresearch.ca/heavy-snowfall-and-cold-wave-in-america-not-caused-by-global-warming/5433896&source=gmail&ust=1482938782258000&usg=AFQjCNEYSCDnO83K8Gphm95qpkNBSZuFrw" href="http://www.globalresearch.ca/heavy-snowfall-and-cold-wave-in-america-not-caused-by-global-warming/5433896" style="color: #1155cc;" target="_blank">http://www.globalresearch.ca/h<wbr></wbr>eavy-snowfall-and-cold-wave-in<wbr></wbr>-america-not-caused-by-global-<wbr></wbr>warming/5433896</a></span></span></span></div>
</div>
</div>
</div>
<div class="yj6qo">
</div>
</div>
</div>
<div class="hq gt" id=":la" style="background-color: white; clear: both; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin: 15px 0px;">
<div class="hp" style="border-top: 1px dotted rgb(216, 216, 216); height: 0px; width: 822px;">
</div>
<div class="ho" id=":l9" style="margin: 7px 0px; position: relative;">
<span class="aVW" style="font-weight: bold; height: 29px; line-height: 29px;"><span id=":l6">2</span> Attachments</span></div>
</div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-90147183390123248032016-05-07T20:31:00.001-07:002017-03-04T02:39:36.909-08:00planets are formed at the center of dead stars<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
planets are formed at the center of dead stars</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
Researchers have found a moon sized diamond at the center of dead star called BPM 37093.which is lying 50 light years away from the earth.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
similarly,Researchers have also found a super hot star,known as Pulsar 1257 + 12 which emits x-ray radiation, having small planets revolving around it. particularly the Pulsar star emit radiation which is many times stronger than that of the sun.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
The question now was, how could planets revolve around it without getting wilted? During the m<span class="text_exposed_show" style="display: inline;">eeting of International Space Research Center,held in the city of aspen on 07 – 02 – 2005, Dr. Mark kutchner and Dr,Sara seager have stated, ”Only diamond has the capacity to withstand immense heat.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
So, only diamond planets made up of layers of diamond can withstand the excess radiation of the Pulsar star and can revolve around it without getting wilted. Hence, the planets that are revolving around the Pulsar star are the best examples for diamond planets.</div>
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
Diamonds formed when carbon exposed to excess pressure and compression. Diamond is formed only at 200 miles depth in earth.<br />
The reason is that only at such a depth there is sufficient pressure to convert carbon into diamond.</div>
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
When tremendous pressure is needed for the formation of ordinary diamond, in order to form a planet sized diamond, crores of tons of raw material carbon and heat and pressure are needed to convert it in to diamond.</div>
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
All this criteria found only in the center of a dead star which is surrounded by huge amount of gases. This is the reason why a planet sized diamond has been formed in the center of the burnt up star, BPM 37093.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">certainly diamond can not form in empty space.therefore the diamond planets must have been formed at the center of dead stars.and later captured and evaporated by the super hot star.but only the outer gasses were evaporated,and the remaining central diamond orbit the super hot star as diamond planets.</span></span><br />
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span>
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">http://news.bbc.co.uk/2/hi/science/nature/3492919.stm</span></span><br />
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span><span style="font-size: 14px;">http://www.daviddarling.info/encyclopedia/P/PSR1257+12.html</span></span></div>
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
</div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-82601485280488238082015-04-30T11:13:00.001-07:002015-04-30T11:13:18.654-07:00Why did continuous volcanic mountain ranges form around the continents?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitzyz85Qp8h1r5kNgKezrCynjZRaTQXvp-nu3rKU5e9YNpdSM7cqBkcKd6li_g44lOOSfEytsIO7dyWYolAsVpof2UpSl8wSB7EEbHUguas1qIyXWk7NPyn7VCjn8lggfgkFSz8pzuv5k/s1600/ias2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitzyz85Qp8h1r5kNgKezrCynjZRaTQXvp-nu3rKU5e9YNpdSM7cqBkcKd6li_g44lOOSfEytsIO7dyWYolAsVpof2UpSl8wSB7EEbHUguas1qIyXWk7NPyn7VCjn8lggfgkFSz8pzuv5k/s1600/ias2.jpg" height="320" width="213" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVAoC-NUTwSBu573cXXYIxgCC1E4VtG36GihuNjmYQP9zD6uVcfZU3Eh2MNRWld49WhnDercK6Zi_o4pptnNLOv69tDxGAXg0ZR4mHIiQZ7KoHcDyQn95dxBQZfVLyLSySwY3qujtUdmo/s1600/2circles.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVAoC-NUTwSBu573cXXYIxgCC1E4VtG36GihuNjmYQP9zD6uVcfZU3Eh2MNRWld49WhnDercK6Zi_o4pptnNLOv69tDxGAXg0ZR4mHIiQZ7KoHcDyQn95dxBQZfVLyLSySwY3qujtUdmo/s1600/2circles.jpg" height="200" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Why did continuous volcanic mountain ranges form around the continents?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<b><br /></b></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Why does the continuous volcanic mountain range formed around the African Continent appear like a magnified form of the African Continent?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Why does the continuous volcanic mountain range formed around the African Continent appear like parallel to the edge of the African Continent?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Continuous volcanic mountain ranges have formed around the Continents of Africa and Antarctica. The reason for these formations is the release of magma from under the earth through the cracks that were caused on the ocean floor surrounding these continents when these continents rose high. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<b><br /></b></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
The continuous volcanic mountain range formed around the African Continent appears like a magnified form of the African Continent. The reason for this is, when this continent rose above from under the earth, a crack was formed in the sea floor around this continent. Moreover, it can also be attributed to the release of magma from under the earth which formed into a volcano.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that continents are drifting separately along with the ocean floor, and when moving in such a way, friction is caused between the rocky edges of the ocean floor and thus earthquakes are caused.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
But,earthquakes did not occurred continuously between the continents of North America and South America,Indian and Australia.this proved that the sea floor is continuous and also proved that the sea floor and the continents are stationary. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
But, it has been proved with evidence that the ocean floor and the continents are stationary by the fact that the ocean floor between North American and South American Continents and Indian and Australian Continents is continuous.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Under these circumstances, it is categorically proved by the discovery of fossils in the central region of the continents and also the fossils found widespread in the continents that the continents along with the mountains have risen above the sea level from underneath the sea. </div>
<div>
<br /></div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-27113834235630813252015-04-29T10:21:00.001-07:002015-04-30T03:05:05.356-07:00Earthquake in Nepal was caused by volcanic eruptions under the earth.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Earthquakes are a common phenomenon in the Himalayan region including Nepal. These earthquakes that frequently occur in the Himalayan region are interpreted on the basis of a scientific theory that is baseless. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11193217_909852069053871_3560770073138944702_n.jpg?oh=8d63875804618382171219bb1eb56089&oe=559B7AF3&__gda__=1439393987_5fb54e555add1755b2cf5bf1044a63da" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that the Indian land area, drifting towards the north-eastern direction, is pushing the Asian Continent with intense pressure, thereby resulting in the frequent occurrences of earthquakes in the Himalayan region.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11209747_909852142387197_2245452760930316496_n.jpg?oh=e51f628f618281785147096aa63ea52d&oe=55E28D4C&__gda__=1440544656_20b1a1fb746cb8fbb60024a8cd044cbd" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Specifically, it is believed that 100 million years ago, the Indian and the Australian Continents were connected and they were stuck to the Continent of Antarctica in the Polar Region, and later India and Australia were separated, drifted towards north-eastern direction and arrived at the present locations. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10454569_909852215720523_6076095644219782868_n.jpg?oh=d838de982c9457b52d9e529b98df981f&oe=55C9CB5E&__gda__=1439583284_405ca5c73bb119f3e6925dd0c83b5a4a" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/21750_909854662386945_7146543914520967573_n.jpg?oh=d1536648d73edb9f87f365bc4d25bac3&oe=55E19E6D&__gda__=1439272992_ffc831ec6cc4e761e407938fe0301373" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
To be more specific, it was believed that the magma found under the earth around the Continent of Antarctica gushed out, cooled on the surface, formed a new sea floor and started drifting in the opposite directions and the Continents of India and Australia drifted towards north-eastern direction along with the sea floor that was drifting towards north-east and finally reached the current locations.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
At present, India and Australia are located at a distance of five thousand kilometres.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11188378_909855465720198_4644672434706292385_n.jpg?oh=fc6b89f1a1eb400d6ea5b66955dc2b7f&oe=55D37935&__gda__=1439184105_716d8919a4f1b104ce336171b405afbb" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Hence, these two continents must have been situated on two separate rocky plates and drifting along to validate the theory that 100 million years ago, India and Australia had been joined together and now they are five thousand kilometres apart.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is also believed that continents are drifting separately along with the sea floor, and when moving in such a way, friction is caused between the rocky edges of the sea floor and thus earthquakes are caused.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
According to this belief, if the Continents of India and Australia drifted towards north-eastern direction along with the sea floor, earthquakes are bound to occur in the long stretch of the sea floor between these two continents that extends to several thousand miles. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Under these circumstances,geologist who belonged to a leading scientific organization in the USA called NASA, prepared and released a seismic chart showing the places where 3,58,214 earthquakes occurred globally, during the 35 year period from 1963 to 1998.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
In this global seismic chart, no earthquakes were recorded continuously in the ocean floor area between these two continents.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11173399_909863675719377_899071573873807914_n.jpg?oh=c8651707a06b20ea8c806f5ca588a64d&oe=55D760F6&__gda__=1439697599_2ec1a435e9b63addda71b0a142596d78" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10433640_909867382385673_7544969478750841521_n.jpg?oh=1fe2e98528044eb1146fedd7acafcc4e&oe=55D5D4C8" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11102753_909868995718845_7541931005714613425_n.jpg?oh=3b53690aa9417a884ded47463b285330&oe=559A3867" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
On the basis of the finding it is proved with evidence that the ocean floor area between these two continents is continuous and the ocean floor and the continents remain stable. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Hence, the belief that the Indian land area is drifting towards the north-eastern direction along with the sea floor is baseless.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Moreover, in the chart that is said to be defining the boundaries of the continental plates, released by the same NASA, the geologist of NASA have reported that it is not known what is actually happening in the sea floor area that lies between these two continents. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
To be precise, according to the continental drift theory, it is believed that 65 million years ago, the Indian land area was an island continent in the Indian Ocean and it was drifting towards the north-eastern direction in a nail-growing pace.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11048773_909882172384194_1743675776211172533_n.jpg?oh=1eba28c4eca733f89ef247b68aa93036&oe=55C72D0C&__gda__=1440939444_5f0bab1e32a666d098dc7c8a0b0063fc" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11196283_909882765717468_9131942937194134787_n.jpg?oh=c13b84d00923e0dbd13594db4d4841f5&oe=55E10AC4&__gda__=1436335002_81d7a7f21db58e9ab63d7da6ecddaa68" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
During that period, it is believed that a sea area existed between India and Asia, and only 50 million years ago, India collided with the southern region of the Asian Continent and as a result, the sea floor between the Indian and Asian Continents was pushed upwards giving rise to the formation of the Himalayan mountain range.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/11174805_909885869050491_1328072155590327962_n.jpg?oh=76c715b4a4df6d13a53d4e8a984bba65&oe=55DCCA3F" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
But, fossils of a mammalian species, which lived 65 million years ago have been discovered in South India, particularly in a village called Naskal in the state of Andhra Pradesh by a group under the leadership of Dr. Ashok Sagini, an anthropologist of Punjab University. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
In the letter written by him to Nature magazine with reference to this, he further states that 65 million years ago, the land area of India was not separated from the northern continents. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtf1/l/t31.0-8/s720x720/11112968_909886332383778_1644547192384009606_o.jpg" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white;">
<div style="color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<span style="color: #141823; font-family: helvetica neue, helvetica, arial, lucida grande, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 20px;">http://www.nature.com/nature/journal/v332/n6165/abs/332638a0.html</span></span><br />
<div style="color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Hence, the global seismographic picture and the fossils of a mammalian species of Asian origin discovered in Andhra, evidently prove that the land area of India always remained in the same place where it is today.</div>
</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Under these circumstances, the seismograph prepared by the physicists of NASA on the places affected by earthquakes globally has recorded earthquakes that had occurred continuously around the continents, particularly in the entire volcanic mountain range situated under the oceans. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Hence, the global seismograph has proved beyond doubt that volcanic eruptions are the main cause for the earthquakes. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Similarly, continuous earthquakes have been recorded in the Himalayan mountain range also.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Hence, all these evidences prove that the earthquakes that occurred in the Himalayan region are caused only by the volcanic eruptions under the earth.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<span class="photo " style="padding: 0px;"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10408913_909887575716987_7294603070612130438_n.jpg?oh=e54b1a38cc811234b64a910051929fed&oe=55C88949&__gda__=1440590833_5f7421de9004f6d28ff592bcec2930d7" style="border: 0px; margin: 0px; max-width: 100%; padding: 0px;" title="" /></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
----------------------------------------</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Picture narrations.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-1</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that the Indian continent, drifting towards the north-eastern direction along with the sea floor, is pushing the southern region of the Asian Continent with intense pressure.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-2</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
100 million years ago, the Indian and the Australian Continents were stuck together and they were connected to the Continent of Australia. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-3</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Dr. Harry Hess, a physicist explained that the magma released from under the earth, solidifies after reaching the surface, cools and forms into sea floor and then starts drifting in the opposite directions. Presently, this theory is endorsed by the other physicists also. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-4</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that the magma released from under the earth around the continent of Antarctica, rose up, solidified and formed into a new sea floor, which drifted away in the opposite directions. It is also believed that India and Australia are also drifting towards north-eastern direction along with these new sea floors that have formed continuously around the continent of Antarctica and drifting towards the north-eastern direction. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-5</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that the magma found under the earth around the Continent of Antarctica gushed out, cooled on the surface, formed a new sea floor and started drifting in the opposite directions of North and South and the Continents of South America, Africa, India and Australia drifted towards northern direction along with the sea floor that was drifting towards north. It is also believed that the continent of Australia reached the present location only 30 million years ago and similarly, only 50 million years ago Indian land area collided with the southern region of the Asian Continent and as a result, the Alps and the Himalayan mountain ranges emerged.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-6</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
On the basis of the belief that the Indian and Australian continents are drifting separately with the sea floor, and that earthquakes were not recorded continuously in the ocean floor area between these two continents, it is proved with evidence that the ocean floor area between these two continents is continuous and the ocean floor and the continents remain stable. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-7</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
In the chart that is said to be defining the boundaries of the continental plates, released by NASA, it is reported that it is not known what is actually happening in the sea floor area that lies between the continents of India and Australia.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-8</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
It is believed that 65 million years ago, the Indian land area was an island continent in the Indian Ocean and it was drifting towards the north-eastern direction in a nail-growing pace. Moreover, it is believed that only 50 million years ago it collided with the southern part of the Eurasian Continent which is made up of the European and the Asian Continents, and this caused the land area between these two land regions to rise up, thereby giving rise to the Himalayan mountain range. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
Figure-9</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'helvetica neue', helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 20px;">
On the basis of the discovery of bone fossils of a mammalian species, which lived 65 million years ago and became extinct and fossilized, in a village called Naskal in the state of Andhra Pradesh, made by a group under the leadership of Dr. Ashok Sagini, an anthropologist of Punjab University, Dr. Ashok Sagini wrote to Nature magazine stating that 65 million years ago, the Continent of India was not separate from the continents of the northern region.</div>
<div>
<br /></div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-55833951853749450812014-12-09T00:53:00.003-08:002014-12-09T00:53:59.853-08:00Tsunami story out line<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><b>சுனாமியின் மறுபக்கம் </b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சான்றாவஆவணங்களின் அடிப்படையில் ஒரு சரித்திரக் கண்டு பிடிப்பு.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">]தற்பொழுது நில அதிர்ச்சி மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகள்
ஏற்படுவதற்குப் புவியியலாளர்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதால்,நில
அதிர்ச்சிகளையும் சுனாமிகளையும் முன் கூட்டியே அறிய இயலாத நிலை உள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதனால் ஏராளமான உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகின்றன.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து தனித் தனியாகப்
பாளங்களாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது அவற்றின் ஓரப்
பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுவதாகப்
புவியியலாளர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று ஒரு கண்டத்துக்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல்தளப்
பகுதியானது உரசிய படி திடீரென்று நகர்ந்து செல்வதால்,கடல் நீர் உந்தப் பட்டு
சுனாமி அலைகள் உருவாகுவதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் புவியியலாளர்கள் நம்பிக்கையானது அடிப்படை ஆதாரம்\ற்ற கருத்து
என்பது சன்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வட துருவப்
பகுதியில் இருந்து தென் துருவப் பகுதி வரைப் பலாயிரம் கிலோ மீட்டர்
நீளத்திற்கு,ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் அந்தக்
கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து சூடான பாறைக் குழம்பு
மேற்பகுதிக்கு வந்த பிறகுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக
உருவாகுவாதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்குப் பாறைக் குழம்பு வரும்
பொழுது,ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழையக் கடல் தளப்
பாறைகளை,கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு
மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="EN-US" style="font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha;"><br />
<br />
<!--[if !supportLineBreakNewLine]--><br />
<!--[endif]--></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலின்
மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக்
கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு என
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில் உருவாகி மேற்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படும் கடல் தளத்துடன்,வட
அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அந்தக் கடலடி எரிமலைத்
தொடரின் வட பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் நம்பப் படும் ,கடல் தளத்துடன்,ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களை
உள்ளடக்கிய யூரேசியக் கண்டமானது ,கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு
இருப்பதாக நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியில் உருவாகி,வட
மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்,தென்
அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அந்தக் கடலடி
எரிமலைத் தோரின் தென் பகுதியில் உருவாகி,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்,ஆப்பிரிக்கக் கண்டமானது வட அகிலக்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் கண்டத் தட்டுகளாக நகரும் பொழுது
அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி
ஏற்படுவதாக நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால்,கடந்த </span><span lang="EN-US">1963 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம் ஆண்டு முதல் </span><span lang="EN-US">1998 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம்
ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட </span><span lang="EN-US">3,58,214 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட
இடங்களைக் குறித்து,அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த
புவியியலாளர்கள்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அட்லாண்டிக் கடலின்
மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக
நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக
நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்துக்கும், அட்லாண்டிக் கடலின் மத்தியப்
பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்
படும் கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்
படும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
பதிவாகி இருக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப்
பகுதியானது,தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல் ஒரே தொடர்ச்சியாக இருப்பதும்,கடல்
தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது,நிரூபணமாகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் கடந்த </span><span lang="EN-US">12.01.2010 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு
இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி
தீவில்,கடுமையான நில அதிர்ச்சியும்,சிறிய அளவிலான நில அதிர்ச்சியும்
ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு </span><span lang="EN-US">USGS </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று அழைக்கப் படும் ,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச்
சேர்ந்த,புவியியலாளர்களால் இன்று வரை சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,ஹைத்தி தீவு அமைந்து
இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு
திசையை நோக்கி நகர்ந்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்
பட்டு இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்
கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க நாட்டின்
புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள் தெரிவிக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஏனென்றால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்
கூட்டமானது,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க
நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களுக்குத் தெரிய வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய
கண்டங்களானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு மற்றும் வட
மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல்
தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும்
கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு
வந்து சேர்ந்தது/எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியி யலாளர்களுக்குத்
தெரிய வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல்
பகுதியில்,கடல் தளத்துக்கு இருந்த ஒரு எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத்
துளைக்கப் பட்டதால்,பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகிய பிறகு,தனியான பாறைத்
தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது
மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த, அமெரிக்கக் கண்டங்களுக்கு
இடையில், இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது
கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து
சேர்ந்ததாகவும்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும் நம்பினார்கள்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தற்பொழுது வட அமெரிக்காக் கண்டத்திற்கும் தென் அமெரிக்காக்
கண்டத்திற்கும் இடையில் பாலம் போன்று,மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து
இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி
உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய
அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து அமெரிக்கக் கண்டங்களை
இணைத்ததகவும்,அதனால இந்த இரண்டு கண்டங்களுக்கும் விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை
பெற்றதாகவும்,அந்த நிகழ்வானது ‘’தி கிரேட் அமெரிக்கன் இண்டர் சேஞ்ச்’’ என்றும்
அழைக்கப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் மத்திய அமெரிக்க நிலப் பகுதி
புதை படிவங்கள் <o:p></o:p></span></div>
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ansi-language: EN-US; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">கரீபியன் தீவுகள் அதே இடத்திலேயே
இருக்கிறது.புதை படிவ ஆதாரங்கள்</span></b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN-US; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; mso-ansi-language: EN-US; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span><br />
<br />
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின்
தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால்
சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர் ஹோண்டுராஸ்
நாட்டின் மத்தியப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை
படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">இதே போன்று </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">1985 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"> ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல்
வல்லுனர்கள் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி
ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று
அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு
பிடித்து இருக்கின்றனர்.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே
மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு
மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கியூபாவில் டைனோசர்
புதை படிவங்கள் </span></b><b><span lang="EN-US" style="font-size: 12.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை டைனோசரின் முதுகெலும்பின் புதை படிவங்களை
கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில்
இருந்து கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த
தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா
காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதன் மூலம் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக்
கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த கியூபாவில்
பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்திருப்பது உறுதி செய்யப்
பட்டள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதன் மூலம் கியூபா மற்றும் ஹைத்தி தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன்
தீவுக் கூட்டமானது கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ,வட
அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு
இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே தற்பொழுது வேறு சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக்
கூட்டமனது,அட்லாண்டிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்து ஒரு எரிமலைப்
பிளம்பால் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு
வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் ஒரு கருத்தை முன்
மொழிந்திருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இன்னும் சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,தற்பொழுது
இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன்
மொழிந்திருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனாலும் யாராலும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி,எந்தத்
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க்ரியது என்று உறுதியாகக் கூற இயலவில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவேதான் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்ட்டம்
எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக்
கூறினால்,பின்னர் அது தொடாபாக எழும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே,கரீபியன் தீவுக்
கூட்டமானது உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பத்து
பற்றி எதுவும் குறிப்பிடாமல்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்
கரீபியன் தீவுக் கூட்டமானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஒரு
விளக்கத்தை,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள்
தெரிவித்து இருக்கிறார்கள்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உண்மையில் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த
புவியியலாளர்களுக்கு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப்
பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் </span><span lang="EN-US">united states of giological
society (usgs ) </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று அழைக்கப் படும் அமெரிக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாட்டின்
புவியியல் கழகம், கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக்</span><span lang="EN-US"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கூறப் படும் ஒரு வரை படத்தை வெளியிட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த வரை படத்தில், வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும்
இடையில், கற்பனையாக ஒரு கோட்டை வரைந்து, அந்த இரண்டு கண்டங்களும் இடைப் பட்ட கடல்
தளப் பகுதியானது, தனித் தனிப் பகுதிகளாக இருப்பது போன்று தவறாகச் சித்தரித்துக்
காட்டப் பட்டுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதாவது அமெரிக்கக் கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக
உள்ள அட்லாண்டிக் கடல் தளமானது, இரண்டு பகுதிகளாக இருப்பது போன்று தவறாகச்
சித்தரித்துக் காட்டப் பட்டுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்பட்டது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கடந்த </span><span lang="EN-US">12.01.2010 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அன்று, ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள்
உருவாகி இருந்தது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில்
பதிவாகி இருந்தது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வளைய வடிவிலான வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் </span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை
இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை, ரேடியோ
கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின்
கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்தனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்பொழுது அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில
சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய
வந்தது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள்
உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது உயர்ந்து இறங்குவதே காரணம், என்று டாக்டர்
ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு அந்த எரிமலை
உயரும் பொழுது, எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எரிமலையுடன் சில சென்டி
மீட்டர் உயர்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலயில், அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும்
வெளியேறுவதால் எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்குகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதனால் எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது,
மறுபடியும் தாழ்வடைகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு எரிமலையுடன், எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் சில செண்ட்டி மீட்டர் ,உயர்ந்து இறங்கியதற்கு
அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகின்றன.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச்
சுற்றியும், வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும்
தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய
வந்துள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில்
சங்கிலி போன்று வளைவான பாதையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகள் அலூசியன்
தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">அந்த எரிமலைத் தீவு வரிசையில் உள்ள பெலிக்
என்ற எரிமலையானது, </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">1814 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">மற்றும் </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">1852 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">ஆம் ஆண்டுகளில் சீறிய பிறகு அமைதியாகி விட்டது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">அந்த எரிமலையின் மேல் பறந்து சென்ற
செயற்கைக் கோளில் இருந்து ரேடியோக் கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.அவ்வாறு
தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் பெலிக் எரிமலையின் மீதும் சுற்று வட்ட
தரைப் பகுதியில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் திரும்பவும் செயற்கைக் கோளை
வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம், பெலிக்
எரிமலையைச் சுற்றியிருந்த தரைப் பகுதியின் மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">இதே போன்று பல முறை பெலிக் எரிமலையின் மேல்
பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், ரேடியோக் கதிர் வீச்சு முறையில் பெலிக்
எரிமலையின் தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">பின்னர் அந்தப் படங்கள், கணிப் பொறி மூலம்
ஒரே படமாக மாற்றப் பட்டது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">அந்தப் படத்தில் கடந்த </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">1996 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">ஆம் ஆண்டு அக்டோபர் முதல் </span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">1997 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில், பெலிக் எரிமலையைச்
சுற்றி முப்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, ஆறு அங்குல உயரத்துடன், ஆறு வளையங்கள்
உருவாகி இருப்பது பதிவாகி இருந்தது.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;">இவ்வாறு பெலிக் எரிமலையை சுற்றி வரப்பு
போன்று ஆறு வளையங்கள் உருவாகி இருந்ததற்கு ,பெலிக் எரிமலைக்கு அடியில் ஆறு கிலோ
மீட்டர் ஆழத்தில், புதிதாக ஐந்து கோடி கன சதுர மீட்டர் அளவிற்கு பாறைக் குழம்பு
சேர்ந்ததே காரணம், என்று எரிமலை இயல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.</span><span lang="EN-US" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="background: yellow; font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin; mso-highlight: yellow;">.</span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">புவித் தரைக்கு அடியில்
இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு
இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாகத்
தெரிய வந்துள்ளது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">அதே போன்று </span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;">,</span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">நில அதிர்ச்சியும் சுனாமிகளும்
ஏற்பட்ட இடங்களில்</span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">எரிமலைகளில்
இருந்து வெளி வரும் ரேடான் வாயுக்கள் கசிந்து இருப்பதன் மூலமாகவும்</span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;">, </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">புவித் தரைக்கு அடியில்
இருக்கும் எரிமலைகள் வெடித்ததால், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு
இருப்பது</span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"> </span><span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">தெரிய வந்துள்ளது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">வட அமெரிக்கக் கண்டத்தில்,
ஆரிகன் மாகாணத்தில் மூண்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள்
அமைந்து இருக்கும் பகுதியில், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக்
கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களை ஆய்வு செய்த பொழுது, ஒரு இடத்தில் அறுநூறு கிலோ
மீட்டர் சுற்றளவுக்குத் தரைப் பகுதியானது சில அங்குலம் உயர்ந்து இருப்பது தெரிய
வந்தது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">ஆரிகன் புடைப்பு என்று அழைக்கப்
படும் அந்த வட்ட வடிவ மேட்டுப் பகுதியின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சிகள்
ஏற்பட்டு இருப்பதும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">அந்த இடத்தை ஆய்வு செய்த
புவியியல் வல்லுனர்கள், அந்த புடைப்புக்குக் கீழே, ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில்
இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவுக்கு பாறைக் குழம்பு திரண்டு
இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif; font-size: 11pt;">அத்துடன் அந்தப் புடைப்புப்
பகுதிக்கு அடியில், புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் புவியியல்
வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-family: Tahoma, sans-serif; font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.85pt;">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif;">இதன்
மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது
ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.</span><span lang="EN-US" style="font-family: Tahoma, sans-serif;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள்
எவ்வாறு எடுக்கப் பட்டது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மூன்று சகோதரிகள் என்று அழைக்க படும்
அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது, செயற்கைக்
கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த ரேடியோக் கதிர்கள், தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் ,
திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான
கருவிகள் மூலம், தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற வண்ணங்களில்
பதிவு செய்யப் பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று மறுபடியும், அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள்
பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு
செய்யப் பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல், வெவ்வேறு காலத்தில் பறந்து
சென்ற செயற்கைக் கோள் மூலம், பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளக்
கணினி உதவியுடன், ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில், அந்த
எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட, கண்டு
பிடித்து விட முடியும்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட
மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ
மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய
வந்தது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் கடந்த </span><span lang="EN-US">2004 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்தவட்ட வடிவ
மேட்டுப் பகுதியின் மத்தியில் இருந்த புடைப்பு போன்ற பகுதியில் முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய
அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha, sans-serif;">இதன்
மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது
ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.</span><span lang="EN-US" style="font-family: Tahoma, sans-serif;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இத்தாலி நில அதிர்ச்சியும் ரேடான் வாயுக் கசிவும். </span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களிலும்,நில அதிர்ச்சி
மையத்தைச் சுற்றியும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, எரிமலையைச் சுற்றி
உருவாகுவதைப் போன்றே ,வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் ,தரை
மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உதாரணமாகக் கடந்த</span><span lang="EN-US"> 2009 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, லா அகுய்லா என்ற
நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்பொழுது நில அதிர்ச்சி
மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, எரிமலைகளைச் சுற்றி
உருவாகுவதைப் போலவே, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள
வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்களில் பதிவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே, அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,
கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை, நில அதிர்ச்சி ஏற்படுவதை
முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட, ஜியுலியாணி ஜியாம்ப்பாவ்லோ என்ற தொழில்
நுட்ப வல்லுநர், கண்டு பிடித்தார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும்,
நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மை உடைய வாயுவாகும்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே, இத்தாலி நாட்டில் லா
அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று கடந்த </span><span lang="EN-US">11.03.2011 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட
நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்பொழுது ஹோண்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல
கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள
வளையங்கள் உருவாகி இருப்பது ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்களில் பதிவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு
முன்பு, நில அதிர்ச்சி மையப் பகுதிக்கு மேலே, வளி மண்டல மேலடுக்கின் வெப்ப
நிலையானது, அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் வானிலை செயற்கைக் கோள் படங்களில்
பதிவாகி இருந்தது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு வளி மண்டலத்தில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்ததற்கு,
அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு
காரணமாக இருக்கலாம் என்று நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் என்ற
புவியியல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த
மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால், அந்த
எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இதனால்
உருவான அயனிகள் நீரை ஈர்க்கும் தன்மை உடையது என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம்
உமிழும் வினை என்பதால், வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக
உயர்ந்திருக்கலாம் என்றும், டாக்டர் டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கம் தெரிவித்து
இருக்கிறார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, ஹோண்சு தீவின் வளி மண்டல
மேலடுக்கின் வெப்ப நிலையானது, மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும்,
செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில
அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில்,இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இருக்கும்
கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,இந்தோனேசியத்
தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து
சென்றதால்தான்,சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக </span><span lang="EN-US">10.03.2005 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அன்று நாசாவைச்
சேர்ந்த புவியியலாளர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து வித்து விட்டுப் பிறகு,மூன்று மாதம் கழித்து அதே நாசா அமைப்பு, </span><span lang="EN-US">27.04.2005 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அன்று வெளியிட்ட அறிக்கையில்,
இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து
சென்றதால்தான், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று நாசாவின்
புவியியலாளர்கள் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாசாவுக்கு ஏன் குழப்பம் வந்தது?</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு
முன்பு அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து, அருகருகே இருந்ததாகவும், அதன் பிறகு
அங்கிருந்து, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து
சேர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும், ஐயாயிரம் கிலோமீட்டர்
இடை வெளியில் அமைந்து இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாகக் கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும், கடல்
தளதுடன் ,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன, என்று புவியியல்
வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அருகருகே இருந்த
கண்டங்கள்</span><span lang="EN-US">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு விலகி
இருந்தால், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல்
இருந்தால்தான் சாத்தியம்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் கண்டத் தட்டுகள் நகரும் பொழுது, கண்டத் தட்டுகளின் ஓரப்
பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான்</span><span lang="EN-US">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> நில
அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப்
போன்று, தனித் தனிக் கண்டத் தட்டுகளாக, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் உரசல் ஏற்பட்டு,
பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்குத் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட
வேண்டும்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில்,கடந்த </span><span lang="EN-US">1963 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம்
ஆண்டு முதல், </span><span lang="EN-US">1998 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம்
ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட, </span><span lang="EN-US">3,58,214 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக்
குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றையும், நாசா அமைப்பினர்
தயாரித்து வெளியிட்டனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், இந்தியாவிற்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
பதிவாகி இருக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் கடல் தளமானது
தொடர்ச்சியாக இருப்பது,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரப்பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், தனித் தனிக் கடல் தளத்துடன்,
கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு, அடிப்படை ஆதாரம் இல்லை.</span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது
என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் கண்டத் தட்டுகளின் எல்லையைக் குறிப்பதாகக் கூறப் படும்,
ஒரு வரை படத்தையும், நாசா அமைப்பினர் வெளியிட்டனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்தக் ‘கண்டங்களின் எல்லை’ வரை படத்திலும் கூட , இந்தியாவையும்
ஆஸ்திரேலியாவையும், தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல், இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், முழுமை இல்லாத சிறு சிறு
கோடுகளை மட்டும் வரைந்து, கோடிட்ட பகுதியில் என்ன நடக்கிறது? என்று உறுதியாகத்
தெரியவில்லை! என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு கண்டத் தட்டாக இருக்கிறதா?
அல்லது இரண்டு தனித் தனிக் கண்டத் தட்டாக இருக்கிறதா? என்றே உறுதியாகத் தெரியாத
நிலையில்தான், நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், இந்தியக் கண்டத் தட்டு
நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என </span><span lang="EN-US">10.03.2005 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அன்று ஒரு
விளக்கத்தை முதலில் கூறி விட்டு, பிறகு மூன்று மாதம் கழித்து, </span><span lang="EN-US">27.04.2005 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அன்று வெளியிட்ட அறிக்கையில்,
ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று,
முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களை, அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி,வெறும்
யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று சப்பாணி சுனாமிக்கும் புவியியலாளர்கள் அடிப்படை ஆதாரமின்றி
வெவ்வேறு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">பசிபிக்
கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?</span></b><b><span style="font-size: 11.0pt; mso-bidi-font-family: Latha;"><o:p></o:p></span></b><br />
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய
கடல் தளமானது, தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாக ஹாரி ஹெஸ் என்ற புவியியல் வல்லுநர் ஒரு கருத்தை முன்மொழிந்தார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்படியென்றால் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறதா?என்ற கேள்வி
எழுந்தது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அறியப்
படவில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில், புதிதாக கடல் தளம் உருவாகி எதிர்ரெதிர்
திசைகளை நோக்கி விலகி,நகர்ந்து கொண்டு இருப்பதை ஈடு செய்யும் அளவுக்கு, பூமியில்
வேறு பகுதிகளில் கடல் தளமானது, மறுபடியும் பூமிக்குள் சென்று அழிந்து கொண்டு
இருக்க வேண்டும், என்று நம்பப் பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தீவுகள்,
தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி
இருப்பது, கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான் டூசோ வில்சன் என்ற புவி
இயற்பியலாளரின் கவனத்தைக் கவர்ந்தது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தொடரானது, தென்
கிழக்குத் திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி
இருப்பதற்கு,பசிபிக் கடல் தளமானது தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு
திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்குள் இருந்து பாறைக்
குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தைத் தொடர்ச்சியாகத் துளைத்துக் கொண்டு
இருப்பதே காரணம், என்று டாக்டர் ஜான் டூசோ வில்சன்,ஒரு விளக்கத்தை முன் வைத்தார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உதாரணமாக ஒரு வெல்டிங் ராடின் மேல், மெலிதான உலோகத் தகட்டை நகர்ந்தும்
பொழுது, தகட்டின் மேல் வரிசையாகத் தழும்புகள் ஏற்படுவதைப் போன்று, பூமிக்கு
அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், பசிபிக் கடல் தளத்தின் மேல், வரிசையாக
ஹவாய் எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது, என்று டூசோ வில்சன் விளக்கம் கூறினார்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பசிபிக் கடல் தரை நிலையாக இருக்கிறது.</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜான் டூசோ
வில்சனின்</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> விளக்கம் உண்மை என்றால், அதே பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி
இருக்கும், மற்ற எரிமலைத் தொடர்களும், ஹவாய் எரிமலைத் தொடருக்கு இணையாக உருவாகி
இருக்க வேண்டும்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ்
வில்லி எரிமலைத் தொடரும்,ஹவாய் எரிமலைத் தொடருக்கு இணையாக உருவாகாமல், வெவ்வேறு
திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக ஹவாய் எரிமலைத் தொடரானது, தென் கிழக்கு திசையில் இருந்து வட
மேற்கு திசையை நோக்கி, சற்று விரிந்த நிலையில் இருக்கும் ‘’ ட ‘’ எழுத்து போன்று
உருவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் லைன் எரிமலைத் தொடரானது ஹவாய் எரிமலைத் தீவுத் தொடரை விட
அதிகமாக தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத்
தொடர்கள், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி
இருப்பதன் மூலம், பசிபிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் டூசோ வில்சன் மற்றும் ஹாரி ஹெஸ் ஆகியோரின் விளக்கங்களை அப்படியே
ஏற்றுக் கொண்ட புவியியல் வல்லுனர்கள், பசிபிக் பாடல் பகுதியில் புதிய கடல் தளமானது
தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,
இறுதியாக அந்தக் கடல் தளமானது, பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்கள் மற்றும்
தீவுகளுக்கு அடியில் உரசிய படி நகர்ந்து செல்வதாகவும்.அதனால் பசிபிக் கடலைச்
சுற்றி அமைந்து இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள்
ஏற்படுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று பசிபிக் கடல் தளமானது, நகர்ந்து பசிபிக் கடலைச் சுற்றி
இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும், உரசிய
படி செல்வதால், அப்பகுதிகளில் அடிக்கடி சுனாமிகள் உருவாகுவதாகவும், புவியியல்
வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்கள் மற்றும்
தீவுகளுக்கு அடியில் செல்லும், பசிபிக் கடல் தளமானது, பூமிக்கு அடியில் செல்லும்
பகுதியில்,டிரென்சஸ் என்று அழைக்கப் படும் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்களை
ஏற்படுத்துவதாகவும் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் பூமிக்கு அடியில் செல்லும், பசிபிக் கடல் தளமானது, பூமிக்கு
அடியில் நிலவும் அதிகமான வெப்ப நிலையால், உருகிப் பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி
உயந்து, பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளைத் துளைத்த படி,
கண்டங்களுக்கு மேலாக எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள்
விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த விளக்கங்கள் யாவும் தவறான விளக்கங்கள் என்பது ஆதரபூர்வமாகத்
தெரிய வந்துள்ளது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் ‘கிழக்கு பசிபிக்
கடலடி மேடு’ என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் ,பூமிக்கு அடியில் இருந்து
பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய
கடல் தளங்களாக உருவாகி, வட மேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதில் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்
படும், பசிபிக் கடல் தளமானது,இறுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு
அடியில் சென்று, பூமிக்குள் இருக்கும் வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி,
மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து புவித் தரையைப் பொத்துக் கொண்டு, ஜப்பான் மற்றும்
பிலிப்பைன்ஸ் தீவுகளில் எரிமலைகளாக உருவாகி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள்
விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி தென்
கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது,
இறுதியில் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று, பாறைக் குழம்பாகி,
மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, தென் அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு,
தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள, ஆண்டிஸ் எரிமலைத் தொடராக
உருவாகி இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதிக்கு
இணையாகக் கடல் தரையில், ஆறாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ‘பெரு சிலி அகழி’ என்று
அழைக்கப் படும் ஒரு நீண்டு குறுகிய கடல்
தரைப் பள்ளம் உருவாகி இருக்கிறது.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்தக் கடல் தரைப் பள்ளமானது, கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப்
பகுதியில் உருவாகித் தென் கிழக்கு திசையை நோக்கி</span><span lang="EN-US">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> அதாவது
தென் அமெரிக்கக் கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல்
தளமானது</span><span lang="EN-US">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால் உருவானது</span><span lang="EN-US">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி
இருக்கும் ஆண்டிஸ் எரிமலைப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும்
,தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில், கடல் தளமானது உரசிய படி நகர்ந்து சென்று
கொண்டு இருப்பதால் ஏற்படுகிறது, என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அருகில் கடல்
தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கும்,அப்பகுதியில் பூமிக்குள்
சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும், கடல் தளங்களால் உருவானது, என்றும்
புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அடியில் கடல்
தளங்களானது உரசிய படி செல்வதால்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுப்
பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாகவும், புவியியல்
வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று, ஆண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் புதிய கடல் தளம்
உருவாகி, வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதாவது அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி புதிய கடல் தளம் உருவாகி
அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி தெற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அண்டார்க்டிக்
கண்டத்தை விட்டு விலகி வடக்கு திசையை நோக்கியும் புதிய கடல் தளம் நகர்ந்து கொண்டு
இருப்பதாக நம்பப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உள்ள கடல் தரையில்,
பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள கடல்
தரையில் இருப்பதைப் போன்று, நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளங்களும் உருவாகி இருக்க
வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தில்
காணப் படுவதைப் போன்று எரிமலைகளும், அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் உருவாகி
இருக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி,
அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல்
தளமானது, இறுதியாக என்ன ஆகிறது? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் எந்த ஒரு
புவியியல் வல்லுனரும் விளக்கம் கூற முன்வர வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக ஒரு கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி
எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம்
சரியான விளக்கம் அல்ல.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப்படியென்றால்,ஒரு கண்டத்தைச் சுற்றி இருக்கும், அதிக சுற்று வட்டப்
பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, அந்தக் கண்டத்தை நோக்கி, அதாவது குறைந்த சுற்றுவட்டப்
பகுதியை நோக்கிக் கடல் தளம் நகர்ந்து சென்றால்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில்
நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஏனென்றால் கடல் தளப் பாறைகளானது, உறுதியான நொறுங்கக் கூடிய பாறையால்
ஆனது.எனவே உடைந்து நொறுங்கும் நிலையில்,கடல் தளமானது தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டு
இருக்க சாத்தியம் இல்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதே போன்று ஒரு கண்டத்தைச் சுற்றிலும் குறைந்த சுற்று வட்டப்
பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால்,அந்தக் கண்டத்தை விட்டு விலகி, அதிக
சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்ல இயலாது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஏனென்றால் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தளப்
பாறையால், அதிக சுற்று வட்டப் பகுதியை நிரப்பவும் இயலாது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம்
உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல்
வல்லுனர்கள் நம்புகிறார்கள்.</span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் ஒரு கண்டத்தைச் சுற்றிலும் கடல் தளம் உருவாகி எதிரெதிர்
திசைகளை நோக்கி நகர்ந்து சென்றால் அதாவது அந்தக் கண்டத்தை நோக்கியும், அந்தக் கண்டத்தை
விட்டு விலகியும் கடல் தளம் நகர்ந்து சென்றால் எந்தத் திசையை நோக்கி அந்தக் கண்டம்
நகர்ந்து செல்ல இயலும்?என்ற கேள்வியும் எழுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நிச்சயம் ஒரு கண்டத்தால் ஒரே நேரத்தில் எல்லா திசைகளையும் நோக்கி
நகர்ந்து செல்லச் சாத்தியம் இல்லை</span><span lang="EN-US">.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம்
உருவாகி, ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப்
படுகிறது.</span><b><o:p></o:p></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இது தொடர்பாக அமெரிக்க நாட்டின், துலன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,
புவியியல் பேராசிரியர் </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஸ்டீபன் ஏ
நெல்சன், ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், கடலடி எரிமலைத் தொடர் இருப்பதால்,
அந்தக் கண்டமானது நிலையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தைப் போலவே,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி
உள்ள கடல் தரையில், அகழிகள் என்று அழைக்கப் படும்,நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி
இருக்க வில்லை,அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், தொடர்ச்சியாக எரிமலைகளும்
உருவாகி இருக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,
புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
,இறுதியாக அந்தக் கடல் தளங்களானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிந்து பாறைக்
குழம்பாகி, மேல் நோக்கி உயர்ந்து எரிமலைத் தொடராக உருவாகுவதாகவும் கூறப் படும்
விளக்கங்கள் யாவும் தவறு.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மேலும் அவ்வாறு பூமிக்குள் கடல் தளம் உரசிய படி நகர்ந்து
செல்வதால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாகவும், புவியியல்
வல்லுனர்கள் கூறும் விளக்கமும், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை. </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால், பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறிப்பாகத் தென்
அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில், புதிதாகக் கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியிலும், புதிய கடல் தளம்
உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,இறுதியில் அந்தக்
கடல் தளமானது நியூசிலாந்து தீவுக்குக் கிழக்குப் பகுதியில், பூமிக்குள் உரசியபடி
செல்வதாகவும், அதனால்தான் நியூசிலாந்து தீவுக்குக் கிழக்குப் பகுதியில் டோங்கா
கடல் தரைப் பள்ளம் உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் அந்தக் கடல் தரைப் பள்ளப் பகுதியில் நில அதிர்ச்சிகள்
ஏற்படுவதற்கும், அந்தப் பகுதியில் கடல் தளமானது பூமிக்குள் உரசிய படி சென்று
கொண்டு இருப்பதே காரணம் என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">புவியியல் வல்லுனர்கள் விளக்கம் நம்புவதைப் போன்று உணமையில் கிழக்குப்
பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, வட மேற்கு
திசையை நோக்கி அதாவது டோங்கா தீவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதை
ஒட்டிய படி அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியிலும், புதிய கடல் தளம் உருவாகி
வட மேற்கு திசையை நோக்கி,அதாவது பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளை நோக்கி கடல்
தளம் நகர்ந்து கொண்டு இருந்தால், அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியில் இருந்து,
டோங்கா தீவு வரை,தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி,
பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பட
வேண்டும்.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 10.9pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,
அவ்வாறு அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதியில் இருந்து டோங்கா தீவுப் பகுதி வரை,
தொடர்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் கடல் தளமானது தொடர்ச்சியாக
இருப்பதன் மூலம் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக
இருப்பது,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் ஆதாரப் பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது. </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும்,அதே போன்று கிழக்கு பசிபிக்
கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற
கற்பனை </span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஜப்பான் சுனாமிக்கு ஏன் ஆதாரங்களை வெளியிட வில்லை?</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கடந்த </span><span lang="EN-US">2011 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம்
ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாள், ஜப்பானின் ஹோண்சு தீவிற்கு கிழக்குப்
பகுதியில், பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதன்
தொடர்ச்சியாக சுனாமி உருவானது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்த நில அதிர்ச்சியின் பொழுதும், அதற்கு பிறகு ஏற்பட்ட பல தொடர் நில
அதிர்ச்சிகளின் பொழுதும், ஜப்பானில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு ,பசிபிக்
கடலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில்
உருவாகி வட மேற்கு திசையை நோக்கி கடல் தளமானது நகர்ந்து ஹோண்சு தீவுக்கு அடியில்
உரசியபடி சென்றதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதிலும் குறிப்பாக பசிபிக் கடல் தளமானது நீண்ட காலமாகவே ஹோண்சு தீவுப்
பகுதியில் நகராமல் முட்டிக் கொண்டு இருந்ததாகவும், அதனால் அழுத்தம் அதிகரித்ததால்,
திடீரென்று பசிபிக் கடல் தளமானது ஹோண்சு தீவுக்கு அடியில் உரசியபடி நழுவிச்
சென்றதால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், அப்பொழுது கடல் தரைக்கு மேல் இருந்து
கடல் நீரும் திடீரென்று மேல் நோக்கி தள்ளப் பட்டதால், சுனாமி உருவானதாகவும்
புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவ்வாறு பசிபிக் கடல் தளமானது, திடீரென்று ஹோண்சு தீவுக்கு அடியில்
நழுவிச் சென்றதால்,நீண்ட காலமாக அழுத்தத்தில் இருந்த, ஹோண்சு தீவின் கடற்கரைப்
பகுதியானது,பசிபிக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து இருப்பதும் செயற்கைக் கோள் மூலம்
தெரிய வந்துள்ளதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து உள்ளனர். </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்னத்
ஹட் நட் என்ற புவியியல் வல்லுநர், ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதியில் நிறுவப்
பட்டு இருந்த, ஒரு செயற்கைக் கோள் நிலையமானது, எட்டு அடி, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இருந்ததாகவும்,
அதன் அடிப்படையில் ஹோண்சு தீவே, கிழக்கு திசை நோக்கி எட்டு அடி நகர்ந்து விட்டது,
என்று அறிக்கை வெளியிட்டார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">குறிப்பாக ஜப்பானில் எண்ணூறு நில அதிர்ச்சி ஆய்வு மையங்கள்
உள்ளன.அத்துடன் ஆயிரத்தி இருநூறு செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்களும் நிறுவப்
பட்டு இருக்கின்றன.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலையில் டாக்டர் கென்னத் ஹட் நட், ஹோண்சு தீவின் வட மேற்கு
பகுதியில் இருந்த, ஒரே ஒரு செயற்கைக் கோள் தொடர்பு நிலையம் மட்டும் எட்டு அடி
நகர்ந்து இருந்ததாகக் கூறி, ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டதாக விளக்கம் தெரிவித்து
இருந்தார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உடனே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெய்னர் கைன்ட் என்ற
நிலநடுக்கவியல் வல்லுநர், ஜப்பான் தீவில் உள்ள மற்ற செயற்கைக் கோள் நிலையங்கள்
பற்றிய விபரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்காமல், ஒரே ஒரு நிலையம் மட்டும் எட்டு அடி
நகர்ந்து இருப்பதன் அடிப்படையில், எப்படி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டது
என்று கருத முடியும்? என்று விளக்கம் கேட்டார். </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அத்துடன் டாக்டர் ரெய்னர் கைன்ட் அவர்கள், டாக்டர் கென்னத் ஹட் நட்டின்
விளக்கம்,ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதிக்கு மட்டும் பொருந்தும், என்று கருத்து
தெரிவித்து இருக்கிறார்.</span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் இன்று வரை ஹோண்சு தீவின், மற்ற செயற்கைக் கோள் தொடர்பு
நிலையங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.</span></div>
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இந்த</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,
ரோன்ஜியாங் வாங் மற்றும் தாமஸ் வால்டர்</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">என்ற
இரண்டு ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானில் உள்ள ஐநூறு செயற்கைக் கோள் நிலையங்கள்
குறித்த தகவல்களை ஆய்வு</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">செய்ததின்
அடிப்படையில், ஜப்பான் தீவின் கிழக்குக் கடற் கரைப் பகுதியானது, கிழக்கு</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">திசையில் ஐந்து அடி நகர்ந்து விட்டது
என்று தெரிவித்து இருக்கிறார்கள்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-size: 11.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">இதே</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">போன்று ஸ்டீபன் ஸ்டோபோலவ்</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">என்ற புவியியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர், கணிப் பொறி உதவியுடன்
ஆய்வு செய்து,</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: "Times New Roman";">ஜப்பான் </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">எண்பத்தி எட்டு அடி வரை நகர்ந்து</span><span lang="TA" style="font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">விட்டது, என்றும் தெரிவித்து இருக்கின்றனர்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="font-size: 11.0pt;"><o:p></o:p></span><br />
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: "Times New Roman";">முக்கியமாக
ஜப்பானில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு நானூற்றுக்கும் அதிகமான
முறை கடும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span>எனவே செயற்கைக் கோள் நிலையங்களின் வேறுபட்ட வீதத்திலான
இடப் பெயர்ச்சிக்கு நிலச் சரிவே காரணம் என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம்.</span><span style="font-size: 11.0pt; mso-bidi-font-family: Latha;"><o:p></o:p></span><br />
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு நல்ல செய்தி</span><span lang="EN-US"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.25pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm; mso-outline-level: 2;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Helvetica; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Helvetica; mso-no-proof: no;">இனிமேல் நில அதிர்ச்சி வருமா</span></b><b><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-no-proof: no;">? </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Helvetica; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Helvetica; mso-no-proof: no;">வராதா </span></b><b><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-no-proof: no;">?</span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Helvetica; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Helvetica; mso-no-proof: no;">என்று வானிலை ஆய்வு மையத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.</span></b><b><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; mso-ansi-language: EN-IN; mso-bidi-font-family: Latha; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-no-proof: no;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 15.25pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm; mso-outline-level: 2;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">பொதுவாக
வானத்தைப் பார்த்து மழை வருமா<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>!
வராதா</span></span><span dir="LTR"></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="LTR"></span>?
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">என்றுதான்
அறிவிப்பார்கள்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆனால்
முதன் முதலாக வானத்தைப் பார்த்து நில அதிர்ச்சி ஏற்படப் போவதை, ஒரு வாரத்திற்கு
முன்பே சரியாகக் கணித்துக் கூறி, </span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="RTL"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt;">ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">பன்நெடுங்
</span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="RTL"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt;">காலமாகவே
பெரிய நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்பு அசாதாரண வானிலை </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நிலவி இருப்பது அறியப்
பட்டுள்ளது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt; mso-bidi-font-family: Latha;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">குறிப்பாகக் கடந்த </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">2011 </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆம் ஆண்டு ஜப்பானில்
சுனாமி ஏற்பட்ட பொழுது கூட</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஹோண்சு
தீவில் நில அதிர்ச்சி மையத்திற்கு மேலே வளி மண்டல மேலடுக்கில் அசாதாரணமாக வெப்ப
நிலை உயர்ந்து இருந்தது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.ஆனால்
நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆனால்
வளி மண்டலத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண வெப்ப நிலை உயர்வானது </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நில அதிர்சிக்குப்
பிறகு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்தான் </span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="RTL"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt;">தெரிய வந்தது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இவ்வாறு
நில அதிர்ச்சிக்கு முன்பு வளி மண்டல மேலடுக்கில் வெப்ப நிலை உயர்ந்ததற்கு,
நாசாவைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">''</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அப்பகுதியில் பூமிக்கு
அடியில் இருந்து வெளிப் பட்ட கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக
இருக்கலாம், என்று தெரிவித்து இருந்தார்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ரேடான்
வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப் படும் மணமற்ற</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நிறமற்ற</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">கதிரியக்கத் தன்மையுடைய
வாயு ஆகும்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இந்த
வாயுவின் கதிரியக்கத்தால் காற்றில் உள்ள மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்கள்
தனியாகப் பிரிக்கப் படுகின்றன<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.இதனால்
காற்றில் மின் சுமை உடைய அயனிகள் உருவாகின்றன.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இந்த
அயனிகளானது நீரை ஈர்க்கும் தன்மை உடையது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.அவ்வாறு நீரை ஈர்க்கும் வினை நடைபெறும் பொழுது வெப்பம் உமிழப்
படுகிறது.இதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம்
என்று</span></span><span dir="LTR"></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="LTR"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">டிமிட்டார் ஒவ்சொனவ்
விளக்கி </span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="RTL"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt;">இருந்தார்</span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;"><span dir="RTL"></span>.</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இந்த
நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் ஜப்பானின் அவாஜி தீவில் </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">,17
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இடங்களில்
வளி மண்டலத்தில்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">சாதாரணமாக
ஒரு கண சதுர சென்டி மீட்டர் பகுதியில் ஆயிரம் அயனிகள் இருப்பதற்கு பதிலாக பனிரெண்டாயிரம்
எண்ணிக்கை என்ற அளவில், உயர்ந்து இருப்பது வானிலை ஆய்வு செயற்கைக் கோள் மூலம்
தெரிய வந்தது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இதன்
அடிப்படையில் ஒரு தனியார் தொண்டு நிறுவன ஆராய்ச்சியாளர்கள்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அவாஜி தீவில் ரிக்டர்
அலகில் </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">5 </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அளவிலான
நில அதிர்ச்சி ஏற்படும் என்று முன்கூட்டியே அறிவித்தனர்<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span dir="LTR"></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="LTR"></span> <o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அந்த
அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள்</span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ரிக்டர் அலகில் </span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;">6.3
</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அளவிலான
நில அதிர்ச்சி ஏற்பட்டது<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அப்பொழுது
இருபத்தி நான்கு</span><span dir="RTL"></span><span dir="RTL" lang="TA" style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 11.0pt;"><span dir="RTL"></span> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt;">பேர் காயம் அடைந்ததைத் தவிர உயிரிழப்பு
எதுவும் ஏற்படவி</span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ல்லை<span dir="RTL"></span><span dir="RTL"><span dir="RTL"></span>.</span></span><span style="color: #333333; font-family: "Helvetica","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin-bottom: .0001pt; margin: 0cm; mso-line-height-alt: 10.9pt;">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயுக் கசிவு ஏற்படுவதற்கு இது
வரை யாரும் சரியான விளக்கத்தைக் கூற வில்லை,எரிமலைகளில் இருந்து வெளிவரும் ரேடான்
வாயு,நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் இருந்து வெளிப் பட்டு இருப்பதன்
மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு
இருப்பதை உறுதிப் படுத்துகிறது.</span></div>
<h2 style="background: white; line-height: 21.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 14.0pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஏன் சுனாமியை
முன்கூட்டியே அறிய முடிய வில்லை </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 14.0pt;">?<o:p></o:p></span></h2>
<div class="MsoNormal">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">உலகில் இருபத்தி மூன்று
சதவீத மக்கள் கடற் கரையோரத்தில் வசிக்கின்றனர்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இந்த நிலையில்
புவியியலாளர்களால் சுனாமியை முன் கூட்டியே அறிய முடியாமல் இருப்பதற்கு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நில அதிர்ச்சி மற்றும்
சுனாமி குறித்த அவர்களின் தவறான புரிதலே காரணம்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 21.0pt; margin-bottom: .0001pt; margin-bottom: 0cm; mso-outline-level: 2;">
<b><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 14.0pt; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Helvetica; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Helvetica; mso-no-proof: no;">எரிமலை வெடிப்பை முன் கூட்டியே அறிவதன் மூலம்</span></b><b><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 14.0pt; mso-ansi-language: EN-IN; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-no-proof: no;">, </span></b><b><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 14.0pt; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Helvetica; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-hansi-font-family: Helvetica; mso-no-proof: no;">நில அதிர்ச்சி மற்றும்
சுனாமியை முன் கூட்டியே அறியலாம்.</span></b><b><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 14.0pt; mso-ansi-language: EN-IN; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-IN; mso-no-proof: no;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">எரிமலைகள்
வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.எனவே எரிமலைகளின்
இயக்கத்தை அறிவதன் மூலம் </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நில
அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">உதாரணமாக </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">வட அமெரிக்கக்
கண்டத்தில்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஓரிகன்
நகரக் கடற்பகுதியில் </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">1981</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர்
தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஓரிகன் நகரக்
கடற்கரையில் இருந்து</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, 300 </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">மைல் தொலைவில்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">கடலுக்கு அடியில் ஒரு
இடத்தில்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நீரில்
அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அப்பொழுது அங்கு
எரிமலைகள் எதுவும் காணப்பட வில்லை.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆனால் ஒன்பது ஆண்டுகள்
கழித்து</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, 1989</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆம் ஆண்டு அதே இடத்தில்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">பத்து மைல்
தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை அந்த ஆராய்ச்சிக்
குழுவினர் கண்டுபிடித்தார்கள்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">எனவே கடலுக்கு அடியில்
இருக்கும் எரிமலைப் பகுதியில் கடல் நீரில் கனிமங்களின் அளவை அறியும் கருவிகளைப்
பொருத்துவதன் மூலம் கடலடி எரிமலைகளின் இயக்கத்தை அறிய இயலும்.அதன் அடிப்படையில்
நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படப் போவதையும் அறிய இயலும்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">குறிப்பாக ஒரு எரிமலை
வெடிப்பதற்கு முன்பு அதிலிருந்து கந்தக வாயு உள்பட பல</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">வாயுக்கள்
வெளிவருகின்றன.உதாரணமாக பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள பினாடுபோ எரிமலையில் இருந்து </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">13.05.1991
</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அன்று</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதிக அளவு கந்தக
வாயுக்கள் வெளிவந்தது.அதன் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு </span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,12.06.1991
</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அன்று</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அந்த எரிமலை வெடித்துச்
சீறியது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இதே போன்று கடலுக்கு
அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆனால் தற்பொழுது கடல்
தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் செல்வதாலேயே நில
அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் தவறாக நம்புகின்றனர்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">எனவே அதன்
அடிப்படையிலேயே சுனாமியை அறியும் முறையும் </span><span lang="TA" style="color: #141823; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt;">மேற்கொள்ளப்
படுகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">குறிப்பாகக் கடலுக்கு
அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நில அதிர்ச்சியால் கடல்
நீரானது மேல் நோக்கி உந்தப்படும் பொழுது</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஏற்படும் கடல் மட்ட உயர்வால்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">உருவாகும் அழுத்த
அதிகரிப்பு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">கடல்
தரையில் பொருத்தப் பட்டு இருக்கும் கருவிகள் மூலம் (</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">pressure
sensor) </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அறியப்
படுகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதன் பிறகு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அந்தத் தகவல்கள் </span><span lang="TA" style="color: #141823; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt;">சமிங்ஞைகள்
(</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">Signal) </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">மூலம்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">,</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">கடல் மட்டத்தில் மிதந்து கொண்டு
இருக்கும் மிதவைக் கருவிக்கு (</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">tsunami buoy )</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அனுப்பப் படுகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதன் பிறகு அந்தத்
தகவல்களானது செயற்கைக் கோளுக்கு அனுப்பப் படுகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதன் பிறகு அந்தத்
தகவல்கள் சுனாமி ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படுகிறது.சுனாமி ஆய்வு மையத்தில்
இருக்கும் நிபுணர்கள் அந்தத் தகவல்களை ஆய்வு செய்து சுனாமி வருமா</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">? </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">வராதா</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">? </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">என்று முடிவெடுத்து
அறிவிக்கின்றனர்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">இந்த முறையில் </span><span lang="TA" style="color: #141823; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;"> </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt;">நில
</span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதிர்ச்சி
ஏற்பட்ட பிறகே</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">தகவல்கள்
பெறப் பட்டு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆய்வு
மேற்கொள்ளப் படுவதால்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">சுனாமி
வருவதற்குப் பத்து முதல் இருபது நிமிடங்களுக்கு முன்பே</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">சுனாமி எச்சரிக்கை
செய்ய முடிகிறது.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">ஆனால் கடலுக்கு அடியில்
இருக்கும் எரிமலைகள் வெடிக்கப் போவதை முன் கூட்டியே அறிவதன் மூலம்</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">நில அதிர்ச்சியையும்
சுனாமியையும் பல நாட்களுக்கு முன்பே அறிய இயலும்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">அதன் அடிப்படையில்
தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #141823; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Helvetica; mso-hansi-font-family: Helvetica;">உயிர் மற்றும் பொருட்
சேதத்தைத் தவிர்க்கலாம்.</span><span style="color: #141823; font-family: "Helvetica","sans-serif"; font-size: 10.5pt;"><o:p></o:p></span></div>
<div style="background: white; line-height: 15.0pt; margin-bottom: .0001pt; margin: 0cm;">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-41768961478865665462013-08-30T03:02:00.001-07:002013-08-30T03:05:48.821-07:00from my first book<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<b><u><span style="font-size: 16pt;"><span style="font-family: Times New Roman;">The sub continent, India is continuously rising.</span></span></u></b></div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: Times New Roman;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">In Sarathamangalam, which is near Kallakkudi in Trichy district of Tamilnadu, the fossil of a sea anemone which lived millions of years ago has been found. Apart from this, the fossils of turtle and sea plants have been discovered at the same place which is about 100 kilometers from the sea. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">These fossils came up when there were heavy rains and were discovered . This news was reported in The Hindu daily, dated </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> 06-09-2005. Based on this, it is proved that Trichy and other areas were on once beneath the sea. Then, why did the sea recede? It is because the sub Continent , India is rising from below sea level upwards above sea level.. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> Similarly, in Gujarat near Kutch , the skeletons of whales which lived 43 million years ago have been discovered. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The skeleton of a whale which lived 50 million years ago has been discovered in the caves of Simla which is at the foot of the Himalayas . Apart from this, the fossils of a sea arthropod called Trilobite (three lobed) which lived 500 million years ago under water has been unearthed in a mountainous place called Zankaskar near Kashmir, some 16,400 feet high on the Himalayas </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Similarly, on the western part of India also skeletons of whales have been discovered in Pakistan and in the sulaiman mountain ranges. Moreover, on the eastern side of India in Tibet , the skeleton of ichthyosaurus, a huge sea animal which lived 100 million years ago has been discovered at a small village called Dingiri </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">All these events prove that the sub continent, India was once beneath the sea and has come up above sea level and is still rising.</span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Sub marine mountains have risen to the surface<b><u><span style="font-size: 16pt;"></span></u></b> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><u><span style="font-size: 16pt;"><span style="text-decoration: none;"> </span></span></u></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The sea moss and the coral reefs which grow in shallow waters where sunlight can reach are found on mountains all over the world. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><u><span style="color: red;"><span style="text-decoration: none;"> </span></span></u></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Sea moss and the coral reefs are found in Canada in North America, Michigan in Central America, including Texas , <b><i><span lang="EN">Guadalupe</span></i></b><span lang="EN" style="color: red;"> </span>Mountain which is 3700 feet high in Mexico , Alps Mountain in Europe, Ural Mountain in Russia which is in Asia, in Siberia and Flinders Mountain in Australia . *1 </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The reason for the sea moss, corals and the limestone produced by the secretions of sea creatures to be found on the mountain is, the mountain and its surrounding areas were once below the sea and have now risen up above sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<b><span style="color: red;"></span></b><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Moreover there is also a huge desert of salt at the foot of mount <b><i><span lang="EN" style="color: windowtext;">Guadalupe</span></i></b><span lang="EN"> </span>and this proves clearly that, this land surface has risen up from under the sea. When this land rose from below, the sea water that stagnated would have evaporated and created the salt desert. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">During the recent under water earth quake near Sumatra which resulted in Tsunami and rocked the whole of South Asia , the sea bed near the island rose up to 5 feet high and exposed the coral reefs and sea moss. So, it is understood that, natural calamities like Tsunami, earth quakes and landslides occur only when mountains rise from inside the earth. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The remains of sea animals are all discovered all over the world only on mountains. To be specific, the fossils of a sea (three lobed) arthropod called Trilobite which lived 500 million (one million is equal to ten lakhs) years ago under water has been found on mountain rocks. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> <span style="color: red;"> </span> </span></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><u>*1 Refer to list of references.</u> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The sea organisms which live in shallow waters get buried alive when there is a land slide along with soil and wet mud. Later when this portion of the shore rises up above sea level, these buried creatures after millions of years would have become fossils. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> The continuous process of rising of mountains from below the sea, enables us to find the fossils of the sea organisms in rocks found on mountains. While the mountains continue to rise, the surrounding areas experience land slides and this in turn exposes the fossils of the embedded sea organisms.. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The fossils of Trilobite have been found on the mountains of all the seven continents of the world and in more than thirty places on earth. This clearly shows that these mountains and continents have surfaced from below the sea.<b></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">To be specific, thousands of fossils of Trilobite<span style="color: red;"> </span>are found on the three continents surrounding the Pacific Ocean . *2 </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The continent of North America is situated on the eastern side of the Pacific Ocean . Burgess quarry<span style="color: red;"> </span>which is situated on the Rocky Mountain in British Columbia , there are about 30, 000 fossils of Trilobite are found on the exposed slate. This place is about 500 miles away from the Pacific Ocean and at 8000 feet high above the sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">On the western side of the Pacific Ocean, the continent of Asia is situated. In the Jinjiang<span style="color: red;"> </span>district of China recently numerous buried fossils of Trilobite have been discovered on the mountain regions. This mountain region is 350 miles away from the sea and 6200 feet above sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">On the southern region of the Pacific Ocean, the continent of Australia is located. On the southern side of this continent, Adelaide<span style="color: red;"> </span>Harbor is situated. On Ediyacara<span style="color: red;"> </span>Mountain which is 650 kilometers on the northern side also fossils of Trilobite have been found. This mountain region is 1900 feet above sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The three places, where the buried fossils of<span style="color: red;"> </span>Trilobite were found lie around the Pacific Ocean and are hundreds of miles away and thousands of feet higher than sea level which clearly shows that all these land surfaces have risen from the depth of the Pacific Ocean . </span> <br />
<div>
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">
</span><br />
</div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">An important feature to be noted is that all the land lies on one side and the Pacific Ocean on the other side. The total area of the Pacific Ocean is 5.9 million square miles. This is more than the area of all the land on the earth put together. Moreover the Pacific Ocean is connected with all the other oceans of the earth. Three fourths of water and one fourth of land is what we see on the earth. Hence, as the land rose gradually, the remains of sea animals are found on the mountains. </span> <br />
<div>
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">
</span><br />
</div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The fossils of a sea organism called Trilobite which lived 500 million years ago under water have been unearthed on the mountains all over the earth. This proves that millions of years ago, all these mountains were under the sea and have gradually risen above sea level. At many places on the mountains, sea shells have been found in abundance. Based on this, it can be argued that the seas may have receded from the mountains! </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><u><span style="font-size: 16pt;">How do fossils formed?</span></u></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">In the case of the fossils of Trilobite found on mountains, there is no reason to state that the seas would have receded from the mountains. It is because, when the land rises suddenly, land slides are caused and the sea organisms get buried in the mud and slush and when this rises above sea level, in due course they become fossils. Hence there is no question of sea receding and exposing the remains and fossils. The real reason for the fossils of Trilobite to be found on the mountains is that, the mountains which were under the sea have risen above the sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Moreover, as the fossils of the sea arthropod Trilobite are found on the seven continents of the world, it is proved that all the seven continents were once under the sea and have risen above sea level. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><span style="font-size: 14pt;">Sedimentary rocks which formed below the sea are found on mountains</span></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><span style="font-size: 14pt;"> </span></b> <b><span style="font-size: 14pt;"> </span></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><span style="font-size: 14pt;">Snake rocks</span></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><span style="font-size: 14pt;"> </span></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Basalt is a kind of rock which is found winding among the other rocks on mountains and these are commonly called snake rocks. Continents are formed by lighter granite rocks. The sea bed is made up of basalt which is stronger. This rock does not absorb water. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Recently, in a mountain near the Great Wall of China , basalt which is 2500 millions of years old has been excavated. Such rocks are formed only under water. The molten rock magma, which comes out with great force from the interior of the earth immediately gets cooled by the sea water and hardens to form these snake shaped basalt rocks. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The reason for these rocks which were formed under the sea to be found on the mountains is that, they had risen from under the sea. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Just like the fossils of Trilobite, these basalt rocks are also found on the mountains all around the world. *3 In India , these basalt rocks are found near Delhi on the western side of Aravalli Range which is the oldest mountain range in the world. Basalt is also found on the Naga Mountain in Nagaland and in Andaman islands .</span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Basalt is also found on mount <b>Troodos</b> which is found in the island of Cyprus . So, as all the land has risen from under the sea, we find that the seas are surrounded and form the central sea land<span style="color: red;">.</span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: #8000ff;"><span style="color: red;"></span></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">On the Alps, in Europe , at about a height of 3800 feet, basalt is found. As it is also found on islands like Papua New Guinea and Japan which surround the Pacific Ocean , it proves that all these islands, mountains and continents have risen from the bottom of the sea </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="font-family: Arial; font-size: 10pt;"><strong>Pillow Rocks</strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">On mount <b>Troodos</b><b>,</b> which is found in the island of Cyprus , Oman , North America and Australia , looking like piled up jack fruits; rocks in the form of pillows are seen. These pillow rocks are also formed under the sea like basalt rocks. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The molten rock which is emitted by the volcanoes found under water gets suddenly cooled and forms a smooth layer. Similar to cotton being stuffed into pillows, the molten rock which keeps continuously flowing out enters this layer, makes it bulge and forms pillow lava series rocks. These are formed in the shape of a spherical or oval rock with a breadth of about one meter. </span></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><span style="font-size: 14pt;">Lakes formed by basalt rocks.</span></b> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> Recently it has been discovered that, in the Indian Ocean, the molten rock material from the core of the earth has gushed out and has formed basalt rock on the ocean bed which may be equal to the area of London . Such formations are called basalt lakes. Deposits of such huge sized basalt are also found on the crust of the earth. Recently, the oldest basalt deposits have been unearthed. Similarly in <i>Thakana Peeta Bhoomi </i>in India , Siberia in Russia , rivers of South Carolina in Columbia at North America and Brazil in North America , deposits of basalt are found. *4 </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">As the basalt which gushes out of the core and forms basalt on the sea bed are also found on the land surface, it is understood that once all these land areas were in the sea bed. This attributes to the fossils and bones of whales and other sea creatures which were found scattered on the different continents of the world. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="font-size: 14pt;"><strong>Earthquake occurs due to the rising of islands and continents</strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"><span style="font-size: 14pt;"><span style="font-size: 14pt;"><u>Whales in deserts!</u></span></span></span><span style="font-size: 14pt;"><span style="font-size: 14pt;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">In an Egyptian desert in North Africa , the skeletons of five whales, three types of sea cows, two crocodiles, sea snakes and the teeth of a shark were found. The people of this place call it “Wadi Al Hitan*5 which means ‘The Valley of Whales’. Apart from this, on Mount Atlas in Morocco , which is also situated in the same North Africa , numerous fossils of Trilobites are found. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">When ground was dug to lay the foundation for the construction of a building in the city of Urumki in China , at two meter depth rocks were located. On it, black colored small and large fossils of fishes ranging from 6 centimeters to 20 centimeters and looking like painting were found. *6. Though they were black in color, the scales, fins and tail were clearly embedded. When the researchers reveled that these fishes lived in the seas 200 million years ago, the people of the city were awe struck. The reason is that, this city has no connection with the sea. This place is situated 2500 kilometers on the west of Pacific Ocean, 3400 kilometers on the south of Arctic Ocean, 6900 kilometers on the east of Atlantic Ocean and 2200 kilometers on the north of Indian Ocean ! </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Recently, a 72 feet whale’s skeleton was found in England . *7 In North America, at the coastal areas like Florida , South Carolina and Alabama and in the central region of Maryland Island , the skeletons of whales are unearthed often. In addition to this, in South America, on the western side of Mount Peru , hundreds of whale skeletons are found. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">In India , near Kashmir , on the mountain region of Zanskar and in Spiti and Lahul valleys the fossils of Trilobite are found. *8. This place is 16,400 feet above sea level. In a mountain cave at Shimla, the jaw bone of a whale which lived 53 million years ago has been found. * 9. Apart from this, on the Arabian Sea coastal area of Gujarat at the Rann of Kutch , the skeletons of whales which lived 45 million years ago were unearthed. *10.</span></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The fossils of Trilobite which lived 500 million years ago were discovered on very high altitudes on the Himalayas and the bones of a whale which lived 53 million years ago was found at the foot of the Himalayas in Shimla. As the skeletons of whales which lived 45 million years were unearthed at the Rann of Kutch, we understand that, first the Himalayan region would have risen and following which Shimla and Kutch would have risen above sea level. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover, earthquakes are occurring as India is rising from the earth. When the rising rocky plates rub against the rocky plates which are stable and not rising, earth tremors are caused. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Hence, earth tremors are caused in the central regions and not in the peripheral areas. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">For example, on 22<sup>nd</sup> May, in the year 1997, an earthquake occurred in Jabalpur situated in Madhya Pradesh. *11. Earthquake did not occur in the nearby regions. This was due to the rising of that particular area alone. In the same way, the reason for earthquakes to occur frequently in the Rann of Kutch at Gujarat is that, it is frequently rising above the sea level. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The reason for earthquakes occurring in the areas of the Pacific is that, the peripheral areas of the continents of North America, South America and Australia are rising frequently. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover, the edges of continents slant downwards and reach the sea. They also penetrate deep into the earth. In other </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">words, the land which had risen upwards from the sea in the form of a ramp consists of fossils and bones of many sea animals, sea moss and coral reefs on its crust and mountains and this proves that the land area had risen from the sea bed.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<br /></div>
<br />
<br />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> As the continents surrounding the Pacific Ocean are rising from the sea bed, earthquakes as well as cracks appear on the land. As the molten rock material, magma gushes out of these cracks, volcanoes are formed. These volcanoes joined together to form volcanic islands like Japan and Philippines . This is the reason why these islands have taken a shape similar to that of the border of the continent of Asia . In the same way, the island of New Zealand has been formed similar to the eastern border of Australia </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">These islands also rise from the sea bed because, though ice is formed from water, it is of lower density and floats on water. Similarly inside the earth, the areas which were formed by the cooling of the molten rock material is of a lower density than the molten rock and rise upwards and when they come above the water level, they form islands. When these islands rise up from the earth, cracks are formed on the ocean floor and <b>Trenches</b> like Mariana and Philippines are formed. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The borders of the continents Europe and Australia rise steep from the ocean floor. Similarly the rock formations of Normandy which also has a steep rising border at Europe and Beachy Head areas often face slight tremors. It is because these places are rising from the earth. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">On the borders of <b>Wedge</b><b> </b>Island which is close to Australia , the rocks are found .in different layers which is visible outside. The layers of rocks are formed inside the earth and rise upwards forming islands and large land surfaces above sea level. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Diamonds are found in all continents. Diamonds are formed 200 kilometers deep inside the earth. *12. But the carrot shaped volcanic tubes called “<b>Kimberlitic</b>” which bring these diamonds above the surface of the earth are only two kilometers deep. When </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The rocky plates formed from molten rock inside the earth rises upwards, it pushes the rocky plate already formed above it upwards. As the molten rock cools down slowly inside the earth, rocky plates are formed. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> When the rocky plates are rising, the molten rock which gets trapped in between these plates pierces the weaker upper layer when pressure increases and explodes and erupts as a volcano. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Such rising rocky plates bring up the diamonds which are formed deep inside the earth, above the surface of the earth. Similarly, the rising rocky plates are responsible for the formation of hot water springs, white smoke and muddy springs. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Diamonds are found on all the seven continents. They are mostly found in the central part of the continents called craton which is the oldest rocky area. *13. There are more than twenty cratons all over the earth. These cratons have been on land for a very long period of time. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover for the diamonds to form and rise to the surface, a long duration of stability is needed. So, continents are structures which are stable and do not move here and there. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover, for a depth of about 40 kilometers, only rocky plates are seen. Below lies the molten rock material called <b>“Moho”</b> and this is found in layers. Through various researches conducted with the waves created by earth tremor, this has been found out. In many places on the earth, this molten rock material called <b>“Moho”</b> has pierced the crust and has come out to the surface. To be specific, at Newfoundland island a <b>“Moho” </b>mountain has been formed. Similarly in Ice age, the molten rock material called <b>“Moho”</b> has come out as rocks. As the molten rock material which is at 600 kilometers deep has come out at places like North America , we can say that islands and continents are immovable. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>The continent of Europe is continuously rising.</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black; font-size: 14pt;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">On all the continents found on earth, caves are seen on the sea shore. To be specific, surrounding the continent Europe , there are numerous sea caves. *14. These sea caves are formed due to the erosion caused by the sea. The roofs of caves thus formed are 20 or 30 feet above sea level.</span> </span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;">Small ships can travel through most of the caves. How could have the roofs of caves which were formed due to the erosion by the sea have gone up to such a height?</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;">Many sea caves are found on the sea shore many hundreds of feet away from the sea and many feet high from the sea level. Many sea caves are also found dry without water.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black; font-size: 14pt;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">All these caves, the islands on which they are situated, the land surfaces and the continents show us clearly that the land is continuously rising from the sea. They say that when two land surfaces collide with each other, mountain ranges are formed. But, this (in the picture) mountain region shows clearly that it did not form by the collision of a land.</span></span><span style="color: black; font-size: 14pt;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><b><u>The sea level is different in different places</u></b>. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> Similarly when the sea level surrounding Europe was monitored by satellite for a long period, it has been found out that the sea level is rising at different rates in different places. How the same sea level can be low at a particular place and rise at other places? The sea level is measured in comparison with the nearby land level. That is, the waves that are got back from the satellite are sent back on the land and the sea at the same time. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">When these waves collide with the land and the sea bed and return, from the difference in speed with which they return helps us to calculate the level of the water in the sea. With the help of the details thus collected and compared, it has been found out that the sea level is different at different places surrounding the continent of Europe .*15. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Though it has been said that the reason for this is that the land in that area is higher, researchers are of a different opinion. They call this rise as <b>Glacial Isostatic Adjustment. </b>They say that, previously layers of snow was exerting a pressure on Europe and that, now these have melted and so the land is rising further . Specifically they say, Scotland , which is on the northern side of Europe is rising fast and is gaining more height than South England . </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">But, this is not a proper explanation. The fossils of the arthropod, Trilobite are found in <b>Dudley</b>, situated in central England . So, including England the whole of Europe has risen from the seabed 500 million years ago and is still rising. Iceland surfaced only 12 thousand years ago. But the fossils of Trilobite assure that 500 million years ago the continent of Europe had started rising and is still continuing to rise. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><u>Islands are continuously rising.</u></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black; font-size: 14pt;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the same way, near the islands which are situated in the sea near Australia also the level of the sea has been found to vary in different places. *16. The main reason for the difference in sea level is that these islands are rising in different speeds. </span></span><span style="color: black; font-size: 14pt;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the small streak like Andaman Island in the Indian Ocean , many sea caves are found. Below these caves, tourists go on boat rides. The sea caves’ upper curve is in such a height. The reason for the curvature of the caves that were formed due to erosion by the sea to be found at such a height is that Andaman Island is rising from the seashore. It is not possible for the Indian Ocean which is surrounding the Andaman Island to suddenly decrease. There is one more proof to show that Andaman Island is rising: the snake / basalt rocks which are formed under the sea are found on Andaman Island . </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Only due to the rising of Andaman Island from the sea bed, earthquakes often occur there. The rising rocky plate’s edges below the island rub up and down against the non-rising neighboring earth plates which results in earthquakes. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Therefore, the reason for the earthquakes is only the rising of the land and for the land slides also only the rising of the land is responsible. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">When a part of the land rises, below the surrounding land areas an open space is created. When it rains, the rain water fills up this space which makes the soil marshy and results in land slides. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The caves which are found on the edge of the seashore become caves on mountains when the land rises. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the mountainous region of Srilanka, many spherical caves have formed. The spherical caves show us clearly that while Srilanka was rising, these caves were formed due to the erosion by the surrounding sea water. The most important thing to be noted here is that the lands surrounding these caves have only encountered severe land slides which are clearly shown by the map. So, when the land and mountains rise, land slides result. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="font-size: 14pt;"><strong><u>Isle of the Dead<span style="color: black;"> is continuously rising.</span></u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">There is another very clear proof to show that the islands are rising. On the world map, near Antarctica Ross Sea is marked. Captain Sir. James Clark Ross went on an expedition from Britain to Antarctica in two ships during 1841 and it is named after him. </span></span><span style="color: black;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">After his expedition in Antarctica, Captain Ross on his way to Britain rested for a while in Tasmania Island which is near Australia . Along with </span>Thomas Lempriere,<span style="color: black;"> a researcher carved a 20 centimeter length </span>benchmark<span style="color: black;"> of a rising sun on a rock on the sea shore to mark the average level of the sea and to signify that they were conducting a research on the level of the sea water. *17. As they did not want anyone to erase it, they chose the </span><b>Isle of the Dead</b><span style="color: black;"> which was a deserted spot.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">This island is near Tasmania . As this island was used to bury only dead people, it was called </span><b>Isle of the Dead</b><span style="color: black;">. They chose a rock where there was not much of waves and carved a straight line on which they drew like the rays of the sun diverging from it. This symbol was carved on the 1<sup>st</sup> of July in the year 1841. To be precise, 160 years ago from this day the symbol was carved. Today, the level of the sea is 30 centimeters lower than the symbol. Hence, this incident also makes it clear that the land is rising.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><strong><u><span style="color: black; font-size: 14pt;">During the Ice age also the sea level has risen</span><span style="color: black;">.</span></u></strong> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Even in Ice age, it has come to our notice that there have been a lot of differences in the sea level within a short period of time.. This too has surprised the scientists. Due to change in the temperatures in the polar areas, the snow layers keep melting and when there is snow fall again, the snow layers keep forming again which produce differences in the level of the sea.<span style="color: black;">Usually, this rise and fall will be 100 feet in one lakh of years.</span></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Scientists are of the opinion that this change in the level of the sea would have taken place in one lakh of years due to the changes that occurred on the orbit on which the earth revolves around the sun. Other than that, the scientists were under the impression that twelve thousand years ago the level of the sea in Ice age was stable.</span> </span></span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;">When this was the prevailing condition, two scientists of the Columbia University, William Thomson and Steven </span>L Goldstein<span style="color: black;"> have discovered a new method in which, by studying the amount of radio active uranium present in the fossils of the sea moss deposited on the land, we can find out accurately how the level of the sea had been thousands of years ago. *18</span></span></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">On the basis of this when they conducted a research; it had been found that, in Ice age also huge changes have occurred in the sea level. There had been changes in about 30 meters height. This is an unexpected and surprising happening. This event has taken place between 3000 to 9000 years.</span></span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span></span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">In Ice age where the temperature does not fluctuate, what is the reason for the variation in sea level?</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">this indicate that the so called ice age does not happened. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>The continent, Antarctica is continuously rising.</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black; font-size: 14pt;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">In March 2002, on the eastern corner, peninsular</span><strong> </strong><span style="color: black;">area, in the continent of Antarctica situated at the South Pole, the ice sheets which form on the land and extend on the sea suddenly broke into hundreds of pieces and were thrown in all directions. This incident surprised and stunned the scientists. Geologist </span><strong>Eugene Dumac </strong></span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">of the Michigan University stated “This is a new event which has never happened before”..*19. David Wagon, a research scholar of the British Antarctic Research center has stated, “It is difficult to believe that 500 billion ton of glacier had disintegrated in thirty five days.” </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Generally, due to the changes in temperature the layers of snow and ice at the poles melt very slowly into water and mix with the sea.</span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">To discuss the reason for the sudden breaking of the glacier on 4<sup>th</sup> and 5<sup>th</sup> April 2002 , more than 60 scientists from 12 countries assembled in Hamilton College and discussed. It was announced that, the defective formation of the glacier was only responsible for its disintegration.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Why should the formation of the glacier suddenly disintegrate?</span> </span></span></span><span style="color: black;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The layers of ice are spread out continuously on the land as well as the sea. The truth is when the peninsular</span><b><span style="color: red;"> </span></b><span style="color: black;">area of Antarctica rose upwards, the formation was affected and it broke into pieces. This part of Antarctica is under the British and hence the arthropod Trilobite’s fossils have been found. So the reason for the sudden breakage is that this particular continent is rising.</span></span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Similarly in Greenland at North Pole, sheets of ice covering the island had long cracks and these started sliding faster than before.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the North Pole area near the border of Ellesmere Island is an ice shelf called Ward Hunt on which many cracks have formed during 2002. *20.</span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Appearance of cracks on the ice shelves and these cracks breaking them, which had been silent for the past three thousand years, is only due to the difference in the rate of rising of the land surface and damaging the structure of the ice shelves.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">A European research scholar, Dr,remcocharu after conducting a research through the satellite, ERS-1 has stated that, the level of the Arctic Ocean in the North Pole region is reduced by 2.17 millimeters starting from1995 – 2003. According to this theory, temperature rise is not the reason for the cracking and breaking of the ice shelves. It is because; the increase in the temperature would have resulted in the melting of ice and increased the ocean level. But, the level has decreased! So, it becomes clear that the rising of the islands is responsible for the cracking of the ice shelves and the lowering in the level of the ocean.</span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>The Continent of South America is continuously rising.</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Similar to the finding of fossils in the deserts, huge deposits of salt is also found.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The largest salt deposit of the world has been discovered in the desert region of </span><b>Uyuni</b> which is s<span style="color: black;">ituated on the south western side of Bolivia in South America . This salt desert is of an area of 4600 square miles. Ten billion tons (1 billion = 100 crores) of salt is found here. This place is situated 11 thousand feet high from sea level. When seen from there only salt is seen in all directions as far as the eye could see and so this area appears as a white region.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></div>
<br />
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;">Similarly in </span><b>Kavir</b> <span style="color: black;">desert in the </span>Plateau <span style="color: black;">of Iran, Death Valley in the central part of North America, </span><b>Atacama</b><span style="color: black;"> Desert in South America, Great Victoria Desert in central Australia , Kalahari Desert and in Botswana in South Africa and Sahara Desert in North Africa , large deposits of salt are found. How could have salt of such magnitude be formed in deserts?</span></span></span></span></span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> <span style="color: black;">Already the fossils of sea organisms have been unearthed in deserts. So it is confirmed that all these deserts had been under the sea once upon a time and later have surfaced above from below the sea. When the sandy area rose above the sea level, some areas were lower and the sea water which stagnated in due course got evaporated and the large deposits of salt were formed.</span></span></span></span></span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span></span></span></span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>The Continent of Australia is continuously rising</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Robert backer is a research scholar in the New England University of Australia . </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Every Sunday to take rest, he used to visit the Sydney Harbor where he once played and enjoyed with his friends when he was young.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></div>
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;">
</span></span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Incidentally one day, on the rocks he saw many nests made of lime and those resembled the nests of wasps. These nests were the nests of </span><b>tubeworms</b><span style="color: black;"> which live in the sea. But, seeing it at such a height was something abnormal. The nests were about 7 feet above sea level where much erosion had not occurred.</span></span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span></span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">These </span><b>tubeworms<span style="color: red;"> </span></b><span style="color: black;">need to be in water for at least six hours for survival. Under these circumstances, what could be the reason for the nests being built 7 feet above sea water level? </span></span></span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"><span style="color: black;">Backer was able to arrive at only one explanation. That is, the sea level in Sydney harbor has decreased by seven feet. And this must have taken place recently. If it had happened long before, the nests would have been eroded to a greater extent. </span></span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"><span style="color: black;">Immediately he conveyed the information to Professor Peter flood and Dr. Bob Haworth and they decided to conduct an elaborate research. </span></span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">Subsequently, they went to the island New Caledonia which is 600 miles away from Australia and searched for the nests of the <b>tubeworms.</b><span style="color: black;"> Curiously, there also they found the </span><b>tubeworms’</b><span style="color: black;"> nests at a height where the sea waves could not touch them.</span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span></span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Next, in island of Madagascar found near Africa in the Indian Ocean, in South Corona on the border of North American sea shore, and in South America on the sea shore of Brazil, they found the insects’ nests at a height above the sea level and based on their findings of 8 years, they finally disclosed that the sea level has gone down. *21. But, they did not reveal why it has dropped. Where did all the sea water go? What happened to it? There was no explanation for these. It is more than three billion years since the seas were formed. It is not possible for the sea to reduce its level throughout the world. So, only the continents have risen. This is the reason for the insects’ nests seen at a height above the sea level.</span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></span><br />
<hr />
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>The mystery of non sinking islands.</u></strong></span> </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">I will disclose another important matter. In the year 1990, environmental scientists released a very important report. In that they had stated that the atmosphere is heated too much and so the glaciers are melting and due to this action, within ten years the sea level will rise. They warned that when this happens, all the nine tiny islands like Tuvalu and Vanuatu will get submerged in the sea. Immediately, the President of Tuvalu which is in the Pacific Ocean wrote a letter to the president of New Zealand . He had stated that as per the calculations of the environmentalists, their island will get submerged in ten years time and in case such an event takes place, shelter has to be provided on compassionate grounds to the inhabitants of the island as environmental refugees. </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Ten years passed but, no island sank! At the same time, the scientists of NASA had found out through research that in the polar region, ice has melted and fifty billion tons of water had mixed with the sea. Though enormous amount of water flowed into the sea why the islands did not sink? Interestingly, when the level of sea was checked near the islands, the sea level was found to be two and a half inches lower than before. This incident clearly shows us that the islands are rising.</span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></span><br />
<hr />
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black; font-size: 14pt;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"><strong><u>Is Pacific Ocean floor moving? Research Scholars’ Opinion. </u></strong></span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">As they say that the continents are moving, they also say that the seabed is also moving. To support this opinion, they are showing the structure of the volcanic islands like Hawaii , Kauai</span><b><span style="color: red;"> </span></b><span style="color: black;">and Oahu as proof.</span> </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">That is, the hot molten rock material from the core of the earth pierces the Pacific sea bed and comes to the surface. At the same time, the Pacific sea bed moves in North West direction. It was said that due to this movement the Hawaiian Islands appeared in a row in the North West . *22. </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><u>Aleutian trench.</u></span> </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><span style="color: black;">Along the Hawaiian Ridge, 1400 miles away from Hawaii , an island called Midway is situated. Starting from there, the line of volcanic islands deviates from northwest direction and faces north. The aerial view of this curve appears like the curved leg of a dog and so this curved region is called “Aleutian trench.</span></span> </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"></span><b><span style="color: red;"></span></b><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"> <span style="color: black;">It is said that<b>, </b>47 million years ago the Pacific plate was moving towards north and suddenly it changed the direction and started moving in north westerly direction. But till this day, nobody has given any acceptable explanation as to why the Pacific plate suddenly changed the direction of its movement. In fact, the continents of Asia, Australia , North America and South America are continuously rising from the earth. The truth is, due to this upward movement, a large crack has formed on the Pacific seabed and the molten rock material is oozing out and this has resulted in the formation of the Hawaiian volcanic ridge.</span></span></span></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><span style="color: black;">Is it due to the seabed moving on a hot center, that these volcanic ridges and <span style="color: black;">Island chains came into existence? To prove this, the rock found on the island which appeared first should have the oldest rock formation and the rocks of Hawaii island which was formed later should have the newest rock formation is normally expected. But the research conducted on Easter islands did not show any change in age.</span></span></span> </span></span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover, when the direction of the other underwater mountain ranges is taken into consideration, it seems that the Pacific seabed should be moving in more than two directions. This is not possible. Hence, stating that similar to the movements of the continents, the sea bed is also moving is a wrong theory. </span></span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong>Is the ocean bed of Atlantic Ocean expanding? Opinion of research scholars</strong></span> </span></span></span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;">Another explanation is give to substantiate that continents are moving. They quote the <b>S -</b> shaped Mid Atlantic Ridge which is an 80,000 miles long mountain range as a proof for this.</span></span></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In this region, the molten rock comes out and produces new rocky plates. As the new rocky plate forms on the upper region, it dashes against the existing adjacent rocky plates and pushes them; and due to this, the Atlantic Ocean bed expands and expands on both sides. They continue to say that this causes the continents of America and Australia to move in the opposite directions. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">A question arose: if so, the diameter of the earth should increase. The answer given was, such newly formed rocky plates went through the <b>Trenches</b><span style="color: black;"> found in the deeper part of the Pacific Ocean into the earth and were destroyed. (But how could the rocky plate of lesser density go inside the molten rock which is of higher density? There is no answer for this).</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Another research scholar asked that if it was so, was the Pacific Ocean shrinking? No satisfactory answer has been given for this question till now. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">According to this concept, new rocky plates of 80,000 mile length are formed. But the lengths of the <b>Trenches</b><span style="color: black;"> found in the deeper part of the Pacific Ocean into which these rocky plates go and get destroyed are only 35,000 miles long! Apart from this, the mountain and mountain ranges formed due to the collision of the rocky plates are only 9,000 miles. According to this theory, among the rocky plates formed, only half gets destroyed. Hence, this view was also discarded as it could not be accepted.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The basis for the theory that, the Atlantic Ocean floor is expanding<b><span style="color: red;"> </span></b><span style="color: black;">has also been found incorrect. That is, the central portion where the new rocky plates are formed, the age of the rocks should be much lesser and as they move towards the continents, the age of the rocks should be more. But, where the new rocky plates are formed itself, there are submarine mountains which have rocks as old as billions of years. So this concept is also not correct.</span> </span></span></span><span style="color: black;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"><strong>Is it true that continents are moving? Opinion of Research scholars.</strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">They say that the continents that are found on the surface of the earth are moving by floating on the <strong>Asthenosphere</strong> which consists of molten rock like ships cut through water and sail. By checking the waves caused due to tremors, it has been found out that the <strong>Asthenosphere</strong> of molten rock is not found continuously below the continents and the sea. So, to say that the continents are moving is similar to saying that without the track trains are moving and without water ships are sailing on the land. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> But, showing that when the sea shores of the continents of Africa and America are joined together, they match well and it is stated that all the continents were together before. Is it true? More than 30 experts tried to join the edges of all the continents with the help of the computer but failed miserably. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">When the western sea shore border was joined to the eastern seashore of the continent America , it did not fit correctly. When Mexico in the central portion was cut and pasted, its edges fitted correctly. But, 2 billion year old rocks are found in Mexico . So Mexico region cannot be left out. Hence, stating that the edges of continents fit correctly is incorrect. The continents had never been together at any point of time. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The most important point is that the continents are of different heights. The highest continent among all continents is Antarctica . Its height is approximately 5800 feet. The next in the line is Asia which is of 3200 feet high. The continent which is of the least height is Australia . Its height is approximately 300 feet above sea level. Hence, all the continents could never have been together.</span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"><strong><u>Dinosaurs prove that the continents did not move and the fossils of Trilobites show that the continents are rising in height. </u></strong></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">South America and Africa are separated by the Atlantic Ocean . But, in both these continents the bones of the giant sized lizard, <b>Mesosaurs</b> <span style="color: black;">which is a variety of dinosaurs are found.</span> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;"> Based on this, Albert <b>Wagner<span style="color: red;">,</span></b><span style="color: black;"> a meteorological researcher raised a question as to how the same type of animal could be found in different continents when they are separated by oceans and concluded that previously they should have been one single continent. But, at that time this idea was vehemently opposed.</span></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the Bering Strait which separates North America from Russia ’s Siberia , the land rose first and served as a bridge of land for all animals like woolly mammoth, wild buffaloes, lions, bears rabbits and cave men. </span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span></span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">To support this theory, in Siberia, in the </span><b>Yana</b><span style="color: black;"> river valley, the Stone Age tools used by man and numerous bones of animals were found. * 23.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The bones of the dinosaur, </span><b>Sauropods</b><span style="color: black;"> which lived much before this period were also found in numerous quantities.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Like this land bridge which is known as </span><b>Beringia<span style="color: red;"> </span></b><span style="color: black;">there should have been many land bridges between continents, through which the dinosaurs would have moved and spread. Researchers said that other than this it was not possible for the continents to move.</span> </span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><strong>Wagner </strong>r<span style="color: black;">efused to believe the concept about land bridges but argued that continents are moving.</span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">200 million years ago, a huge continent named Pangaea got divided in to two continents called </span><b>Laurasia </b>and <b>Gondwana</b>. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">150 million years ago the continent </span><b>Gondwana </b><span style="color: black;">broke in to many pieces and formed South America, Africa, Australia and India .</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Among this, India moved in a north eastern direction, crossed the equator 45 million years ago and collided with the continent Asia . On account of this, the Himalayas were formed. </span><b>Wagner<span style="color: red;"> </span></b><span style="color: black;">also said that this was cause for the earthquakes to occur there.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The dinosaurs which were the proof for </span><b>Wagner‘s</b><span style="color: black;"> concept of moving continents have today become the opposing features.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The recently unearthed skull of dinosaur at the riverside of Narmadha, when studied has been found to have existed 95 million years ago and its close relatives have been living in South America and Africa . </span></span><span style="color: black;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Professor <strong>Paul Sereno</strong></span><span style="color: red;"> </span><span style="color: black;">of the University of Chicago has said, “We cannot get the closely related species without transport”. *24.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The problem here is that according to Pangaea’s</span><b><span style="color: red;"> </span></b><span style="color: black;">concept, all these continents got separated 150 million years ago and have been isolated by the seas and oceans. So, the question now is that, how a species which evolved after that period spread to other continents.<i></i></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><strong><span style="color: black;">Is the Pangaea concept true?</span><u><span style="color: red;"></span></u></strong> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">According to the Pangaea concept, India was an island continent 65 million years ago. Dinosaurs which evolved during that period and lived in the other parts of the world had no opportunity to enter India . It was because, India was surrounded by sea. But, the skeletons of dinosaurs have been found in many parts of India . Taking this into consideration, and according to the Pangaea concept that continents keep moving, India had never been an island continent. It is proved that as at present; it had joined Asia . Only if it had happened, the dinosaurs could have come into India.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span></span></div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Now </span><b>Wagner‘s</b><span style="color: black;"> followers have explained that, the continent </span><b>Gondwana </b>s<span style="color: black;">hould have got separated at a later stage about 100 million years ago and even after that there should have been many temporary land bridges between continents for a period of time, through which the dinosaurs would have traveled to and fro.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">But, the full opposing factor in this case is the dinosaur,</span><b><span style="color: red;"> </span>Sauropods</b><span style="color: black;"> which evolved 65 million years ago. This dinosaur which lived in many parts of India and its close relatives had been living in South America and Madagascar Island in Africa .</span></span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">According to the Pangaea concept, India was a separate island continent which had detached it self from Africa and moved thousands of miles and was near the equator. It had not yet come near the continent of Asia . There had been sea in between India and Asia . How could the dinosaurs,</span><b><span style="color: red;"> </span>Sauropods</b><span style="color: black;"> have reached India ?</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Professor Jeffery Wilson of the University of Michigan has said, “The statement that India had moved has not been substantiated with direction and time.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">But, Paleontologists have said that, fifty million years ago that is even before Mount Everest came into being <b>Sauropods </b>dinosaurs had entered India from the North. According to this theory, it is proved that India had always been part of the continent, Asia . </span></span><span style="color: black;"> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Dinosaurs have lived in Antarctica and Australia . <span style="color: black;">Similar to the land bridge which was formed in </span><b>Bering Strait</b><span style="color: black;"> area due to the rising of the land which made the sea recede and paved way for animals to move from one place to another, there is a possibility that, there could have been many land bridges between continents through which the dinosaurs could have migrated to various places. Hence, the continents did not move; it is only the animals which moved from one place to another. When the land rises, the sea recedes in that area and using the land that is visible, the animals move from one continent to another.</span> </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">If continents do not move, how do earthquakes occur? Earthquakes occur only due to the rising of the land from below the sea above sea level. The fossils of sea animals that are found on thousands of feet high mountains including the Everest are the best examples for this. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>the formation of grand canyon.</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The Grand Canyon is a structure, formed by layers of rocky plates is one of the wonders of the world and was formed below the sea and has risen up.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">In the beginning when the earth was a planet made of molten rock, the upper layers slowly cooled and in different layers sedimentary rocks were formed. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">During very cold season, pipes that bring drinking water burst due to the freezing of the water inside them. It is because when water freezes, it expands and takes up more space. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">In the same way when the molten rock cools, its thickness increases. Moreover, as the density of the rocks is lesser than the molten rock, they rise upwards.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">At the same time, they expand and occupy more area. The Grand Canyon is formed by such sedimentary rocks which rose up and expanded.. Below the sea at 3000 meters depth and in the center of the sea also, structures like the Grand Canyon are found.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;">The Grand Canyon in North America has in it the fossils of Trilobite, sea shells<b><span style="color: red;"> </span></b><span style="color: black;">and snails, which shows us that this land surface of the Grand Canyon has risen from below the sea. </span></span></span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">When a part of the land rises, there are land slides in the surrounding areas in which the living things of the sea get buried. Later, when these portions of the land rise above the sea level, due to land slides the fossils get exposed. </span></span></span><span style="color: black;"><span style="color: black;"> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black; font-size: 14pt;"><strong><u>Tremors on the Moon</u></strong></span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">One more proof for stating that earth quakes occur due to the rising of the land are the tremors that occur on the moon. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">There are no continents on the moon. But, there are mountains, elevations and craters on the moon. Moreover moon quakes occur on the moon. Stating that the movement of the land only causes quakes is incorrect, because there are no continents on the moon. Hence, the rising of the land is the primary cause for earthquakes to occur. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Mountains formed by sedimentary rocks. Valleys and rocks are found on the planet, Mars too. But, there is no water in Mars. The truth that we understand from this is that, these sedimentary rocks are not formed by deposits of sediments. Instead, they have been formed by the gradual cooling of the molten material inside the earth and rise upwards. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Moreover, Cape Town which is in the southern end of South Africa , has on its flat </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Mountains along the sea shore, numerous fossils of sea animals. All over the world, there are around 30 thousand mountains below the sea. Below the Pacific Ocean , there are many flat surfaced mountains called Guyatts<b><span style="color: red;">.</span></b> So, the mountains and their surrounding land areas have only risen above the surface of the sea. Mountains are not formed due to the collision of two land areas. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<u><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Guyatts </span></u> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">Below the sea also there are many flat surfaced mountains. These are called Guyatts<b><span style="color: red;">. </span></b>The important thing is that, below the Pacific Ocean , there are thousands of Guyatts<b><span style="color: red;">.. </span></b>So, when the molten rock gradually cools and hardens inside the earth, rocky plates are formed in different layers which rise upwards and form the flat surfaced mountains below the sea. Later when the surrounding land also rose upwards as continents, flat surfaced mountains are found above the land too. </span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><strong>Tibet plateau challenges the view that continents are moving</strong> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The upper part of the earth is formed by layers of rocks. On an average, these rocks are of 35 kilo meters height. These rocky plates keep moving. The broad belief is that, while moving, if they rub against each other, earthquakes occur and if two plates directly collide with each other mountains are formed.</span></span><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">The best proof shown by most of the researchers for this is that, India had moved northwest and collided with Asia, which resulted in the formation of the Himalayas and Tibet plateau. But, below Tibet plateau</span><b><span style="color: red;"> </span></b><span style="color: black;">for about 70 kilo meters, there are many layers of rock.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">When two bread slices are made to collide with each other, though the place where they are joined together rises up, the height of the bread slices will remain the same and does not change. But the height of the rocky plates found below the Tibet plateau is twice the height of the rocky plates found in other areas.</span> </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;">The height of the Tibet the earth and the rocky plates below the water are the same. So the molten rock inside the earth has only cooled and formed rocky plates which have risen above the sea level. And so, it proves that, the collision of two rocky plates has not formed Tibet plateau. </span></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="color: black;"><span style="font-size: small;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif;"><span style="color: black;">Another proof for Tibet rising from below the sea is the unearthing of the bones of a dolphin shaped lizard called </span><b>Ichthyosaurus</b><span style="color: black;"> which lived in the sea 100 million years ago at a place known as </span><b>Dingiri</b><span style="color: black;"> at Tibet . This place is 16 thousand feet above sea level.</span></span></span></span><span style="color: black;"><span style="color: black;"><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span> </span></span><br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"> </span><br />
<hr />
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span> <br />
<div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; text-indent: 0.5in;">
<span style="font-family: courier, monaco, monospace, sans-serif; font-size: small;"></span><br /></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
...</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-33126173565462927012013-08-21T05:36:00.001-07:002013-08-21T05:36:30.411-07:00THE CONTINENTS ARE STATIONARY<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div align="center" class="MsoNormal" style="margin: 0cm 0cm 0pt; text-align: center;">
<b style="mso-bidi-font-weight: normal;"><u><span lang="EN-US" style="font-size: 14pt; line-height: 115%;"><span style="font-family: Calibri;">THE CONTINENTS ARE STATIONARY<o:p></o:p></span></span></u></b></div>
<br />
<div align="center" class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: center;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span lang="EN-US"><span style="font-family: Calibri;">Scientist G. Ponmudi<o:p></o:p></span></span></b></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">The geologists
believe that currently there is a continuous formation of new sea floor in the
volcanic range under the sea in the oceanic region between the continents,
which is drifting in the opposite directions causing the continents also to drift
apart in the opposite directions along with the ocean floor. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">The geologists
are also of the opinion that when the continents drift along with the ocean
floor, friction is caused between the rocky areas and earthquakes are caused. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">The geologists
explain that in a similar way, when one rocky plate beneath another rocky plate
moves scraping against the one above, it causes the upper rocky plate to rise suddenly
and this gives rise to tsunami waves.</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">However, it has
been found out through various sources that the ocean floor and the continents
are stationary. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Particularly, on
the basis of non-occurrence of earthquakes between the continents, it is known
that the ocean floor and the continents are stationary. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US">Presently, it is
believed that in the central part of a volcanic range formed with a distance of
thousands of kilometers towards north – south direction under the Atlantic
Ocean, </span><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;">magma rises from under the earth, cools down and solidifies
to form a new ocean crust.</span><span lang="EN-US"> </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Similarly, it is
also believed that when magma enters the same area again, it shifts the old
rocks of the ocean floor formed in that area in opposite directions and a new ocean
floor is formed in the center. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">It is explained
that this process is continuous which causes the formation of a new ocean floor
in the mid-ridge of the Atlantic Ocean, moving apart in the east and west
directions and causing the two continents on either side of the Atlantic Ocean
to drift apart in the opposite east and west directions along with the ocean
floor.<span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Specifically, it
is believed that a new ocean floor is being formed in the oceanic mountain
range in the northern sphere of the earth and this ocean floor is drifting
towards east and westward directions, and the North American continent is said
to be drifting towards west along with the westward ocean floor and the
European and Asian continents are moving towards east along with the eastward ocean
floor.</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">In the same way,
it is believed that a new ocean floor is being formed in the volcanic mountain
range in the southern sphere of the earth and this ocean floor is drifting
apart towards north western and north eastern directions, and the South
American continent is said to be drifting towards north west along with the
ocean floor that is said to be drifting towards north western direction and the
African continent is moving towards north east along with the ocean floor that
is said to be drifting towards north eastern direction.</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Actually, if the
North American continent has been drifting towards west along with the newly
formed ocean floor which is drifting towards west and the South American
continent has been drifting towards north-west along with the ocean floor
formed in the center of the Atlantic Ocean which is drifting towards
north-west, earthquakes should be continuously caused in the ocean floor region
between these two continents spreading up to the central part of the Atlantic
Ocean. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">But, it has been
found through the seismograph drawn on the places where earthquakes have
occurred globally, that no such continuous earthquakes have been caused in the
ocean floor region between these two continents. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">The geologists
of NASA, the leading scientific research center of America, prepared a
graphical representation of the places world-wide where a total of 3,58,214 earthquakes
occurred during the past 35 years from the year 1963 to 1998. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">This global
level graph had not recorded any continuous earthquakes from the ocean region
between the North American continent and the South American continent up to the
central part of the Atlantic Ocean. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Hence, on the
basis of the absence of continuous earthquakes between these two continents, it
has been proved with concrete evidence that the ocean floor between these two
continents and the continents are stationary. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">This renders the
explanation of the geologists baseless which states that that a new ocean floor
is being formed in the center of the Atlantic Ocean which is drifting in
opposite directions causing the continents also to drift along with the ocean
floor and as a result earthquakes are caused by the scraping of the rocky areas
with one another. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;">It is believed
that prior to breaking up and drifting to their present locations, all the seven
continents had at one time formed a single<span class="apple-converted-space"> </span></span><span lang="EN-US"><a href="http://en.wikipedia.org/wiki/Supercontinent" title="Supercontinent"><span style="background: white; color: #0b0080; mso-bidi-font-family: Arial;">supercontinent</span></a></span><span class="apple-converted-space"><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;"> </span></span><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;">which was
called Pangaea and later the hot magma from beneath the Pangaea supercontinent
gushed to the top, cooled and solidified, bent and went into the earth due to
its weight and hence the magma under the Pangaea supercontinent rotated like
wheels in the opposite directions causing the Pangaea super continent to break
up into two, forming the north supercontinent of Laurasia in the northern
region and the south supercontinent of Gondwana in the southern region. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US">Similarly, it is
believed that due to the cyclical motion of the magma in the opposite
directions under the </span><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;">north continent of Laurasia, the continent of
Laurasia was also split into two and North American continent was formed in the
north and in the same way, the Eurasian continent was formed in the east which
includes the continents of Europe and Asia.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">It is explained
that at present due to the cyclical movement of the magma in the central region
of the Atlantic Ocean, a new ocean floor is being formed which is drifting
apart in opposite directions and hence the continents on either side of the
Atlantic Ocean are also drifting away along with the ocean floor. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Similarly, it is
believed that due to the cyclical movement of the magma beneath the southern
part of the continent of Gondwana, the continent of Gondwana was also split and
the Antarctic continent was formed in the centre, surrounded by the continents
of South America, Africa, India and Australia.<span style="mso-spacerun: yes;">
</span></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Even today, it
is believed that the magma is rotating like wheels around the continent of
Antarctica which has resulted in the formation of a new ocean floor and this is
drifting apart towards northern region and southern region. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">It is also
believed that this has resulted in the movement of the continent of South
America towards north-west direction and the movement of the African continent
towards north-east direction, and similarly a hundred million years ago, India
and Australia were joined together with the continent of Antarctica. Later they
were separated, started to move in the north-eastward direction and reached
their present locations.</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">This is a total
misconception.</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US">The reason is
the continent of Antarctica lies in close proximity to the South Pole region.
In this position, the ocean floor formed around the Antarctic continent or in
its smaller </span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;">circumference</span><span lang="EN-US"> area cannot move towards the northern region, viz. an area with a </span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;">circumference</span><span lang="EN-US"> area <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>and fill up that space. <span style="mso-spacerun: yes;"> </span></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">In the same way,
the explanation that a new ocean floor is formed around the Antarctic
continent, viz. the region with a wider outer ring is moving towards the
Antarctic continent located in the region with a narrow inner ring is also
totally wrong. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">This is because,
if the new ocean floor which is formed in the wider outer ring moves towards
the region with a narrow inner ring, there will be tension between the rocks in
the sea floor and they will be crushed. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Hence it is
entirely wrong to reiterate that a new ocean floor is formed around the
Antarctic continent and they are drifting apart in opposite directions, which
is causing the continents also to drift apart. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US">More over, it is
stated that hundred million years ago, India and Australia were joined together
and stuck to the continent of Antarctica and later </span><span lang="EN-US" style="background: white; color: black; mso-bidi-font-family: Arial;">began to
separate from Antarctica and moved north-east direction reaching the current
location. Even today these two continents are said to be moving towards<span class="apple-converted-space"> </span>north-east direction. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">If India and
Australia which were together hundred million years ago, had drifted apart for
five thousand kilometers as they are located today, these two continents must
have been moving by staying on two separate ocean floors. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">If such a
drifting had taken place, a series of earthquakes would have been caused up to
the northern part of the continent of Antarctica for thousands of miles due to
the scraping of the rocks in the ocean floor between these two continents. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">But, no such series
of earthquakes was recorded between those two continents in the global seismograph
published by the geologists of NASA. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">More over, no
oceanic volcanic mountain range had formed between these two continents. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Hence, there is
no basic evidence to state that these two continents had drifted apart in
opposite directions. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Thus, it is
proved with the concrete evidence on the basis of non-occurrence of a series of
earthquakes in the ocean region between the continents of India and Australia
that the ocean floor in this region is continuous and these two continents are
stationary. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">But, contrary to
this fact, it is believed that hundred million years ago, the Indian land
region was attached to the continent of Antarctica, then it was separated and
it started moving in the north-eastern direction and now sixty five million
years ago, the land region of India was an island continent and due to its
collision with the Asian continent, the mid-land area rose up forming the
Himalayan mountains. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">More over, it is
wrongly stated that earthquakes are caused in the Himalayan region on account
of the drifting of the land region of India which is pressing the Asian
continent. </span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US"><span style="font-family: Calibri;">Likewise, it is
wrongly reiterated that the Indian Ocean floor is also moving towards
north-eastern direction and bending downwards, it finally goes into the earth
in the southern region of Sumatra and Java Islands which has caused the
formation of long and narrow canal-like pits in the ocean floor of this region.
</span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">More over, the geologists are of the wrong
notion that due to the scraping movement of the Indian Ocean with the earth
near the Sumatra and Java Islands, the pressure between the tectonic plates
found in this area increases and gets suddenly released causing earthquakes
when the Indian Ocean floor enters the earth and at the same time the plate of
the Asian continent rises upwards and gives rise to tsunami waves. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">In addition, the geologists are also
providing a pseudo theory that the ocean floor which entered the earth near the
Sumatra and Java Islands was melted by the intense heat beneath the surface of
the earth into light magma and when this rose up and gushed out of the land
region of the Sumatra and Java Islands, it formed into a volcanic range.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The geologists categorically state that for
the past one hundred million years a new ocean floor is being formed around the
continent of Antarctica which is drifting away in opposite directions towards
north and south and the ocean floor which is drifting towards the northern
region finally penetrates into the earth near the Sumatra and Java Islands. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">But, it is significant to note that no
geologist has come forward till date to explain what happens to the ocean floor
which is said to be formed around the wider outer ring of the continent of
Antarctica for the past one hundred million years and moving towards the
continent of Antarctica. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The reason is, no canal-like long and narrow
strips of pits had formed in the ocean floor around the continent of
Antarctica. Likewise, no volcanoes had emerged around the continent of
Antarctica. Mainly, it has been found out through the global seismograph that
no continuous tremors have occurred around the continent of Antarctica.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence the explanations offered by the
geologists currently about the formation of mountains, volcanoes and pits in
the ocean floor are baseless imaginations with no factual evidence and are far
from truth.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, the fact that the Indian Ocean
floor is stationary has also been proved by the two volcanic ranges formed in
the western and eastern regions of India. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">To be specific, the Lakshadweep Islands and
the Diego Garcia Islands formed in the Arabian Sea region have emerged in a curved
path. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Likewise, an ocean floor volcanic range has
also formed in a straight line in the eastern part of India and underneath the
Bay of Bengal. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">This ocean floor is made up of rocks to the
extent of approximately ten kilometers in depth. Under these conditions, the
magma beneath the ocean floor penetrates the rocky terrain of the ocean floor
and emerges as volcanoes above the ocean floor. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Considering that the volcanoes are formed on
the ocean floor in this way, if the Indian Ocean floor had actually been moving
towards north, the two volcanic mountain ranges formed under the ocean on the
ocean floor on either side of India must have been formed parallel to each
other. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">But, the fact that two volcanic mountain
ranges formed on the ocean floor of the western and eastern regions of India
are not parallel to each other goes to prove that the Indian Ocean floor and
the Indian continent are stationary. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">In the same way, along with the ocean floor
that has formed in the volcanic range situated in the mid-region of the
Atlantic Ocean and said to be moving towards “East”, it is believed to be
moving towards “North-eastern” direction. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Under these conditions, the Canary volcanic
mountain range formed from the ocean floor of the Atlantic in the western
region of the African continent and extending up to the top region of the
African continent is formed from the western to eastern direction. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Accordingly, it is construed that the
continent of Africa is moving from West to East. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">But the Cameroon volcanic mountain range
formed in a chain in the region of Gulf of Guinea from the ocean floor of
Atlantic to the top region of the continent of Africa is formed from west to
east. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">As per this theory, it is construed that the
continent of Africa is moving from south western to north eastern direction.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">How can a continent move in two different
directions at the same time? <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, by the uneven formation of the
volcanic mountain range in the northern part of the continent of Africa, it has
been proved with evidence that the ocean floor of Atlantic and the continent of
Africa are stationary.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;">Similarly, the Anahim volcanic chain,
Stikine volcanic belt and Wells Gray volcanic field formed during the same
period in the north western part of North America have not formed in </span>parallel<span class="st"><b><span lang="EN-US" style="color: #222222; font-family: "Arial","sans-serif";"> </span></b></span><span class="st"><span lang="EN-US" style="color: #222222; font-family: "Arial","sans-serif";">manner.
</span></span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">This goes to
prove that the continent of North America is also stationary. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;">Also, the Hawaii volcanic mountain range, Line
volcanic range and Lewisville volcanic mountain range formed in the Pacific
Ocean region have also not formed in </span>parallel<span class="st"><b><span lang="EN-US" style="color: #222222; font-family: "Arial","sans-serif";"> </span></b></span><span class="st"><span lang="EN-US" style="color: #222222; font-family: "Arial","sans-serif";">manner </span></span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">and this proves that the ocean
floor of the Pacific is also stationary.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Under these circumstances, in the south-east
region of the Pacific Ocean, specifically on the western side of the continent
of South America, a new ocean floor is believed to have been formed in the
central part of an oceanic volcanic mountain range called “East Pacific Oceanic
Ridge” (just as mentioned for the Atlantic Ocean region) and this ocean floor
is said to be moving towards north-western and south- eastern directions, of
which the ocean floor moving towards north-west finally penetrates into the
earth near Japan and Philippines Islands, then melts into magma and gushes out
of the earth crust and takes the form of volcanoes. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">In a similar way, it is believed that the
ocean floor which is said to have been formed in the East Pacific Oceanic
volcanic mountain range and moving toward the south-western direction, finally
penetrates into the earth in the western side of the South American continent,
then melts into magma and gushes out of the earth crust and forms a volcanic
mountain range in the Andes Mountain region on top of that continent.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">It is also a wrong belief that the reason
for the formation of ocean trenches in the ocean floor near the islands of
Philippines and Japan and the continent of South America is the penetration of
the ocean floor into the earth in those regions and similarly, the reason for
the frequent earthquakes and tsunamis in the islands of Philippines and Japan
and in the western part of the continent of South America is the scraping
movement of the ocean floor into the earth in those areas. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The geologists specifically believe that a
new ocean floor is quickly forming in the area of East Pacific Oceanic Ridge
and is moving. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">At the same time, a long and narrow pit has
been formed on the ocean floor near Tonga Island also. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">On the basis of this, it is explained that a
new ocean floor is formed in the northern region of the continent of Antarctica
and this ocean floor is drifting apart in opposite directions of north- west
and south –east and the ocean floor that is drifting towards north – west is
going under the earth near the Tonga Island. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, while a new ocean floor formed in
the northern region of the continent of Antarctica is moving towards the north-
western direction, if a new ocean floor formed in the East Pacific Oceanic
Ridge is also moving towards the north- western direction, this should cause
scraping between the ocean floor rocks which are moving separately, thereby
giving rise to a chain of earthquakes up to the northern region of the
continent of Antarctica. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">But, no continuous earthquakes in the ocean
floor region between the East Pacific Oceanic Ridge area and Tonga region have
been recorded in the global seismograph published by the NASA. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it is proved beyond doubt that no
separate ocean floors are formed and are moving and the fact remains that the
ocean floor is stationary. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">More importantly, while the geologists
explained the formation of the ocean trenches in the eastern side of
Philippines, Japan, Tonga and the western side of the continent of South
America as a result of the movement of ocean floor underneath the earth in
those areas, it puzzling why they have not come forward to answer questions
like what happens to the ocean floor which is drifting towards the continent of
Antarctica, why ocean trenches and volcanoes have not been formed in the ocean
floor around the continent of Antarctica, and why continuous earthquakes are
not occurring around the continent of Antarctica.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, from the fact that absence of ocean
trenches in the ocean floor around the continent of Antarctica, absence of volcanoes
in the ocean floor around the continent of Antarctica and absence of continuous
earthquakes around the continent of Antarctica, it is proved that the ocean
floor around the continent of Antarctica and similarly the continents that
surround the continent of Antarctica are stationary.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Thus the theory of the formation of new
ocean floor in the oceanic volcanic mountain range which is formed in the ocean
region between the continents and its drifting apart in opposite directions is
totally baseless and farce. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">In short, on the basis of the absence of
continuous earthquakes in the Atlantic Ocean region between the American
continents, the Indian Ocean region between India and Australia and the Pacific
Ocean region, and the formation of unparallel <span style="mso-spacerun: yes;"> </span>volcanic mountain range on the ocean floor, it
is proved beyond doubt that the ocean floor as well as the continents are
stationary. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">In addition, it was found out through the
global seismograph published by the NASA that there were continuous earthquakes
in the region where the volcanic mountain range has been formed underneath the
ocean. Hence, it has been proved through the evidence of the global seismograph
that the earthquakes are caused only by the eruption of volcanoes under the
earth. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Likewise, the satellite photographs which
capture the deformation pattern of the ground <span style="mso-spacerun: yes;"> </span>with precision have also revealed the
occurrence of earthquakes and tsunamis due to the eruption of underground
volcanoes. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">To be specific, three volcanoes called “The
Three Sisters” have emerged in the North American state of Oregon. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The seismologists were monitoring this
volcanic region through a satellite which recorded the variations in the floor
level with precision. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">When satellite was flying over the specific
volcano, radio waves were sent from the satellite to the ground.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">When those radio waves returned to the
satellite after touching the uneven surface of the ground, the sophisticated
devices in the satellite recorded the uneven surface of the ground in the form
of colors like blue, red and yellow. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Likewise, when the satellite flew over the
same volcano again, the rugged terrain was recorded through radio waves once
again. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">When the recordings of the uneven surface of
the volcano taken at various points of time by the satellite is compiled as one
single picture with the help of a computer, even a minute change that might
have<span style="mso-spacerun: yes;"> </span>occurred in the volcanic region
during the intermediate period is also recorded with precision. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">For example, this method is capable of
detecting even a field that had been ploughed during this time. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Employing the same method, when the
differences in the ground level of the volcanic region of the state of Oregon
was recorded, it was found that the ground in that region had risen to a height
of ten centimeters in an area of six hundred kilometers circumference. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Many seismologists visited this area which
was called “Oregon Bulge” and conducted a field study and they informed that
there was an accumulation of magma seven kilometer deep under the surface of
the earth in the region which could fill twenty thousand swimming pools and the
formation of a new volcano is underway deep down in that area. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">At this juncture, in the year 2004, in a
single month, more than three hundred and fifty mild earthquakes occurred in
the central part of the bulge alone. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it is proved with evidence that the earthquakes
are caused only by the volcanic eruptions under the earth. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Rugged Rings formed
around volcanoes<o:p></o:p></span></span></b></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">When a research team headed by Dr. Juliet
Biggs, a seismologist of Miami University studied four volcanoes in the eastern
region of Africa through a satellite that recorded the ground level variations
by using radio waves, it was found that rugged rings of a few centimeter heights
had formed around these volcanoes in a circumference extending to many
kilometers. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Dr. Juliet Biggs cited the upward and
downward movement of the volcano as the reason for the formation of these
rugged structures around the volcano.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Particularly, when a volcano rises due to
the accumulation of magma underneath, the ground that surrounds the volcano
also tends to rise a few centimeters along with the volcano. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, when the volcano settles down
after the gases and steam are expelled, the land area that had risen along with
it in a circular form also settles down and this causes rings of scar-like ups
and downs around the volcano. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">During the same period, in 2009 when a
severe earthquake occurred in L’Aquila situated in the central Italy, the
satellite that recorded the ground level variations, captured the rings of ups
and downs with a height and depth of a few centimeters that were similar to
those formed around the epicenter of the earthquake extending to a
circumference of several kilometers. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">More over, a scientist known as </span></span><span class="st"><span lang="EN-US" style="color: #222222; font-family: "Arial","sans-serif";">Giampaolo
Giuliani who is </span></span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">engaged in a research for predicting earthquakes beforehand, had discovered
the emission of a radioactive gas called Radon from below the earth in that earthquake
region a week before the occurrence of the earthquake.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Most importantly, Radon is a gas emitted by
volcanoes. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it has been proved with evidence that
the earthquake in L’Aquila was caused only by the volcanic eruption under the
earth. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, on 11.03.2011, tsunami occurred
due to the earthquake under the sea near the Japanese island Honshu. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">At that time, a satellite that recorded the
ground level variations had captured pictures of rings with lots of ups and
downs of a few centimeter height formed around the epicenter of the earthquake
that occurred in the Honshu island, in a circumference extending to many
kilometers.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">It was also recorded in the pictures of the
satellite that three days before the occurrence of the earthquake, the
temperature of the upper layer of the atmosphere just above the epicenter region
of the earthquake was abnormally high. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;">A scientist of NASA study center, </span><span lang="EN" style="mso-ansi-language: EN;">Dimitar Ouzounov</span><span lang="EN" style="font-size: 14.5pt; line-height: 115%; mso-ansi-language: EN;"> </span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;">had stated that this may be due
to the emission of Radon gas in that area from beneath the earth which has
radioactive properties. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span style="font-family: Calibri;"><span lang="EN" style="mso-ansi-language: EN;">Dimitar Ouzounov</span><span lang="EN" style="font-size: 14.5pt; line-height: 115%; mso-ansi-language: EN;"> </span><span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;">had explained that electrons were released from the molecules found in
the air due to radiation caused by the Radon gas and these electrons must have
condensed to form an electron cloud. As the ions formed out of this had the
tendency to absorb water and this reaction is a heat emitting reaction, it
might have caused the temperature of the upper layer of the atmosphere to rise abnormally.
<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">More over, it was also recorded in the
pictures of the satellite that after the earthquake, the temperature of the top
layer of atmosphere in the Honshu island had returned to it normal level. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, there is an evidential proof that the
earthquake and tsunami in Honshu island were caused only by the eruption of a volcano
below the surface of the earth. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, when an earthquake and tsunami
rocked the Haiti Island on 12.01.2010, a satellite that recorded the ground
level variations had captured pictures of rings with lots of ups and downs of a
few centimeter height formed around the center of the earthquake that occurred
in the Haiti island, in a circumference extending to many kilometers.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">After the earthquake, the seashore of Haiti
Island had risen above the sea level. This made the sea flora in that region
clearly visible.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">So, it was proved with evidence that the
earthquake and tsunami in Haiti island were caused only by the eruption and
uplift of a volcano below the surface of the earth.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Similarly, the Sumatra Island of Indonesia
experienced tsunami due to the earthquake that occurred under the ocean on 26.12.2004.
<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">After the earthquake, the northern region of
simeulue Island, situated near the Island of Sumatra, had risen high up to 4
feet from the sea level.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">This had made visible the flora submerged
under the sea in that area. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Under similar conditions, when an earthquake
shook the central part of the same simeulue Island on 20.02.2008, a satellite
that recorded the ground level variations had captured pictures of rings with
lots of ups and downs of a fifty one centimeter high, formed around the epicenter
of the earthquake that occurred in the simeulue island, in a circumference
extending to many kilometers.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it was proved with evidence that the
South Asian tsunami was caused only by the eruption of a volcano below the
surface of the earth.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">On the basis of many evidences it has been
proved that the continents are stationary. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Along with these facts, it is also proved by
the fossils of sea creatures which are found widespread everywhere, including
the mountain regions of these continents that the continents have risen above
the sea level from below the ocean. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The steep rising of the island and
continents from the spherical surface of the earth has caused long and narrow trenches
on the floor of the ocean near the islands on the earth’s surface and also near
the continents. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Likewise, on the basis of the fossils of
dinosaurs weighing thousands of kilograms found in the continents of Australia
and Antarctica including the islands of Madagascar, New Zealand, Cuba, it is
proved that the sea level was low by thousands of feet during the period of
Dinosaurs and later rose up. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The reason for the rising of sea level is water
that coming from the submarine hot springs. <span style="mso-spacerun: yes;"> </span>the flow of water into the sea that is being
generated by the condensation of the steam from the volcanoes. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Meanwhile, in the oceanic region of Norway,
when the sea floor was drilled for oil at two kilometer depth from the sea
level, the fossils of plateosaurus, a dinosaur which have lived two hundred
million years ago in Europe, were found in the rock formations. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Likewise, in the Indian Ocean also, when a
rock sample of kerguelen plateau which is submerged under a depth of two
kilometers was drilled to find out the age of the rock, it was discovered that
these rocks had formed ninety million years ago. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">More over, it was discovered that burnt
parts of trees and pollen grains were also embedded in these rock samples. <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it is proved with evidence that as
the sea level was low to the extent of two kilometers during the period of dinosaurs,
there were land routes and connections along with forests between the
continents and islands, and only this had enabled the dinosaurs to migrate to
various continents and islands.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Specifically, it is also proved by the
discovery of fossils of dinosaurs in the continent of Antarctica which is
snow-covered up to a height of several kilometers, that tropical climate with
thick forests must have existed in the continent of Antarctica during the
period when dinosaurs lived. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Hence, it is clearly proved that the rising
of the sea level up to two kilometers and the increase of the ocean area have
led to the cooling of the temperature of earth and consequently the formation
of ice in the polar regions.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">It is also proved that when the temperature
of the earth fell, it caused the destruction of vegetation on which the
dinosaurs were thriving, leading to their extinction. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Even today, the hot springs beneath the
ocean are responsible for the increase in the sea level. The earth is actually
being cooled by the rising of the sea level and also the increase in the area
of the oceans. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Additionally, since the earth’s axis is
tilted, the Polar Regions are now experiencing day for four months and night
for four months continuously.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The vegetation in this region would not have
survived by photosynthesis if there was night for four continuous months and
also dense forests would not have emerged in the Polar Regions. So, the tilt in
the earth’s axis must have taken place only after the period of dinosaurs. Because
fossils of mammals has also been recovered from the polar region which lived
after the extinction of the dinosaurs.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">The crossing of a dwarf planet in close
proximity to earth may be responsible for the tilt in the earth’s axis. The
same dwarf planet may be revolving around the sun even now or even planets like
Mars, Mercury, Venus etc. may be responsible for the same. <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Thanks <o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><span style="font-family: Calibri;">Scientist.G.Ponmudi.<o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal" style="margin: 0cm 0cm 10pt; text-align: justify;">
<span lang="EN-US" style="mso-bidi-font-family: Latha;"><o:p><span style="font-family: Calibri;"> </span></o:p></span></div>
</div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-85916630871893435922012-10-27T13:50:00.000-07:002012-10-27T13:50:02.689-07:002009 L'Aquila earthquake was formed by underground volcanic explosion.-Scientist.Ganapathy.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>2009 L'Aquila earthquake was formed by underground volcanic explosion.-Scientist.Ganapathy.</strong><br />
<span><span>Through satellite images circular pattern of surface deformation formed around active volcanoes due to rising and falling of land surface around the volcano also formed around the epicentre of the </span></span><span><span>earthquake that shook the L'Aquila city in central </span>Italy in the year </span><span><span>2009 indicate that the earthquake was formed by underground volcanic explosion.</span></span><br />
<span> </span><br />
<span><span>This is further supported by the emission of the volcanic gas radon which has been detected prior to the earthquake proved that the circular pattern of surface deformation was formed due to volcanic activity.</span></span></div>
Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-91466009251818049032012-02-28T23:22:00.002-08:002012-02-28T23:25:44.982-08:00கண்டங்களுக்கு இடையில் காணப் படும் தொண்மைப் பாறைகள் மூலம் கண்டங்கள் நிலையாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.பூமி தோன்றிய காலத்தில் உருவான பாறைத் தீவுகள் மற்றும் எரிமலைப் பாறைப் படிவுகள் கண்டங்களுக்கு இடையில் காணப் படுவதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கண்டங்கள் தற்பொழுது உள்ள இடத்திலேயே நிலையாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-54105860328948635752012-02-28T23:16:00.000-08:002012-02-28T23:17:54.072-08:00continents were in the same place from the formation of the continents.scientist.G.ponmudi.The primordial rock and rock deposits that are found between the continents, proved that the continents were in the same place from the formation of the continents.Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-58113925343395363332011-11-19T05:41:00.001-08:002011-11-19T05:44:50.008-08:00our earth is sinking-scientist.g.ponmudi.image courtesy Wikipedia<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3NG2E2OqpLml4SJ_yrxW3E1AMTYm04WlNxlKaGpUl2W_uvVT7RRQONDOm-yYpBL9O9U906VA6o1vrxrkj1-kinfnZ1T7nf9ik0wIb0RXaBinQMm70-Vyw6pgPWdbyB36_dTBQO0S0MQs/s1600/mhyp1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3NG2E2OqpLml4SJ_yrxW3E1AMTYm04WlNxlKaGpUl2W_uvVT7RRQONDOm-yYpBL9O9U906VA6o1vrxrkj1-kinfnZ1T7nf9ik0wIb0RXaBinQMm70-Vyw6pgPWdbyB36_dTBQO0S0MQs/s400/mhyp1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676701894722444530" /></a><br /><br /><span style="font-weight:bold;">F</span>ossils of 50 Dwarf hippopotamus have been discovered on the Madagascar Island.this animal species evolved on the African continent only twenty million years ago.<br /><br /> <br /><br />This 400 kilogram African origin animal cannot swim on the water surface and it cannot even float on water surface due to its heavy weight.<br /><br /> <br /><br />Therefore this animal cannot reach the Madagascar Island by means of swimming or hitching a ride on floating vegetation.<br /><br /> <br /><br />Therefore the discovery of the fossils of the dwarf hippopotamus on the island of Madagascar which is 400 kilometer away from the main land and separated by two kilometer depth of sea water proved the ancient low sea level and land connection between the two land masses.<br /><br /> <br /><br />This also proved that the origin of sea and the rising of sea level is caused by the hydrothermal water.<br /><br /> <br /><br />This also proved the rising of land masses.<br /><br /> <br /><br />Scientist.g.ponmudi.Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-9903797252641123312011-10-27T13:52:00.001-07:002011-11-09T09:54:12.038-08:00The origin of the British Isles are volcanic -scientist.g.ponmudiThe geological resemblance of the Isabella Island of the Galapagos and the British Isles indicates that the origin of the British Isles are volcanic -scientist.g.ponmudi.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1PIvioTI2-zUWzpT7w2uU_yDHVDnWcjzgK9ZQ9E64Xpp4SkA85R0bym0mzmhQguHiqZZd1zcV0rhP2ILXo69rGjauhg-e0NPl9UPnhFKExL3y_b2EyCqPQZzEOTLqxnA6sF_sMnWMvCQ/s1600/gi4.jpg" imageanchor="1" style=""><img border="0" height="188" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1PIvioTI2-zUWzpT7w2uU_yDHVDnWcjzgK9ZQ9E64Xpp4SkA85R0bym0mzmhQguHiqZZd1zcV0rhP2ILXo69rGjauhg-e0NPl9UPnhFKExL3y_b2EyCqPQZzEOTLqxnA6sF_sMnWMvCQ/s320/gi4.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG4v9B3DZjzOYU07Z769M4smqu2XDTTi9O_8CbDMsYC1BpSU_g9yeY8PLq39KuOWgRX35PASVwd74ENJHTt2cF6I5WTmrNlgImPL7m4LqMbAYjiGzAQum9jGGu3GGQhwpowKljJBLxcas/s1600/bi2.gif" imageanchor="1" style=""><img border="0" height="320" width="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG4v9B3DZjzOYU07Z769M4smqu2XDTTi9O_8CbDMsYC1BpSU_g9yeY8PLq39KuOWgRX35PASVwd74ENJHTt2cF6I5WTmrNlgImPL7m4LqMbAYjiGzAQum9jGGu3GGQhwpowKljJBLxcas/s320/bi2.gif" /></a></div>Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-14286662775397267512011-09-07T11:55:00.000-07:002011-09-07T11:59:16.255-07:00THE ORIGIN OF MOUNTAIN-SCIENTIST.G.PONMUDI.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYMzu3R-Zyh2ycWAm_zutAkJSGn2ybMnHBj-xheEoEnqXxifp_kgLA7BYG2GpdR14eDwEeNmv8w7Ds8FGQ6hOhhtZt1Vn5U1clQwCGN_hAp3pFx3dAwKeO8pxzYQf3ZH8X1fNOh66LBs/s1600/ZAGROS-NASA.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYMzu3R-Zyh2ycWAm_zutAkJSGn2ybMnHBj-xheEoEnqXxifp_kgLA7BYG2GpdR14eDwEeNmv8w7Ds8FGQ6hOhhtZt1Vn5U1clQwCGN_hAp3pFx3dAwKeO8pxzYQf3ZH8X1fNOh66LBs/s320/ZAGROS-NASA.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5649694009946565218" /></a><br /><br />This astronaut photograph of the southwestern edge of the Zagros mountain belt includes another common feature of the region—a salt dome (Kuh-e-Namak or “mountain of salt” in Farsi). Thick layers of minerals such as halite (common table salt) typically accumulate in closed basins during alternating wet and dry climatic conditions.IMAGE.CREDIT-NASA<br /><br /><span style="font-weight:bold;">All mountains are formed by the volcanic activity.scientist.g.ponmudi.</span><br /><br />ACCORDING TO THIS NASA REPORT (REF-1)THE ZAGROS MOUNTAINS IN IRAN WAS FORMED BY THE COLLISION OF THE EURASIAN AND ARABIAN TECTONIC PLATES:THIS REPORT ALSO SAID THAT LAYERS OF SALT HAVE BEEN FOUND ON THE MOUNTAINS.IT SHOULD BE NOTED THAT SALT IS ALSO FOUND ON THE VOLCANIC MOUNTAIN OF ANTARCTICA CALLED AS MOUNT EREBUS.(REF-2)THEREFORE CONTRARY THE NASA REPORT THE ZAGROS MOUNTAINS ALSO FORMED BY THE VOLCANIC ACTIVITY.<br /><br />(REF-1)<br /><br /> http://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=6465<br /><br /> <br />(REF-2)<br />http://www.sciencedirect.com/science/article/pii/S0009254183800059Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5857894207077766386.post-14061886263604850522011-08-29T04:24:00.000-07:002011-08-29T04:33:58.284-07:00upward rising of an underground volcano caused the wenchuan earthquake .scientist.G.Ponmudi.<span style="font-weight:bold;">The satellite image of ground deformation pattern caused by the wenchuan earthquake-2008(fig1) closely resembled the satellite image of the land deformation pattern caused by the uplift of an underground volcano in central US (fig2) indicates that the wenchuan earthquake is caused by the rising of an underground volcano.</span>
<br />
<br />
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM55N8laCJKd-VtegYHIBOkehHeO3S7Wm6156KDE77vU1pPMSEZDw23HPEIc482weeVi5RGJ5DtSTt4-Ue1bN5X74zuVaBoOTShIho0rr-745CvA6VWiNMZENMeaPpp8-dHQ0VPfo7yAE/s1600/bl1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 308px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM55N8laCJKd-VtegYHIBOkehHeO3S7Wm6156KDE77vU1pPMSEZDw23HPEIc482weeVi5RGJ5DtSTt4-Ue1bN5X74zuVaBoOTShIho0rr-745CvA6VWiNMZENMeaPpp8-dHQ0VPfo7yAE/s320/bl1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646237880819772114" /></a>
<br />(fig1)
<br />
<br />Dr Cecile Lasserre from France’s Laboratoire de Geophysique generated ‘interferogram' images, which appear as rainbow-coloured fringe patterns, showing the ground displacement that occurred during and after the earthquake.
<br />
<br />
<br />
<br />
<br />---------------------------------------------------------------------------
<br />
<br />
<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKqeQNSTiZgZCuzi1_VZgRCEvV5xumWTPTQZysWQD0mF9ECi3FPSiHggvnTfbve8V2d0wNSOk90h751_tOrqtyn5UMqphkNDnes3_F5ZmyA7K3gHj37DtSG6boJyHL7UI8vcySEG27OhQ/s1600/bl2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 174px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKqeQNSTiZgZCuzi1_VZgRCEvV5xumWTPTQZysWQD0mF9ECi3FPSiHggvnTfbve8V2d0wNSOk90h751_tOrqtyn5UMqphkNDnes3_F5ZmyA7K3gHj37DtSG6boJyHL7UI8vcySEG27OhQ/s320/bl2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646238374503161362" /></a>
<br />(fig2)
<br />This interferogram provides a map view of ground movements at Yellowstone. Each color contour represents a line of equal uplift relative to the ENVISAT satellite between Sept. 2004 and Aug. 2006. Figure courtesy of C. Wicks, USGS.Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5857894207077766386.post-3121892676775138632011-08-28T23:24:00.000-07:002011-08-28T23:26:54.392-07:00what is the reason for the land slide ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzHeFDEmkwiqidsTtDdXCowtSjaRz1RG1VkMYJ-D4xqCNzo8PEV8YEoiUICQ3InaVVkmkrYY3v5VwK5ZZlz67v-2je5ci2wq4WUGk7uUhyoC7AdaMYAXQ_c0DOmpU9TUQNJ5ZLkwkE6Zg/s1600/anc.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzHeFDEmkwiqidsTtDdXCowtSjaRz1RG1VkMYJ-D4xqCNzo8PEV8YEoiUICQ3InaVVkmkrYY3v5VwK5ZZlz67v-2je5ci2wq4WUGk7uUhyoC7AdaMYAXQ_c0DOmpU9TUQNJ5ZLkwkE6Zg/s320/anc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646160361090631442" /></a>
<br />(Augustine volcano at Cook Inlet, Anchorage.)
<br />Earthquake around the volcano is caused by the rising of semi molten rock.similarly land slide is caused by the upward rising of semi molten rock.Sct.G.Ponmudi. Scientist.G.Ponmudihttp://www.blogger.com/profile/08069011529279546423noreply@blogger.com0